Friday, December 25, 2020

டிசம்பர் மாத அலங்காரங்கள்

 அந்நிய மண்ணில் இருப்பவர்கள் கிறிஸ்துமஸ் சமயத்துல செய்வதெல்லாம் ஒரு ஓவர்ஆக்டிங், சுயவிளம்பரம், இன்னும் என்னன்னவோ பேர் வச்செல்லாம் பகடி வருது.

அடிப்படையில பார்த்தா நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பின்னர் பக்கத்து ப்ளாட்ல இருக்கிறவங்களோட கூட நட்பாக பழகாத நிலைக்கு நம்ம வாழ்க்கையைச் சுருக்கிய பிறகு, கடந்து வந்த பாதை மறந்து போன பிறகு, எல்லாமே ஒரு சுயநலமாகவும் போலித்தனமாகவும் பார்க்க, புரிந்து கொள்ள வாய்ப்புண்டு!

சின்ன ஊரில கிராமத்துல வளர்ந்த போது, ஒருத்தர் வீட்டுல கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு விசேஷம்ன்னா அந்த தெரு முழுவதற்குமே பந்தல் போட்டு தோரணம் கட்டி அந்த தெருவே விழாக்கோலமாக மாறிவிடும். எங்க ஊர்ல ஒருத்தர் வீட்டு பூணலுக்கு கூட அந்த தெருவிலுள்ள அனைவருக்கும் ஒன்னா சமையல் பண்ணி, தெரு மக்களே ஆளுக்கு ஒரு வாளியைத் தூக்கிகிட்டு பரிமாற ஆரம்பிச்சுருவாங்க.

என் நண்பனோட அண்ணனுக்கு பக்கத்து சர்ச்சுல கல்யாணம் நடந்தப்ப, வந்த அனைவருக்கும் இலை போட்டு காலை டிபன் வழங்கியது நானும் இன்னொரு நண்பன் டாக்டர் துவாரக்நாத்தும். 

இதெல்லாம் ஊர் வாழ்க்கையில சகஜம்.

இங்க கிறிஸ்துமஸ்க்கு தெருவெல்லாம் டிசம்பர் மாதம் முதலில் இருந்தே அலங்கரித்து விடுவார்கள். ஒரு சப்டிவிஷனில் 50லிருந்து 200 வீடுகளிருக்கும். அதில் இந்திய வம்சாவளி 10லிருந்து 20 இருந்தா பெருசு! 90 சதவிகித வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் போது, இந்த 5-10 சதவீதம் வேற்று மதம்ன்னு அலங்கரிக்கமாட்டேன்னு சொன்னா, மாலை 5 மணிக்கே இருட்டுகிற ஊரில், மற்ற எல்லா வீடுகளும் பிரகாசமாக இருக்க, உங்கள் வீடு மட்டும் இருளில் இருந்தால் அது எப்படி இருக்கும். வேற்றுமதத்தினர் திட்டமிட்டு பகிஷ்கரிப்பதாக எடுத்துக் கொண்டால் என்ன ஆவது! 

இந்திய இந்துக்களின் முதன்மையான வழிபாடே தீபம் ஏற்றி வழிபடுதல். தீபம் ஏற்றி, விளக்கு ஏற்றி உண்மையாக வழிபடுபவர்கள், கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு சப்டிவிஷனில் (குடியிருப்பில்) குடியிருப்பவர்கள் தன் வீட்டு வாசலில் உள்ள புல்லை சரிவர வெட்டாமல், வீட்டு முன்புறம் பளிச்சென இல்லாமல் mold படிந்து இருந்தால் நமது வீடு மட்டும் அந்த குடியிருப்பில் எவ்வாறு தெரியும். மக்கள் இதை எப்படி பார்ப்பார்கள். home owners associationல கேட்பது அப்புறமிருக்கட்டும்.

குடியிருக்கிற வீடு பிரகாசமாக சுத்தமாகஇருக்கனும், அது வாழ்க்கையில் நல்ல சுவாசம் மட்டுமல்ல ஒரு நல்ல மனநிலையோடு வாழ உதவும்கிறது கூட படிச்சது மறந்து போற அளவுக்கு நகர்புற வாழ்க்கையில் ஒளிந்து கொண்டு தன் சுயத்தை இழந்தவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.

இதை வெறும் peer pressure அல்லது ஊரோடு ஒற்று வாழ்ன்னு கடந்து போவது, தனது மனதில் இன்னும் வெளிச்சம் வரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

அதிகாலையில் சூரியனைக் கும்பிடுவதே இருள் விலகி வெளிச்சம் வந்து உலகைப் பிரகாசமாக்கியதின் குறியீடே சூரிய வந்தனம் செய்வது. ஹோமகுண்டத்தில் வளரும் தீயை வணங்குவதும் அதிலிருந்து வரும் ஒளிப்பிரவாகத்தின் vibrations குறித்தே! 

பனிப்பொழிவு காலத்தில், கடும் குளிர்காலத்தில், சூரியன் சீக்கிரம் மறையும் காலத்தில், வீட்டு வாசலில் அலங்கரிக்கப்படும் அலங்கார மின் விளக்குகளும் நம் வாழ்வு பிரகாசமாக ஒளிர ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு வழக்கப்படி செய்து கொள்ளும் ஒரு வழிபாடே!

புரிந்தவர்கள் வாழ்வினிது!
ओलै सिरिय !

Wednesday, December 23, 2020

துலாபாரம் தடுமாறும் பொழுதில்

 குற்றம் செய்திடல் கொற்றவனின் கருணையுடன்
கருணையின் குற்றம் கொற்றவனின் கையூடல்
மண்ணின் குற்றம் கொற்றவனின் அரியணை!

வாழ்வியல் நீதி கொற்றவனுக்கில்லை
மண்ணின் நீதி மனிதனுக்கில்லை
ஏற்றமும் இறக்கமும் கொற்றவன் அசைவில்!

வழித்தடம் வகுத்தல் கொற்றவனுக்கு அழகு
நீதியும் நேர்மையும் தராசின் நுனியில் தடுமாறின்
கொற்றவன் வகுத்ததே சமணின்றி பாரங்கள்!

மனிதன் வகுக்கும் நீதிபரிபாலனம்
கொற்றவன் கையில் சிக்கிய பூமாலை போல்
உதிரும் மலர்கள் மண்ணின் அவலம்!

துலாபாரம் தடுமாறும் பொழுதில்!

ओलै सिरिय !

Thursday, December 17, 2020

தனிமையில்லை இவ்வுலகில்

அண்ணனுக்கு 60 வயது போன மாதம் பூர்த்தியடைந்தது. பிறந்த தினம் அன்று கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்ன்னு நினைத்தால் வரிசையாக உறவினர்கள் தவறியதில் சாத்தியமில்லாமல் போயிற்று.

அடுத்த மாதம் வருகிற நட்சத்திரத்தில் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நேற்று வாரத்தின் நடுநாளான புதன்கிழமையில் அண்ணன் நட்சத்திரத்தில் வைத்து, வர்ஜீனியாவில் எல்லாம் இனிதாய் நடந்து முடிந்தது.

அண்ணன் அண்ணி சாஸ்திரி தவிர நான் மட்டுமே கலந்து கொண்டது. இந்த stormல் எப்படி தனியாக வர்ஜீனியா போய் வருவது என்று கலக்கமாக, இருந்தாலும் அடாது கொட்டிய பெரும் மழையில் சென்று வந்தாகி விட்டது. போகும் போது பரவாயில்லை. வரும்போது செம அடைமழை.

இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் உறவினர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்ல, எப்படி லைவ் ஒளிபரப்பு செய்வது என்று தடுமாறி கடைசியில் ஒரு ஃபேஸ்புக் லைவ் மற்றும் ஒரு கூகுள் மீட் ஒன்றும் கடைசியில் அங்கு அநுமதி கேட்டுப் போட்டு அனைவரும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதுவரை என்னடா இது எந்த உறவினர் நண்பர்கள் இல்லாமல் தனிமரமா நிற்கிறோமே என்ற கவலைகள் எல்லாம் இந்த லைவ் பிராட்காஸ்டில் பார்த்த உறவினர்கள் அனைவரும் போக்கி விட்டனர். தொடர்ந்த அவர்களது chattering ஐ கேட்க கேட்க எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங். அவர்களும் அதே சென்டிமன்ட்டை அங்கிருந்தே தெரிவிக்க மிக நிறைவாக இருந்தது.

அவர்களோட chattering எல்லாம் கேட்கக்கேட்க ஏதோ மண்டபத்தில் பக்கத்துல உட்கார்ந்து கேட்கிற ஃபீலிங். எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங்.

எல்லோருக்கும் என்னுடைய நன்றியை இவ்வாறு தெரிவித்துக் கொண்டேன்: When you all were there virtually, and hearing every single chatters, I never felt was alone there. Thanks all, you made our day.

வாழ்வினிது!
ओलै सिरिय !

Saturday, December 12, 2020

செயலற்று நின்ற பொழுதில்

 பொழுதன்னிக்கும் தன்னோட வீணைகளோடே ஜீவனம் செய்யும் அம்மிணி தன்னோட ம்யூசிக் ரூம்ல லைட் பத்தலைன்னாங்க! சரி, இருந்த பல்ப் இரண்டையும் எடுத்துபுட்டு நல்ல பவுர்ஃபுல் பல்பு ஆறு மாதம் முன் போட்டேன். நல்லாத் தான் ப்ரைட்டா இருந்துச்சு.

நேற்று காஸ்ட்கோ போனப்ப ஒரு LED ceiling light பார்த்தேன். டிஸ்கவுண்டல அவங்க போட்டதால வாங்கி வந்தேன். பையன் ரூம்ல ஆறு மாசம் முன்ன போட்ட led விளக்கு பிரகாசமாக இருப்பதால், இப்ப குளிர்காலத்துல சாயந்திரம் 5 மணிக்கே இருட்ட ஆரம்பிப்பதாலும், அம்மிணி சாயவேளையிலிருந்து இரவு தூங்கப் போகும் வரை அங்கயே செலவிடுவதால், இன்று அந்த ரூமைப் பிரகாசமாக்கிடனும்ன்னு செயலில் இறங்கினேன்.

ஆமை புகுந்த இடம் மாதிரி, அம்மிணி ரூம்ல நாம காலை வைச்சா என்ன ஆவும், அதே தான் ஆச்சு.

இருக்குற 4 வீணையையும் அந்த ரூம்ல ஒதுக்கச் சொல்லிபுட்டு, ஒரு 5 அடி ஏணியில ஏறி பழைய சீலிங் லைட் யூனிட்டைக் கழட்டினேன். இரண்டு கையையும் நீளமாக உயர்த்தி செய்ய வேண்டிய அளவு சீலிங் உயரம் வேற அந்த ரூம்ல. ஒரு ஏழெட்டு அடி ஏணியில ஏறியிருந்தா சுலபமாக செய்திருக்கலாம்.

இந்த குட்டி ஏணியில பல தடவை ஏறி இறங்க சிரமமாக இருந்ததால் சமையல்கட்டுல இருந்த அம்மிணியை உதவிக்கு கூப்பிட்டேன். பையனைக் கூப்பிடுங்க அவன் உயரத்துக்கு சுலபமாக முடியும்ன்னாப்புல. எலக்ட்ரிசிட்டி வேலையில ஒன்னும் தெரியாத இளசை விட்டா ஒன்னுக்கு இரண்டா நஷ்டமாகிரும். எது சொன்னாலும் கேட்க மாட்டான். தனக்கு எல்லாம் தெரியும்கிற பருவம். அம்மிணியை கம்முனு இருன்னு அடக்கிட்டேன்.

பழைசை முற்றிலும் கழிட்டிபுட்டு, புதுசோட base unitன் வயர் மூன்றையும் கனெக்‌ஷன் சரியாகக் கொடுத்து, லீக் செக் பன்ற வோல்டேஜ் டிடக்டர் வச்சு எல்லாம் சரி பார்த்துபுட்டு, யூனிட்டை ஸ்க்ரூ பண்ணி டைட் பண்ற நேரத்துல இடது கை மேல தூக்க முடியாமப்போயிருச்சு. இடது கையில பிடிச்சாத் தான் வலது கையில டைட் பண்ணமுடியும். இடது கை தூக்கவே முடியலை. ஒரு விதக்கலக்கம். இது என்ன புதுசா இது மாதிரின்னு பயம். 

யூனிட் வயர் கனெக்‌ஷனோடு தொங்குது. இனி எலக்ட்ரீஷியனை எப்ப கூப்பிட்டு என்ன செய்வதுன்னு கலக்கும். பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிடலாம். ஆனால் வசனங்கள் கேட்க வேண்டி வரும். 

தடுமாறி அந்தரத்துல நிற்கையில அம்மிணி சொல்றாப்புல நீங்க கீழ இறங்குங்க நான் பண்றேங்கிறாங்க. இதென்ன புது சோதனைன்னு நினேச்சேன். அம்மிணி என்னை விட குட்டை. இரண்டடி ஸ்டெப் ஸடூல்ல ஏறுவதற்கே தயங்கும் அம்மிணி, ஐந்தடி ஏணியில ஏறி எம்பி எப்படி டைட் பண்ணுவாப்பல, பின்னாடி கிளாஸ் வைச்சு எப்படி சீல் பண்ணுவாகன்னு சந்தேகம். வாழ்க்கையில இதுவரை அவங்க இதெல்லாம் செய்ததேயில்லை.

என்னோட கஷ்டத்தைப் பார்த்து மிக தைரியமாக ஏணி மேல ஏறிட்டாப்புல. எம்பி கையை மேல உசத்தி துக்கி அதை டைட் பண்ணியதுமில்லாம, நழுவி விழற கிளாஸையும் பிடிச்சு கிட்டு ஃபிக்ஸ் பண்ணியதைப் பார்த்து அசந்து போய் நிக்குறேன். ஒத்த கையில குச்சியைப்பிடுச்சு கொஞ்சம் ஒத்தாசை செய்துகிட்டு இருந்தேன்.

அம்மிணிக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்துன்னு தெரியலை. அம்மிணி முகத்துல அம்புட்டு சந்தோஷம். இனி எல்லா ரூமிலும் நாமே மாத்திரலாம், தான் செய்யறேங்குறாப்புல. அவ்வுளவு பெருமை முகத்துல.

சரி எல்லாம் ஆச்சு. என் வீணை ரூமைக் காலி பண்ணுங்க. க்ளீனாக இருக்கனும்கிறாப்புல, இடது கை பழய படி வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. ஒன்னு விடாம எல்லாத்தையும் க்ளீன் பண்ணிபுட்டு வந்தேன்.

என்னவொரு சோதனை தேவையற்ற நேரத்துல வருது! ஒருத்தருக்கு புது தைரியம் வருது! அசாத்தியமானதாக இருக்கு. இனிமேல் எல்லாம் ஆள் வச்சுத்தான் செய்யனும்.

வாழ்வினிது!

ओलै सिरिय !

Tuesday, December 8, 2020

உறங்கா தனிமையில் ஒரு நாள்

 மனம் ஒற்றி இல்லை மலைபோல் மகுடு

உறங்க உயிலா மனவலைகள் வகுடாய்

தூரதேசத்தில் ஒவ்வொன்றாய் நிழலாட

தொலைபேசி தொடர்புகளே உறவாடுது!


ஏற்றம் இறக்கம் வாழ்விலில்லை தனிமையே

பனிவிழும் சூழலில் புயலாய் மன ஓசைகள்

தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு 

வழி வகுக்கும் இயல்புகளின் திசைகரங்கள்!


எண்ணங்கள் சிதறாமல் செல்லுதல் கொடுப்பினை

வழித்தடம் வகுத்துக் கொடுக்கும் உறவுப்பிடிகள்

எக்கரையில் ஒதுங்கினாலும் மறுகரையில் பாசமாய்

வந்து செல்லும் பாதையில் தடையற்ற பயணம்!


உறங்கா தனிமையில் ஒரு நாள்!

புனர்வாழ்வு புனர்ஜென்மம்

என்னோட அஸ்ஸாமிய நண்பன் நாசர் அகமது மெத்தப்படித்தவன், நல்ல பணக்காரன், சிறந்த பண்பாளன், அதிக நாட்டுப்பற்று கொண்டவன். அவனது தங்கை அரசு அதிகாரி, அவரும் மெத்தப்படித்தவர்.

நான் அங்க கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்ல டீச்சராக இருக்கும் போது நாசர் கால்நடை மருத்துவக்கல்லூரி மேல்நிலைப்படிப்பு மாணவன். அவனது மாஸ்டர்ஸ்க்கு புள்ளியியல் கணக்கெல்லாம் கம்ப்யூட்டர்ல செய்துகொடுன்னு என் கிட்ட வந்தான். அவனுக்காக புதுசு புதுசா பேசிக் மொழியில புரோகிராம் எழுதிக் கொடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை சிறந்த நண்பன். இன்று ஒரு அயல்நாட்டில் ஒரு சிறந்த அதிகாரி. 

நான் எனது மேல் படிப்புக்கு போய்விட்டு 92ல் திரும்பி வரும் போது, அவன் கல்லூரி மாஸ்டர்ஸ் முடித்த கையோடு அதே மருத்துவக்கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக சேர்ந்து விட்டான்.

கௌஹாத்தி பூரா அவனோட சுத்தாத இடமில்லை. அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. ஆனால் அவன் இன்றும் சொல்கிறான் இது நமக்குள்ள ம்யூச்சுவல், உன்னிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய என்கிறான். அது எந்த அளவுக்கு கிரேசின்னா, 92 கடைசியில் நான் அஸ்ஸாமை விட்டுவிட்டு வந்த பிறகு, நான் உட்கார்ந்திருந்த அதே சீட்டில் அதே கால்நடை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் நான் செய்த அதே கம்ப்யூட்டர் வேலையைச் செய்தானாம். அதில் பெற்ற திருப்தி அநுபவம் பெற்ற பிறகு தான் அவனது பயணத்தில் இன்று அயல்நாட்டில் போய் செட்டிலானானாம். இன்றும் ஒரு சிறந்த அதிகாரி அவன்.

அவனிடமிருந்து நான் கற்றவை மிக அதிகம். இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். அவனை ஒரு நாள் ஒரு இடதுசாரி கட்சி அலுவலகத்திற்குக் கூட கூட்டிப் போனேன். ஆனால் அந்த அலுவலகத்தில் எங்களிடம் நீங்கள் இங்கு வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். அல்ஃபா உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு போட்டுத் தள்ளிவிடுவார்கள் வராதீர்கள் என்றனர். பிறகு அங்கு போகவில்லை.

அங்கு நான் இருந்த காலத்தில் அல்ஃபாவின் அட்டகாசங்கள் தீராத ஒன்று. பிரதான சாலையிலேயே படுகொலைகள் குண்டுவெடிப்பு நடக்கும். நான் தனியாக குடியிருந்த வீட்டில் பக்கத்து போர்ஷன் ஒரு சப்இன்ஸ்பெக்டர், செம குடிகாரர். ஆனால் அவர் பையன் அல்ஃபாவில சேர்ந்து அப்ப புதுசா பைக் வாங்கியதைப் பெருமையாகச் சொல்வார். அப்ப அங்கு பல பெற்றோர்க்கு அவர்கள் பிள்ளைகள் அல்ஃபாவில்(உல்ஃபாவில்) சேருவது பெருமை கூட. அவரையும் அல்ஃபா போட்டுத் தள்ளி விட்டதாக நான் 92ல் அங்கு படிப்பு முடித்து திரும்பிய போது சொன்னார்கள்.

ஒரு நாள் மதியம் 3 மணிக்கு நாசர் அவன் வீட்டுக்கு வரச்சொன்னான். அவனோட அம்மா போட்டுக்கொடுத்த அஸ்ஸாம் டீயை சுவைச்சிட்டு பேசிகிட்டிருந்தோம்.

அப்ப ஒரு மாருதி 800 கார் வந்தது. வா போலாம்ன்னான். நான் பின் சீட்டுல உட்கார நாசரும் அவனும் முன்னாடி சீட்ல உட்கார்ந்து அசாமில பேசிகிட்டு வந்தாங்க. எனக்கு அஹோமியா புரியும் பேச வராது. ஏதோ farm செட் அப் பண்ணனும்ன்னு அவன் கேட்க, நாசர் கால்நடை மருத்துவன்கிறதால அவனுக்கு பண்ணை வைக்க என்ன பண்ணனும்ன்னு சொல்லுன்னு கேட்டுகிட்டு வந்தான். 

சரி ஏதோ பிசினஸ் டீல்ன்னு நினைச்சேன். அந்த பண்ணை இடம் வந்து சேர்ந்த பிறகு, காரோட்டி இறங்கிப் போனான். நாசர் என் கிட்ட திரும்பி கேட்டான் இவன் யாருன்னு தெரியுமான்னான், தெரியாதுன்னேன். இந்த பையில என்ன இருக்கு தெரியுமா, கைத்துப்பாக்கி இருக்குன்னான். 

என் நெஞ்சு பக் பக்ன்னு அடிக்க ஆரம்பிச்சுருச்சு! அவன் யாருன்னு புரிஞ்சு போச்சு! என்னை ஏண்டா இவனோட கூட்டி வந்தேன்னேன். ஏண்டா இங்க வந்து என் உசுரு போகனுமான்னேன்.

இருடா! வரும்போது அவன் கார் ஓட்டி வந்த விதம் பார்த்தையான்னான். இல்லையேடான்னேன். ஒரு கை அந்த துப்பாக்கியிலும், அவன் கண்ணு இந்த காரை யாரோ ஃபாலோ பண்றாங்களான்னு பார்த்து கிட்டே வந்தான் பாருன்னு இன்னும் பயமுறுத்தினான்.

யார்றா இவன். எதுக்குடா நமக்கு இந்த வேலைன்னேன்.

நான் அரசு கால்நடை மருத்துவன்டா! கால்நடை பண்ணை அமைக்க யார் உதவி கேட்டு வந்தாலும் செய்ய வேண்டியது நம்ம கடமைடான்னான். அரசு வேலைடான்னான். அவன் டிபார்ட்மண்ட் அது.

இவன் யார்றான்னேன்.

அல்ஃபாவோட முன்னாள் பப்ளிசிட்டி செகரெட்டரி இவன். பெயரும் சொன்னான். அந்த பெயரைக் கேட்ட உடனே உசுரேப் போச்சு. இருடா, இவன் இப்ப அரசுகிட்ட சரண்டைந்த முன்னாள் அல்ஃபா, இப்ப சல்ஃபான்னான். 

அடப்பாவின்னேன். அந்த பெயர்களெல்லாம் அசாம் வீதிகளில் மிகப்பிரபலம் அப்ப. எல்லா லோக்கல் பேப்பர்களில் வரும்.

இப்ப அரசு கொடுக்கிற மானியம் மற்றும் பேங்க் லோன் மட்டுமல்ல, அரசு அநுமதி பெற்ற துப்பாக்கி இது. இந்தப் பண்ணை வைக்க இவன் சொல்ற அமௌண்ட் ஏதோ பேங்குல கொள்ளை அடிச்சுருப்பான், கொள்ளையடிக்கத்தான்டா அதுல சேர்றானுங்க, அதோட அரசு கொடுத்த பணத்தையும் போட்டு பண்ணை வைக்கறான். ஒரிஜனல் அல்ஃபா இவனை குறியும் வச்சிருப்பாங்க! அதான் இவ்வளவு உசாரா இருக்கான். பின்னாடி தூரத்துல சிஐடி கார் வரும். இல்லாட்டி இவனுங்க எல்லாம் இந்த பகல்நேரத்துல இவ்வளவு ஃப்ரீயா சுத்த மாட்டாங்கன்னான்.

திரும்பி நாசர் வீடு வர்றவரை கையில உசிரு இல்லை! அந்தக் கார்ல திரும்பும் போது முகம் பேயறைஞ்சு போச்சு எனக்கு. 

வந்த பிறகு நாசர் சொல்றான் நான் செய்யற இந்த வேலையும் அரசு வேலைதாண்டா. இவனுங்களுக்கு rehabilitation இதுன்னான்.

இனிமே இது மாதிரி வேலைகெல்லாம் என்னை இழுக்காதே, எனக்கு என் உசிரு முக்கியம்ன்னு சொல்லிட்டு வந்தேன்.

வாழ்க்கையில நேரிலப் பார்த்த பயங்கரவாதி கொலைகாரனுக்கு அரசுதவியோட புனர்வாழ்வு.

நமக்கு பக் பக்ன்னு இவனுகளைப் பார்த்தா அடிச்சுக்குது. எத்தனை கொலைகள் கொடூரங்கள் அந்த கௌஹாத்தி வீதிகளில்!

முகநூலில் பார்த்த இன்னொரு போஸ்ட் பார்த்து பழையது ஞாபகத்திற்கு வந்தது.

முருகா காப்பாத்து!
ओलै सिरिय

Sunday, December 6, 2020

வேலைக்கான தகுதி எடைபார்த்தலில்

 அஸ்ஸாம்ல போன பத்து பதினைஞ்ச நாள்க்குள்ளவே வீட்டுல சும்மா உட்காரேதேன்னு ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல பொட்டிதட்ட அண்ணன் அனுப்பிட்டான். அவனே பேசி அவனே 1000 ரூபாய் சம்பளமும் பேசி துரத்திட்டான். மூனு மாசம் அங்க ஓட்டியிருப்பேன்.

பின்னாடி அரசு உதவியில நடக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட்ல ஜூனியர் ப்ரோகிராமர்/அசிஸ்டண்ட் புரபசர் வேலைக்கு பேப்பர்ல விளம்பரம் வந்தது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி கம்ப்யூட்டர் சயின்ஸ் புரபசர் எச்ஓடி தான் இன்டர்வியூ பண்ணினார். நான் அப்ப தான் கல்லூரி படிப்ப முடிச்சு வந்திருக்கேன், இன்னும் மாணவன்கிற மென்டாலிட்டி தான். இன்டர்வ்யூ பண்றவர் பெரிய புரபசர், மிகவும் பிரபலமானவர். அவர் முன்ன போட்டிருந்த சேர்ல உட்காரச்சொன்னார். பெரிய புரபசர் முன்ன உட்கார மனசு வரலை. நுனி சீட்ல உட்கார்ந்தேன். ரிலாக்ஸ்ன்னார்.

இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சு கடைசியில எழுந்து போகுற நேரத்துல அவர் சொன்னார். என்னோட பல ஸ்டூடன்ட்ஸ் இந்த போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க, எல்லோரையும் இன்டர்வ்யூ பண்ணியாச்சு நீ தான் கடைசி, நீ ஒருத்தன் தான் எங்கிருந்தோ இங்க பிழைப்பு தேடி வந்துருக்க. நீ எல்லாத்துலையும் அதிகம் மார்க் வாங்கலைன்னாலும், என்னோட சில ஸ்டூடண்ட்ஸ் உன்னை விட அதிக மார்க் வாங்கியிருக்காங்க. ஆனால் ...

ஆனால்ன்னு சொல்லி நிறுத்திட்டார்.

என்ன சொல்லப் போறார்ன்னு பக்குன்னுச்சு. ஏன்னா அந்த காலத்துல அஸ்ஸாம் agitation மும்முரமாக நடந்து முடிந்து பிரஃபுல்ல மகந்தா முதலமைச்சர் வேற. 
சரி நமக்கு கிடைக்காது நினைச்ச நேரம், வாயைத் திறந்தார்.

இந்த போஸ்ட் நான் உனக்குத் தர்றேன். அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அவர் டேபுள் முன்ன இன்டர்வியூ ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நான் கொடுத்த என்னோட மார்க்‌ஷீட்ஸ் எல்லாம் பரப்பி வைத்திருந்தார். சொல்றார். நீயும் மற்றவர்களைப் போல் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தாய். ஆனால் இதுல பார் உன் 10வது, 12வது, டிகிரி, மாஸ்டர்ஸ்ல இருக்கிற ஒவ்வொரு ஷீட்லையும் பார், ஒரு consistency இருக்கு பார். The same score percentage, no fluctuations தெரியுது பார். Inadvertently you have some mental stability and it is needed when you live in an outside domain where you are not accustomed to in life. when you get stress you will be able to handle it easily ன்னார். அதுக்காவே இந்த போஸ்ட் உனக்குத் தர்றேன்னு சொல்லிக் கொடுத்தார். 2200 ரூபாய் அரசு சம்பளம். அப்ப அவர் சொன்ன இந்த காரணங்கள் எதுவும் புரியலை. புரிஞ்சுக்கிற வயதுமில்லை. 23-24 வயசு தான். மிக மிக மரியாதையோட எழுந்து நன்றி சொல்லிட்டு வந்தேன்.

அடுத்த ஆறு மாதத்துல இன்னொரு போஸ்ட்ல அவரோட ஸ்டூடண்ட்க்கு கொடுத்தார். அந்த ஸ்டூடண்ட் வந்து என் கிட்ட சொன்னான், போன இன்டர்வ்யூவிலேயே நான் ரொம்ப நல்லா பண்ணினேன், நான் அவரோட பெஸ்ட் ஸ்டூடண்ட், ஏன் அப்ப கிடைக்கலைன்னு தெரியலைன்னான். நான் அவன்ட்ட ஒன்னும் சொல்லலை. அவர்ட்டயே பிஎச்டி பண்ணப் போறேன்னு சொல்லிகிட்டு இருந்தான்.

நான் என்றும் போற்றும் மாமனிதர் கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் அவர்.

வாழ்வினிது
ओलै सिरिय

குழந்தைகளே ஆசிரியர்கள்

 1987 ஜூலை 7ந்தேதி கடைசியாக தமிழகத்தை விட்டு கிளம்பியது. சேலத்திலிருந்து கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ்ல அப்பா அம்மாவோட ஏறி 10ந்தேதி கௌஹாத்தி வந்து இறங்கினோம். மூனு பேருக்கும் ஒரு வார்த்தை इिन्दि தெரியாது. அண்ணன் ஸ்டேஷன் வந்து கூட்டிப் போனதால தப்பிச்சோம்.

பக்கத்து வீடு சர்தார்ஜி குடும்பம். இரண்டு குட்டிப் பெண் குழந்தைகள், இன்னும் ஸ்கூலுக்கு கூட போகலை அது. வீட்டுல கணவன்-மனைவி பஞ்சாபியில பேசிகிட்டாலும், குழந்தைங்க கிட்ட ஹிந்தி தான் பேசுவாங்க. ஸ்கூல் போக ஆரம்பிச்சா அஸ்ஸாமி வேற கத்துக்கனும். 

அந்த இரண்டு குழந்தைகளும் தான் எனக்கு हिन्दि டீச்சர்ஸ். முதல்ல நான் கத்துகிட்ட வரிகள் ये (यह्) क्या है தான். இதைச் சொல்லிச்சொல்லியே அந்த குழந்தைங்களைத் துளைச்சு எடுத்து ஒவ்வொரு வார்த்தையாக் கத்துகிட்டேன். ஏதோ தப்பா சொல்லிட்டா வாசல்ல எச்சையைத் துப்பிட்டு ஓடிரும். तू मत करன்னு அதுங்க கிட்ட சொல்ல வராது! துப்பாதே துப்பாதேன்னு தமிழிலேயே சொல்லி சொல்லியே அதுங்க முதல் வார்த்தை து வை வைச்சு புரிஞ்சுக்கும்.

இப்ப அந்த குழந்தைங்க பெரிய யுவதி ஆகியிருக்கும். தொடர்பு இல்லாமப் போயிருச்சு! அசாமில இருந்த பிரச்சனைகளால சொந்த ஊர் அம்ரித்ஸர் போயிடுவேன்னாங்க. தெரியலை. தேடனும்.

அக்குழந்தைகள் நினைவில்

வாழ்வினிது!


ओलै सिरिय !

Tuesday, December 1, 2020

சுயமாய் செய்திடல் காலத்திற்கேற்ப

 பல இடங்களில் பல க்ரூப்களில் சேமிப்பது, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மண்ட் பத்தியெல்லாம் நிறைய க்ரூப்ல நிறைய பேர் பேசறாங்க!

நாம எவ்வளவு பேசினாலும் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் எந்த மாதிரி ஸ்டாக் வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

மத்தவங்க சொல்லி வாங்கிப் போடலாம்ன்னு செய்யுற செயல்கள் அதிக பலனைத் தராது. எல்லோரும் சுயமாக யோசித்து, இன்றைய சூழ்நிலைக்கு என்ன வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் லாபம் பார்க்க முடியும்.

ஒபாமா வந்த காலத்துல அவர் புது ஹெல்த்கேர் பிளான் கொண்டு வரப்போறேன்னார். அந்த சமயத்துல ஹெல்த்கேர் ஸ்டாக் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணவங்க இன்று 300-500% சம்பாதிச்சுருக்க வாய்ப்பிருக்கு.

ட்ரம்ப் வந்தப்ப முதல்ல இன்ஃப்ராஸ்டர்க்ச்சர், பார்டர்ல சுவர் எழுப்பறதைப்பத்தி தான் அதிகம் பேசினார். அந்த கட்டத்துல கேட்டர்பில்லர், ஜான் டியர் போன்ற கம்பெனிகளின் ஸ்டாக் வாங்கியிருந்தா டபுள் ஆகியிருக்கும்.

இன்றைய கொடுநோய் கொரோனா காலத்துல ட்ரம்ப் அதிகம் கவனம் செலுத்தியது செலவழித்தது எல்லாம் கொரோனாக்கு தடுப்பூசி, சுவாசத்திற்கு வென்டிலேட்டர் போன்றவற்றில் தான். அதைத் தயாரிக்கும் கம்பெனிகள் ஸ்டாக் மற்றும் ஃபார்மசிகள் ஸ்டாக் மற்றும் ஹெல்த்கேர் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் பண்ணும் போது மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும். 

மேலும் இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தே படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஸ்டாக்குகள் ம்யூச்சுவல் ஃபண்ட்ஸும் தான் பலன் கொடுக்கும்.

அடுத்து வரும் பைடன் ஆட்சியில் அவர் எதில் அதிக கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் செய்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

மற்றவர்கள் சொல்லி வாங்குவதும் சரி. கொஞ்சம் சுயமாக சிந்தித்து நாமே வாங்கி விற்பது அதிக பலனீட்டும்.

முயல்பவற்களுக்கு வாழ்வினிது!

Sunday, November 15, 2020

நரகாசுரவதம்

 நரகாசுரவதத்தை எப்படி கொண்டாடுவது!

ரொம்ப சிம்பிள்! யாருக்காவது கொரோனா வந்துடுச்சுன்னு சிம்ப்ளா சொன்னா முடிஞ்சுது கதை! போதும், நம்மளை நரகாசுரவதம் பண்ணிருவாங்க!

அத்தகைய நரகாசுரவதம் நாள் நேற்று. எவ்வளவு இடி வாங்கினாலும் கொண்டாடற பக்குவம் வந்துடுச்சுங்கிறதால இதையும் சுலபமாக ஓசியில பட்டாசு வெடிக்க நமக்கு கத்துக்கொடுக்கனுமா! புடம் போட்டல்ல வச்சிருக்காக நம்மை!

நேற்று காலை அம்மணியோட ஆபீஸ்லேர்ந்து போன். அம்மிணி கீழ வேலை செய்யற ஒருத்தருக்கு பாசிடிவ்ன்னு வர, அவங்க அம்மிணியை ஒரு நிமிடம் ஆபீஸில் பார்த்ததாக county ஆபீஸில் சொல்ல, அம்மிணி ஆபீஸில் அம்மிணி இன்சார்ஜ்ங்கிறதால முடிஞ்சது கதை! ஆபீஸ் முழுக்க சானிடைஸ் பண்ண நடவடிக்கை எடுக்கனும், போன்ல அவங்களைப் போட்டு வறுத்து எடுத்தது போக, இப்ப வூட்டுல அம்புட்டு பேரும் டெஸ்ட் எடுக்கனும்ன்னு நம்ம பக்கம் திரும்பிருச்சு நரகாசுரவதம்.

பையன் தான் இதுக்கு முன்ன போன pediatric urgent care தான் போவேங்குறான். அம்மிணி அவங்க டாக்டர் கிட்டத்தான் போவேங்குறாங்க! நடுவுல செத்தாண்டா சேகரு நிலை!

பையன் சொன்ன இடத்துக்குப் போன் பண்ணினா அவங்க ஒரு ஆளுங்கு டெஸ்ட்டுக்கு 150$ கேட்கிறாங்க. அவங்க கிட்ட இந்த கோவிட் டெஸ்ட் ஃப்ரீ ஆச்சே, எங்க இன்சூரன்ஸ்ல ஃப்ரீ ஆச்சேன்னா, அதெல்லாம் முடியாது, நீ உள்ளவந்தா இந்த வருச deductibles எல்லாம் சேர்த்து ஒரு ஆளுக்கு 150ங்கிறாங்க! மூனு பேருக்கு 450$.

என்னடா சத்திய சோதனை இது வேற செலவான்னு நினைக்கையில, இவங்க இரண்டு பேருக்கும் உசுரு முக்கியமா காசா முக்கியம்கிறாங்க. உண்மை தான். இவ்வளவு கோடி பணம் அரசு இந்த டெஸ்ட்டுக்கு ஒதுக்கி செலவு செய்யுது, எதுக்கு இன்னும் நாம செலவு பண்ணனும்ன்னு நினைச்சு வேற இடம் தேடறதுக்குள்ள என்னை வூட்டுல ஊசி பட்டாசு சரவெடியில கொளுத்த, இதையும் மீறி நமக்கு திரியை வெளிய நீட்டத் தெரியாதா!

Countyயோட வெப்சைட் போய் இன்னிக்கு எங்க அவங்க டெஸ்ட் பண்ற இடம் தேடினா இன்றைய ரிசர்வேஷன் எல்லாம் ஃபுல். அரை மணி்நேரத்துல 30 பேருக்கு டெஸ்ட் பண்ற இடமெல்லாம் ஃபுல். 

ஊரெல்லையில ஒன்னு கிடைக்க 3 பேருக்கும் ரிசர்வ் பண்ணினா இவங்க வரமாட்டேங்குறாங்க. ஏன்னா அங்க போனா டெஸ்ட் ரிசல்ட் வர 48-72 மணி நேரமாகுமாம், இவங்க அவ்வளவு நேரம் பொறுக்க முடியாதாம். ரிசல்ட் உடனே தெரியனுமாம். 450$ கட்டினா 8 மணி நேரத்துல ரிசல்ட் போட்டு ஒரே குடைச்சல். ரோட்டுல வெடிக்கிற பட்டாசெல்லாம் ஒன்னுமேயில்லாத கதை தான்.

நம்ம கிட்ட எதுவும் செல்லுபடியாகாதுன்னு இரண்டு பேரும் வர, county testing siteக்கு கூட்டிப் போனேன். செம சேஃப்டி. மத்தவங்க எதையும் கையுல தொடுவது கிடையாது. நம்ம காரில் உட்கார்ந்து நாமே டெஸ்ட் பண்ண எல்லாம் automatic ப்ரொசீஜர்ஸ். பார்க்கிங் லாட் உள்ளே நுழையும் போதே ஆளுக்கு ஒரு டெஸ்ட் கிட் சேஃப்டி புரோசீஜரோடு கொடுக்கறாங்க! காரை தள்ளிப் பார்க் பண்ணி, நம்ம போன் மூலம் பார்கோடு ஸ்கேன் பண்ணி் நம்ம டீடெயில்ஸ் போன் மூலம் என்டர் பண்ணி, வெரிஃபை பண்ணினா நாம ரெடி!

டெஸ்ட் எடுக்க படம் போட்டு விளக்கத்தோட எல்லாம் பிளாஸ்டிக் கவர்ல இருக்கு! நாமளே test swabஐ மூக்குல உட்டு எடுத்து குப்பியில போட்டு ஒரு கூலர் பாக்ஸ்ல போட்டா ஏழு மணி நேரத்துல லேப்கார்ப் டெஸ்ட் ரிசல்ட் நம்ம போனுக்கு வருது. பையனுக்கு இப்பவே தான் ஒரு மெடிகல் புரொபஷனல்ன்னு நினைப்பு, அவரு தான் மூக்குல சொருகுவாரம்! உள்மூக்குல போட்டு குடைஞ்சுபுட்டான். அங்கயே தும்மலை அடக்க முடியாமப்போயிருச்சு!

யாரும் யாரையும் தொடுவதில்லை. கிளினிக் உள்ளப்போனா கதவைத் தொட்டோம் அதைத் தொட்டோம் இதைத் தொட்டோம், சானிடைஸ் பண்ணுன்னு ஒரு தொந்திரமும் இல்லாம நம்ம காரில் உட்கார்ந்தே எல்லாம் இலவசமாக முடிந்தது!

காலையிலிருந்து ஒவ்வொருத்தரும் அய் என் ரிசல்ட் நெகடிவ்ன்னு என் ரிசல்ட் நெகடிவ்ன்னு சந்தோசத்துல குதிக்கிறாங்க!

இரண்டு பேரும் உங்க 150$ எடுத்து வைங்க எங்கிட்டேன்னேன். கொடுக்கிற ஆளுங்களா இவங்க! அடுத்த பட்டாசோட ரெடியாக நிப்பாங்க!

தீபாவளி நரகாசுரவதம் எப்படி இருக்கும்ன்னு கேட்கிறாகளே! இதுவல்லவோ எங்கள் வதம்!

Friday, November 13, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 5

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 5

தேர்தல்ல வேலை செய்யறப்போ பொதுவாக எந்த அரசியல் கட்சி பத்தியோ, தங்கள் கட்சி சார்பு பத்தியோ எதுவும் பேசிக்க மாட்டோம். பேசக்கூடாது கூட. மேலும் இந்த தேர்தல்ல கட்சி சார்ந்த பார்வையாளர்களே (observers) நேரில் poll place உள்ளே இருந்ததால் யாரும் தன் வேலையைத் தவிர வேற எதுவும் பேசலை.

தேர்தல் முடிஞ்சு டேபுலேட்டர் கவுண்ட் முடிச்சு எல்லாம் க்ளோஸ் பண்ணிய பிறகு, ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லி, polling place எல்லாம் க்ளீன் பண்ணி, விடைபெறுகிற நேரம், அதிகாரிகளில் ஒருத்தர் நடுவுல மேடைப்பேச்சு பேசற மாதிரி வந்து நின்னார்.

இது தான் அவர் முதல் தடவையாக எலக்‌ஷன் ட்யூட்டி பார்க்கிறது. புதுசா என்ன சொல்லப்போறார்ன்னு வேடிக்கைப் பார்த்தோம். எங்க பிரிசின்கட் ரிசல்ட் பார்த்து கொஞ்சம் மனசுடைஞ்சுட்டார்ன்னு சொல்லலாம். ஆனாலும் பெருமையாக ஆரம்பிச்சார்.

வெடரன் காங்கிரஸ் மேன் மறைந்த ஜான் லூயிஸ் போன்றோர் நடத்திய அந்த வாஷிங்க்டன் நடைபயணத்தில் கலந்துகிட்ட இரண்டு வெள்ளை இனத்தவர்களில் இவரது அப்பாவும் ஒருவராம். அப்போது இவருக்கு 1 1/2 வயதாம், அதனால் மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்தது நினைவு இல்லையாம், ஆனால் அவர்களிடமிருந்து இவரது அப்பா பாராட்டு பெற்றதை அன்று நினைவுகூர்ந்தார். நாம் இந்த நாட்டில் இத்தகைய பாரம்பரியத்தோடு வந்துள்ளோம், ஆதலால் இந்த எலக்‌ஷன்ல உங்களோடு வேலை செய்தது எனக்கு மிகப் பெருமையாக இருக்கு, இன்று என் பிறந்த நாள் கூட. 

எல்லோரும் பிறந்த நாளுக்கு லீவு எடுத்து எங்கோ விடுமுறைக்குப் போவாங்க! ஆனால் என் பிறந்த நாளை இந்த 14-15 மணி நேரம் உங்களோடு தேர்தலில் பணியாற்றியதையே பெருமையாக நினைக்கிறேன்னார்.

எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம். சிலர் MLKவை நேரில் பார்த்தீங்களா என்றனர். எனக்கு அப்ப 1 1/2 வயசு ஞாபகமில்லை, ஆனால் என் அப்பா அவரோடு குடும்பத்துடன் கலந்து கொண்டது என்றார். 

மேற்கொண்டு எந்த அரசியலும் பேசக்கூடாதுன்னு நினைவுபடுத்திகிட்டு எல்லோரும் 14 மணி நேர வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பினோம்.

இப்ப எல்லோரும் ஈமெயில் மூலம் நன்றி சொல்லிக்கும் போது இன்னொருவர் என் பெயரைக்குறிப்பிட்டு இந்த தனிப்பட்ட வேலையை கற்றுக்கொள்ள நான் உதவியதற்கு நன்றி சொல்லும் போது நம் கடமையை நாம் செவ்வனே செய்தது நிறைவு தருகிறது.

Sunday, November 8, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 4

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 4

நடந்து முடிந்த இந்த தேர்தல் உண்மையிலேயே வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய ஒன்றுஅமெரிக்காவுலஉட்கார்ந்துகிட்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ரொம்ப பேசறாங்கன்னு விமர்சனம் வரும்ஆனால்அவர்கள் உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஜனநாயக அமைப்பு இதுசியர்ஸ்!


ஒரு உண்மையான ஜனநாயக ஆட்சியில் சாதாரண கடைநிலை குடிமகன்களே தேர்தல் அதிகாரிகளாகபணியாற்றி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு உதவ பணியாற்ற வரும் அமைப்பு இது அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களை வைத்து மட்டும் அரசு அமைப்பால் நடத்தப்படும்தேர்தல்களல்ல இவையார் வேண்டுமானாலும் தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்.


பொதுவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு ஊழியர்களோ பொதுமக்களோதேர்தல் வேலைகளில் பங்காற்றிஅதில் கிடைக்கும் additional income அவர்கள் வாழ்க்கைக்கு உதவுமென்று பொதுவாக ரிடையர்ட் மக்கள்வயதில் பெரியவர்களே இங்கு தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்அவர்களுக்கே இந்த வேலையையும்கொடுப்பார்கள்.


இதைப்பற்றியெல்லாம் அறியாமல் அரசியலில் இருந்த ஆர்வத்தில் நான்கைந்து வருடம் முன் முதல் தடவையாஎலக்‌ஷனில் தேர்தல் பணி செய்ய நான் சென்ற போது மற்ற அதிகாரிகள் என்னிடம் மறைமுகமாக கேட்டகேள்வி do you need this additional income ன்னுபக்குன்னுச்சு எனக்குஎன்னடா நல்ல சம்பளத்திலிருக்கும்நாம் இன்னிருத்தரோட வருமானத்தைக் கெடுக்கிறோமான்கிற guilty feelings லேயே அந்த தேர்தலில்பணியாற்றினேன்.


நான் தேர்தல் கமிஷனில் நேரடியாக வேலை செய்யும் ஆளல்லமுழுநேரப்பணி வேறொரு இடத்தில்ஆனால்கடந்த தேர்தல்களில் தேர்தலுக்கு முன் வாலிண்டியராக பதிவுசெய்து தேர்தலுக்கு சில நாட்கள் முன் ட்ரைனிங்எடுத்துக் கொண்டு வேலை செய்தேன்இதற்கு முன் நடந்த தேர்தல்களுக்கும் இந்த தேர்தலுக்குமுள்ளவித்தியாசத்தை நன்கு நேரில் பார்த்தவன்.


எந்தவொரு தனிநபரும் இங்கே தேர்தலில் பணியாற்றமுடியும்இந்த தடவை இரண்டு கல்லூரி மாணவர்கள்என்னுடன் பணியாற்றினர்அதில் ஒருவருக்கு இன்னும் ஓட்டளிக்க கூட வயது வரவில்லைஇங்கேயே பிறந்துவளர்ந்த மெஜாரிட்டி வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு என்னைப் போன்ற அயல்மண்ணில் பிறந்து இங்குவந்து குடியேறியவர்கள் தேர்தல் முறையாக நடைபெற உழைக்கும் உழைப்பை மட்டுமல்லஅவர்களும் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்கும் போதும்கேட்டு செயல்படும் போதும் அவர்களுக்கும் இந்தஜனநாயக அமைப்பின் பன்முகத்தன்மை முற்றிலும் விளங்கும்.


அரசு பார்வையில் அரசு ஊழியர்களை வைத்து மட்டுமே நடக்கும் தேர்தல்களல்ல அமெரிக்க தேர்தல்ஒவ்வொருcountyயிலும் தாங்கள் குடியிருக்கும் வீட்டைச் சுற்றியுள்ள சாதாரண மக்களே தங்கள் வாக்குச்சாவடியில் (poll place in their precinct) பணியாற்றுவார்கள்மற்ற precinct லிருந்தும் வந்து பணியாற்றுவார்கள்.


அனைவருக்கும் தேர்தலுக்கு முன் முறையான பயிற்சிஎதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லைமனப்பாடம் செய்து மறந்து போய் தவறிழைத்துடக் கூடாதென்று ஒவ்வொருவித வாக்காளர்களின் situationsக்குஎவ்வாறு செயல்பட வேண்டுமென்று வடிவமைக்கப்பட்ட தேர்தல் விதிகள் ஒவ்வொன்றும் flowchart வடிவத்தில்தங்கள் கண்முன்னே வைத்து பணிபுரியும் வசதியுடன் நடப்பதுஇவற்றில் சில வாக்களர்கள் situation பொறுத்துநேரடியா தேர்தலாணையத்தின் ஹெல்ப்லைனில் பேசி உடனடியா வாக்காளருக்கு பணிசெய்ய உதவும்வகையில் வடிவமைக்கப்பட்டவைதவறிழைப்பது மிகவும் அரிது மற்றும் வெகு குறைவாகத்தானிருக்கும்.


மேலும் தொடரலாம்!

Saturday, November 7, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

ஒரு தனிமகனின் எண்ணம் இது. அதை பதிவு செய்கிறேன். நான் பலரைப் போல் ஒருவர் வெற்றியையோ ஒருவர் தோல்வியையோ பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஜனநாயகத்தின் முழுமையான வெற்றிப்பாதைகள் நம் கண் முன்னே தெரிகிறது. ஒரு polarized election ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கக் கூடியது நடந்துள்ளது. மாநில சுயாட்சியின் அதிகாரங்கள் புடம் போட ஒரு சரித்திரம் நிகழ்ந்துள்ளது. 

புதிதாய் வருபவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கு. செய்வார்களா? எவ்வளவு செய்ய முடியும்? நடத்து முடிந்தவைகளை மாற்றி அமைக்கவே இவர்கள் காலம் ஓடப்போகிறதா அல்லது போன ஆட்சியை விட இவங்க பெட்டர்ன்னு ஒரு ஆப்ஷனுக்காக நடந்து முடிந்த தேர்தலாக முடிந்து விடக்கூடாது!

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக அளவில் வாக்குகள் வந்து குவிந்துள்ளது. இதுவரை பார்க்காத சூழ்நிலையில் தொற்றுநோயின் கிடுக்கிப்பிடி நடுவே இதுவரை அதிகம் நடைபெறாத தேர்தல் வழிமுறைகளை மாற்றி அமைத்து நடத்த வேண்டிய கட்டாயத்துடன் நடந்து முடிந்துள்ளது.

பத்து பன்னிரெண்டு வருடமாக வாக்குச்சாவடி உள்ளே நுழையாதவர்கள் இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்கிறார்கள். 3 பேரை நானே நேரில் எதிர்கொண்டேன். வாக்குச்சாவடியில் நுழையும் வாக்காளரை வாக்களிக்கமுடியாமல் வெளியே போவச் சொல்வது voter intimidation, அதைச் செய்ய ஃபெடரல் சட்டம் அநுமதிப்பதில்லை. இவ்வளவு வருடம் வராதவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் வாக்குச்சாவடி நோக்கி வந்துள்ளனர்.

இவர்கள் எதிர்பார்ப்புகள் போன்றது தான் நம் எதிர்பார்ப்போம். செய்ய வேண்டியவை அதிக அளவில் கண் முன்னே நிற்கிறது.

வாக்காளரை மதிக்கச் சொல்லும் சட்டம், வந்தாரை வாழ வைக்க, குறைந்தபட்சம் மானத்தோடு விளிப்பதற்காகவாவது உதவ வேண்டும்.

எத்தகைய பேரிடரில் எத்தகைய பெரிய வாக்குப்பதிவை மாநில மற்றும் கவுன்டி தேர்தல் மையங்கள் நடத்தியுள்ளது. அந்த வழிமுறையை செழுமைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதையேகேள்விகுறியாக்குமிடத்தில் தகுந்த பதிலளித்துள்ளது கிடைத்த அதிகபட்ச வாக்குப்பதிவுகளே! அது யாருக்கு கிடைத்தது என்பதைப்பற்றி கவலையில்லை! எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை உணரவேண்டும். இது ஜனநாயக அமைப்பிலேயே சாத்தியம்.

மேலும் தொடரலாம்!

Thursday, November 5, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 2

அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியே அது மாநிலங்களுக்குத் தரும் மாநில சுயாட்சி, பலம் பொருந்திய மாநிலங்களின் ஆட்சியே அதன் அடிப்படை வேர். மத்திய அரசின் ஆணைகள் சிலவற்றை நிராகரிக்கக் கூடிய சக்தி கூட மாநிலங்களுக்கு உண்டு. அத்தகைய பலங்களில் ஒன்று தேர்தல் நடத்தும் அதிகாரம் அதிக அளவில் மாநிலங்கள் கையிலிருப்பது.

தேர்தலில் முக்கியமானது ஒவ்வொரு பிரஜையின் ஓட்டுரிமை. அமெரிக்கப் பெண்களும் சிறுபான்மையினரும் ஒரு நீண்டதொரு போராட்டத்தில் பெற்றது இந்த ஓட்டு போடும் உரிமை. இதைப் பறிக்கக்கூடிய எந்த ஒரு செயலும் அவர்களை கொதித்து எழ வைக்கும். 

அமெரிக்கா பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நாடு. 3 வித time zone. ஆதலால் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. அந்தந்த மாநிலங்களே நேரத்தை காலத்தை நிர்ணயம் செய்யும். எத்தனை ஓட்டுச்சாவடிகள் என்பதை தேவைக்கேற்ப மாநிலத்திற்குள் உள்ள county நிர்ணயம் செய்யும். இதெல்லாம் உள்ளாட்சித்துறையின் மிகப்பெரிய அதிகாரம், ஜனநாயகத்தின் வெற்றி இது.

இங்கு நீண்டகாலமாக ஓட்டாளரிடம் ஓட்டுச்சாவடியில் ID கேட்கும் பழக்கம் கிடையாது. பெயர் மற்றும் முகவரி மட்டுமே! ஒரே பெயரில் இருவர் இருந்தால் வயது மற்றும் பிறவற்றை சரிபார்க்கனும். தேர்தலில் இந்த தடவை ஓட்டு போடுபவர்கள் ஐடி காண்பிக்கனும்ன்னு எங்கள் மாநிலத்தில் சட்டம் இயற்றினார்கள். கோர்ட் அதை தடை செய்துள்ளது. கோர்ட் தடையை விலக்கும் வரை ஐடியை காண்பி என்று ஓட்டுச்சாவடியில் சொல்ல முடியாது.

மேலும் பல மாநில அரசுகள் தேர்தலன்றே வோட்டாளர் பதிவுகளையும் அனுமதிக்கிறது. ஆகவே முன்னர் அறிவித்த மொத்த வேட்பாளர் எண்ணிக்கைக்கும், தேர்தலன்றும் அதற்கு முந்தைய தினத்தில் பதிவானவர்களையும் முழுமையாக கணக்கிலெடுக்க வேண்டிய நாளை CANVASS date என்பர். இது எங்கள் மாநிலத்தில் நவம்பர் 13. தேர்தலன்று பதிவானவர்கள் இந்த கேன்வஸ் தேதிக்கு முன் எலக்‌ஷன் கமிசன் அலுவலகத்திற்கு ஏதாவது ஒரு அட்ரஸ் proof கொடுக்கனும் ( ட்ரைவர் லைசன்ஸ், பாஸ்போர்ட், யுடிலிடி பில், இன்னும் பிற வகைகளில் ஏதாவது ஒன்று). அதுவரை இவர்களது ஓட்டுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாது சில மாநிலங்களில். இதை provisional ballots என்பர். இந்த canvass date என்பது ஒவ்வொரு countyயும் பதிவான ஓட்டுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு election processஐ நிறைவு செய்ய certify பண்ணும் நாள். அன்று தான் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவு நிறைவு பெறும் நாள்.

அமெரிக்க மக்கள் இடம் விட்டு இடம் பெயர்வது அதிகம். அத்தகையவர்கள் தங்கள் முகவரி மாற்றும் போது உடனே எலக்‌ஷன் கமிசனுக்குத் தெரிவித்தால் அது உடனே ரிஜிஸ்டரில் பதிவாகும். இல்லாவிட்டால் லைசன்ஸ் மாத்தும் போது dmvல் சொன்னால் அது எலக்‌ஷன் ரிஜிஸ்டரில் பதிவாகும். ப்ரைவசி சட்டங்கள் படி வேட்பாளர் சொல்லாமல் எதையும் மாற்ற முடியாது. 

இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு உறவினர் எழுத்து மூலம் தேர்தல் இடத்திலோ முன் கூட்டியோ தெரிவிக்கலாம். அந்தத் தகவலை எலக்‌ஷன் கமிசன் சரிபார்த்த பிறகே வோட்டர் லிஸ்டிலிருந்து இறந்தவர்கள் பெயரை எடுக்க முடியும். இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போடுவது அல்லது பிறரது பெயரில் ஓட்டு போடுவது felony. கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை தான்.

ஓட்டு போடுவது ஒவ்வொருவரது உரிமை. அதை தடை செய்ய இயலாது. தேர்தலிடத்தில் வோட்டாளர் குறிப்பில் சரியாக இருந்தால் வோட்டாளரே தங்கள் ballot ஐ tabulator உள்ளே தள்ள முடியும். அவை உடனே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.

வோட்டாளர் குறிப்பில் (poll book) பெயர் இல்லாதவர்கள் ஓட்டு போட வந்தால் எலக்‌ஷன் சட்டமுறைகளிலுள்ள செக்லிஸ்ட் ஒவ்வொன்றையும் சரிபார்த்து அவர்கள் provisional ballots மூலம் ஓட்டு போட முடியும். அவை எலக்‌ஷன் கமிஷனர்ஸ்  மற்றும் அப்சர்வர்ஸ் (3, 5, 7 ... மாநிலங்கள் சட்டப்படி) முன் பரிசீலனை செய்யப்பட்டு முடிவுசெய்யப்படும்.

எலக்‌ஷன் முடிந்து இரண்டு நாள் கழித்தும் ரிசல்ட் தெரியலை என்று வருத்தப்படுபவர்களுக்கு, குறை கூறுபவர்களுக்கு, நான் சொல்ல வருவது: ஒவ்வொருவரும் போராடிப்பெற்றது ஓட்டுரிமை. ஓவ்வொரு ஓட்டையும் முறையாக பரிசீலித்து ஒவ்வொன்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியது ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தின் கடமை. Every vote counts. Hail our democracy.  அது எவ்வளவு நாட்களானாலும்.

அடுத்த பதிவில் தொடரலாம்!

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 1

அமெரிக்க தேர்தல் 2020

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபர், செனட், காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர் முதல் மாநில பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. இன்றைய pandemic காலகட்டத்தில் இது மாதிரி ஒரு தேர்தலை நடத்துவது எளிதான காரியமில்லை. நடத்தியதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி.

நடந்து முடிந்த தேர்தல் பல உலக நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களை விட இந்த தடவை மிக அதிக அளவில் மக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த 10-12 வருடமாக ஓட்டு போடாதவர்கள், மற்றும் தேர்தல் பற்றி இதுவரை கவலைப்படாத பல இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு ஓட்டளித்துள்ள ஒரு மிகவித்தியாசமான் தேர்தல் இது.

முதலில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் கிடைப்பதே அரிதான சூழ்நிலையாக மாறிப்போன ஒன்று இந்த கொரோனா காலம். பெரும்பாலும் ரிடையர் ஆன வயதானவர்களே தேர்தல் நடத்த உதவுபவர்கள், இந்த தடவை அவர்கள் வரவில்லை. பல தேர்தல்களில் என்னுடன் அதிகாரிகளாக வேலை செய்தவர்கள் கொரோனா பயத்தில் வரவில்லை.

புதிய அதிகாரிகள் அநுபவமற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ட்ரைனிங் ஆன்லைனில் மட்டுமே கொடுத்து ஒரு தேர்தல் வேலையில் இறக்கி, முறையான பாதுகாப்பு முறைகளை இக்கொரோனா காலத்தில் கடைபிடித்து நடத்துவது மிகப்பெரிய கடினமான வேலை. அதையும் மிகத் திறமையாக செய்துள்ளனர். வந்த பல புதிய அதிகாரிகளுக்கு கூட இருக்கும் அநுபவமுள்ள அதிகாரிகளே தேர்தலிடத்தில் பலவற்றை சொல்லித்தர வேண்டிய கட்டாயம்.

தேர்தல் அதிகாரிகள் கிடைக்காத பல இடங்களில் தேர்தல் சாவடிகள் குறைந்து போக இதுவும் காரணம். சிலர் நீண்ட க்யூ, திட்டமிட்டு தேர்தல் சாவடிகள் குறைப்பு என்று கருதுகின்றனர். 

இதுவரை நடந்த தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு குறைந்தது 3 மணி நேரம் நேரில் ஒரு வகுப்பில் ஒரு ட்ரைனர் முன் நடந்தது. என்னைப்போன்றவர்களுக்கு 6 மணி நேர இரண்டு பகுதி ட்ரைனிங். இவையனைத்தும் இந்த கொரோனா காலத்தில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த 3 மணி நேர 6 மணி நேர ட்ரைனிங் எல்லாம் இப்ப ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டியதாகிவிட்டது.

பல தொலைதூர countyகளில் மிகவேகமாக இயங்கக்கூடிய இன்டர்நெட் வசதி இன்றும் சில ஊர்களில் இல்லை. அந்த ஊர்களில் பகுதிகளில் ட்ரைனிங் நேரில் கொடுக்க முடியாத சூழ்நிலை சில countyகளில்.

தேர்தல் சாவடியில் குறைந்தபட்சம் டேபுள் துடைக்க ஆள் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் ட்ரைனிங் எடுக்கனும். இது உதாரணத்திற்குச் சொன்னாலும் அனைத்து அதிகாரிகளும் எல்லா வேலையும் செய்யனும். கதவு இடுக்குகளைத் துடைப்பது, ஓட்டு போடும் இடங்களை ஒவ்வொருத்தரம் வந்து போன பிறகு ஒவ்வொரு டேபுள் நாற்காலியையும் சானிடைஸ் பண்ணனும். சாதாரணமாக ஏழெட்டு பேர் வேலை செய்யும் சாவடியில் இந்த தடவை 10-12 பேர் வேலை செய்தனர்.

நெருங்கிய மக்கள் தொகை இருக்கும்இடத்தில் சாவடிகள் கம்மி என்று குறைகூறுவது சுலபம். வேலை செய்ய ஆட்கள் தேவை. ட்ரைனிங் எடுத்தவர்கள் மட்டுமே தேர்தலில் வேலை செய்யமுடியும் என்பது சட்டம். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த 3-6 மணி நேர ட்ரைனிங் அவசியம் என்பதும் சட்டம்.

ஓட்டு போட வரும் ஒவ்வொருவருக்கும் மாஸ்க் மற்றும் பேனா ஒருத்தர் எடுத்துக் கொடுக்கனும். அதை மக்கள் கீழே போடாமல் அவர்களை எடுத்துச் செல்ல வைக்கனும். இல்லாவிட்டால் அவற்றை முறையாக எடுத்து குப்பையில் போடனும். இதுவரை நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் எலக்‌ஷனில் வேலை செய்யும் ஆட்களுக்கு/அதிகாரிகளுக்கு டபுள் மடங்கு வேலை. ஆட்கள் குறைவு கூட.

போஸ்டல் ballot பற்றி அடுத்த வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அமெரிக்க தேர்தல் 2020

ஜனநாயகத்துல முக்கியமானது ஓட்டு போடுவது. ஓட்டு போட்ட பிறகு யாரு ஜெயிப்பாக யாரு தோற்கனும்ன்னு தாயகட்டை உருட்டறது ஒரு சுகம். என்ர சுகம் தேர்தல் அன்னிக்கு தேர்தல் அதிகாரியாகப் போய் மக்களுக்கு உதவுவது.

இந்த தடவையும் எங்க ஓட்டுச்சாவடியில தேர்தல் அதிகாரியாகப் போனேன். முதல்ல மொத்த சாவடிக்கு chiefஆகப் போறயான்னு கேட்டாங்க. முன் அனுபவம் இல்லைன்னு அவங்க கிட்டு சொல்லிட்டு, கொடுத்தால் சரி செய்யறேன்னேன். நம் கீழ 10-12 எலக்‌ஷன் அதிகாரிகள் வேலை செய்வார்கள். வேற ஒருவர் கிடைத்ததால், நான் இப்ப கொடுத்திருக்கிற வேலையைச் செய்தாப்போதும்ன்னுட்டாங்க. இதுக்கு முன்னாடி எலக்‌ஷ்ன்ல நீ வேலை செய்தப்ப இருந்த ஒரு சீஃப் ஜட்ஜ் உன்னை ரெகமண்ட் பண்ணியதால் உன்னைக் கேட்டோம்ன்னாங்க.

ஆனால் பாருங்க, இந்த சந்திராஷ்டமம் அன்னிக்குப் போய் இந்த வேலைக்குப் போனால் சந்திராஷ்டமம் சும்மா இருக்குமா! 

அம்மிணி விடியற்காலையில் என்னை ஓட்டுச்சாவடியில் விட்டு விட்டு தான் ஓட்டு போட வரிசையில் நிற்க, 

6.30 மணிக்குத் திறந்த ஓட்டுச்சாவடியில் வந்த முதல் ஆளே என்கிட்ட வந்த ஆளு செமையா பிடிச்சு வெளுத்து வாங்க, அம்மிணிக்கு ஒரே ஆச்சரியம், பயம். அம்மணி உள்ள வந்ததைப் பார்த்தேன், ஆனால் எப்ப வெளியப்போனாப்புலன்னு பார்க்கக் கூட நேரமில்லை. சந்திராஷ்டமம் வெளுத்து வாங்குறான் மனுசன்.

பத்து வருசமாக ஓட்டுச்சாவடிக்கே வராத மனுசன், கடைசியாக ஓபாமா காலத்துல ஓட்டு போட்ட ஆளு, நேத்து வந்து எங்கடா என் ஓட்டுன்னு கேட்க, அவனுக்கு உதவிய அதிகாரிகள் என் கிட்ட அனுப்பிட்டாங்க. மனுசனுக்கு சக்க கோவம். 

காலையில 6.30 மணி, முதல் ஆளு என் கிட்ட, சந்திராஷ்டமத்தின் உக்ரத்தோட, எங்கயா என் பேருன்னு கேட்க, எல்லாம் வெளிறிப்போச்சு எனக்கு. 

எலக்‌ஷன் கமிஷன் ஆபீஸுக்கு முதல் ஆளா போன் பண்ணி, இந்த ஆளுக்கு என்ன பண்ணன்னு கேட்டு, எலக்‌ஷன் சட்டப்படி அந்த ஆளுக்கு ஓட்டு போட உதவி செய்யறதுக்குள்ள அடுத்த இரண்டு பேரை என் கிட்ட அனுப்பிட்டாங்க! என்னடா இன்னிக்கு விட்டு வாங்கப்போவுதுன்னு நினைச்சேன்.

மற்ற அதிகாரிகள் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, அதுக்குத்தான் நாங்க அந்த வேலையை நாங்க எடுத்துக்கிறதில்லைன்னு எனக்கு அவங்க அறிவுரை சொல்ர மாதிரி சொல்ல, வாழ்க்கையில எவ்வளவோ சந்திராஷ்டமங்களைப் பார்த்து நிந்தனைகளை எதிர்கொண்டு வந்தவனுக்கு இதெல்லாம் ஜுஜுபியா!

இந்த தேர்தலில் எவ்வளவு அநுபவம். ஓட்டுச்சாவடிப் பக்கம் பத்து பன்னிரெண்டு வருசமா வராதவங்கெல்லாம் (மூனு கேஸுக்கு மேல) ஓட்டுச்சாவடி பக்கம் வந்து ஓட்டு போட வர்றாங்க!

அனைவருக்கும் உதவுவதே ஒரு ஜனநாயகக்கடமை!

ஜனநாயக கடமையாற்றிய ஒரு நிறைவோடு!

Monday, November 2, 2020

அசரீரி வாழ்த்தில் நனைகையில்

 டின்னர் சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியாக தட்டு எடுத்துகிட்டு வந்து டைனிங் டேபுள்ள உட்கார்ந்தேன். நல்லப்பையனா முன்னாடியே டிஷ் லோடு வேறபண்ணியாச்சு. சிக்கல் எதுவும் வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தேன்.

தோசை வார்த்துகிட்டு இருந்த அம்மணி திடீர்ன்னு ஏதோ சொல்ல, exhaust fan சத்தத்துல ஒரு அசரீரியாட்டும் வந்து விழுந்துச்சு.

அம்மணி முகத்துல சிரிப்போட வேற வந்துச்சா : how come you are always perfect in judging people and say in advance ன்னாப்புல.

பக்குன்னுச்சு. என்னடா ஒன்னுமே சொல்லலை. வசிஷ்டர் வாயில பிரம்மரிஷின்னு வந்து விழுவது. நாளைக்குத் தானே சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு பார்த்தேன். இது என்ன pre-existing conditions மாதிரி வந்து விழுதுன்னு நினைச்சேன்.

வாயில உள்ள போன தோசை தொண்டையிலேயே நின்னுருச்சு.

என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்த அம்மிணி சிரிச்சுகிட்டே சொல்றாப்புல, அன்னிக்கு வீணைக்கச்சேரிக்குத் தாளம் போட என் நண்பியைக் கூப்பிட்டேன், அப்ப அதெல்லாம் வேணாம்; இத்தனை வருசமா வாசிக்கிற சரளமாக வரவேண்டாமா, வேணும்ன்னா ஃபோன் appஐ வச்சு சவுண்ட் கம்மியாக வச்சு தாளம் போட்டுக்கன்னு சொன்ன, நான் கேட்கலை அப்பன்னாப்புல.

அதுசரி. இப்ப என்ன அதுக்குன்னேன்?

இல்லை. நாலு நாளா உன் கிட்ட சொல்லலை, சொன்னா திட்டுவன்னு. நீ சொன்ன மாதிரியே அந்த நண்பி தப்பு தப்பா தாளம் போட நான் தடுமாறிட்டேன். பக்கவாத்தியம் மிருதங்கம் சின்னப்பையன், அவன் கூட அந்த தாளத்தைத் தவிர்த்துட்டான். 

தாளம் தப்பா போட்டது மட்டுமல்ல, பின்னாடி உடனே ஃபோன்ல கூப்பிட்டு நீ இந்தந்த இடத்துல எல்லாம் கேப் விட்டு வாசிச்சுட்டேன்னு சொல்றா! எனக்கு தலையே சுத்துது ஒன்னும் சொல்ல முடியலைன்னாப்புல.

எப்படி உன்னோட லைப்ல இப்படி பர்பெக்டாவே எல்லாத்தையும் வச்சுக்கிறன்னாப்புல, மறுபடியும்.

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எனக்குன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது. சந்திராஷ்டமம் சீக்கிரம் கூட துவங்குமா, இல்லை இந்தியா டயத்துக்கு இங்கிட்டு எபக்டா!

தொண்டையில நின்ன தோசை அதுவும் துப்பாம உள்ள இறங்கிடுச்சு!

அம்மாடி!

வாழ்வினிது.

Friday, October 30, 2020

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்

ஏணிப்படிகளில் ஏற நினைப்பவனுக்கு 
ஒவ்வொரு படியும் 
ஸ்திரமான நம்பிக்கை.

மேலிருந்து நோக்கின் 
படியேறுபவனின் தடுமாற்றங்கள் 
குடிகாரனின் பாதங்கள்.

நாம் நோக்கும் பாதை
நமக்களிக்கப்படும் மாயை
எளிதில் வழுக்கும் சரிவு!

வாழ்க்கையில் கற்கும் நல்லவை
நம் படிகளின் ஸ்திரங்கள்
கொடுப்பவைகள் நம் முதிர்ச்சி!

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்!

Sunday, October 18, 2020

வெற்று அப்ளிகேஷனின் தயவில்

 பத்தாவது வரைக்கும் சுகமாக தமிழ் மீடியத்துல படிச்சு வந்தேன். தமிழகத்தில் ப்ளஸ் 2 துவங்கிய இரண்டாவது பேட்ச். பெரியண்ணன் நேரா கொண்டு போய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்து விட்டான். ஆங்கிலம் கத்துக்கலைன்னா வாழ்க்கையில உருப்பட முடியாது ஒழுங்கா இதுலேயே இருன்னு மிரட்டல் வேற. அப்பா அம்மா படிப்பு பத்தி ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, இத்தனைக்கும் அப்பா ஒரு அக்கௌண்டன்ட் வேற.

தட்டுத்தடுமாறி படிச்சு முடிச்சு காலேஜ் போக அப்ளிகேஷன் வாங்கி பூர்த்தி பண்ணனும். வாங்கின 4 காலேஜ் அப்ளிகேஷனும் இங்கிலீஷ்ல இருக்கு. பெரியண்ணனுக்குத் தான் வூட்டுல இங்கிலீஷ் தெரியும். அவன்ட்ட போனா திட்டு அடி தான் விழும்.

அதுக்கு பயந்து வெறும் பெயர் அட்ரஸ் மட்டும் ஃபில்லப் பண்ணி, எந்த கோர்ஸ் எடுக்கனும்ன்னு கூட தெரியாத காலம் அது, திருச்சி ஜோசப் கல்லூரிக்கும் இன்னும் இரண்டுக்கும் அனுப்பினேன். அண்ணன்ட்ட சொல்லலை.

அவன் என்னை சென்னைக்குக் கூட்டிப் போய், சென்னையிலத் தான் படிக்கனும், நல்லா ஆங்கிலம் பேசக்கத்துக்க இங்க தான் முடியும் வான்னு இழுத்துகிட்டு்போய், விவேகானந்தா, பிரசிடன்சியில சேர்க்கனும்ன்னு சொல்லி, என்னைக் கூட்டி அலைஞ்சு ஒன்னும் கிடைக்காம ஊர் திரும்பி வந்தோம்.

ஊர் திரும்பின மறுநாள் திருச்சி ஜோசப் கல்லூரியிலேர்ந்து நான் அரைகுறையாக அனுப்பின அப்ளிகேஷன்லேர்ந்து தேர்ந்தெடுத்து, முதல்ல பி ஏ சரித்திரம் கொடுத்து, அதை அவங்களே அடித்து, புள்ளியியல் மாத்திக் கொடுத்து அனுப்பின போஸ்ட் கார்ட் வந்தது.

பெரியண்ணன் முகத்துல கடுவன் பூனை, அவன்ட்ட சொல்லாமப் போட்டது, இன்னொரு பக்கம் இவ்வளவு சுத்தியும் சென்னையில அலைஞ்சு கிடைக்காம வந்தும், இவன் ஒன்னும்ந்தெரியாம நல்ல காலேஜ்ல வாங்கியிருக்கானேன்னு சந்தோஷமும் கூட.  ஒழுங்காப்படின்னு போயிட்டான். அடி வாங்காம தப்பிச்சோம்டான்னு சந்தோஷம்.

இப்ப இதுவெல்லாம் நினைக்கக் காரணம், பையன் இப்ப காலேஜஸ்க்கு அப்ளை பண்றான். அப்பனுக்கு ஒன்னுந்தெரியாதுன்னு நினேச்சு தானே கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அவன் ப்ரெண்ட்ஸ் வச்சு எல்லாத்தையும் பண்ணிகிட்டு, கடைசியில துட்டுகட்டும் போது உங்கிட்ட வர்றேன், அப்ப நீ அப்ளிகேஷனைப் பார்த்தா போதும்கிறானே!

அப்ளிகேஷனைக் கடைசியில காண்பிக்கும் போது அவன்ட்ட அம்புட்டு சரக்கு இருப்பது தெரியுது. 

மவனே! உன்ர அப்பனுக்கு ஒன்னுந்தெரியாம வாடா இம்புட்டு வருசம் வாழ்ந்திருக்கேன். நாம வேலைக்கு அப்ளை பண்ற நம்ம ரெசூமே மாதிரி காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளை பண்றானுக! அம்புட்டு சரக்கோட அப்ளை பண்றானுக. 

வெத்து அப்ளிகேஷனை வெறும் பேரும் அட்ரஸும் மட்டும் போட்டு படிச்சுபுட்டு வந்தேன்! அது ஒரு கனாக்காலம்!

அமெரிக்க வாழ்வின் தேவை

 ஒவ்வொருத்தரும் ஒரு நாட்டுல ஒரு குறைந்தபட்ச வசதியோடு அடிப்படை தேவையோடு வாழ்வதற்கு ஏதாவது ஒரு விதத்துல தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அது ஒரு நாட்டில் இறங்கியவுடன் அந்த நாட்டில் எது முதலில் தேவைப்படும் என தெரிந்து கொண்டு அதை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒன்று, அமெரிக்காவில் வாழ்வதற்கு, ஒரு குறைந்தபட்ச அடிப்படை வாழ்வு வாழ்வதற்கே தேவையானது, இன்சூரன்ஸ். 

இன்சூரன்ஸ் இன்றி அமெரிக்காவில் வாழ்வது சாத்தியமில்லை. இல்லாமல் இருந்தால் பிரயோசனமில்லை, என்றாவது ஒரு நாள் கடும் சிக்கலில் மாட்டுவது தவிர்க்க இயலாது.

எனக்கு 20 வயது தான், 30 வயதிற்குள் தான், 40ற்குள் தான், 50ற்குள் தான். அதனால் சில basic இன்சூரன்ஸ் எடுத்தா போதும். பின்னாள் தேவைப்படும் போது மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதெல்லாம் தவறு. முட்டாள் தனம்.

அமெரிக்காவில் அக்டோபர் 15லிருந்து துவங்கும் ஓபன் என்ரோல்மெண்ட் பீரியட் சில இடங்களில் அக்டோபர் கடைசியிலோ, நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ முடியலாம். இது அடுத்த வருடத்திற்குத் தேவையான இன்சூரன்ஸிற்கு இப்போதே தன்னையும் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் பதிவு செய்து கொள்வது. இந்த ஓபன் என்ரோல்மெண்டை தவறவிட்டால் பின்னர் ஏதாவது ஒரு லைஃப் சேஞ்சிங் ஈவன்ட் அப்ப தான் மாற்ற முடியும்.

இது அமெரிக்காவில் அனைவருக்கும் மிகவும் தேவையானது. நமது சம்பளத்தில் இது ஒரு கணிசமான தொகையாக இருந்தாலும் இதை தவிர்க்காமல் கண்டிப்பாக எடுக்கனும்.

கீழ்கண்டவை அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் தேவை. இதைத் தவறவிட்டால் இழப்பு அதிகமாக இருக்கும், இவையனைத்தும் இருந்தால் இடர்காலத்தில் போண்டியாகாமல் நாம் நமது குடும்பம் மீண்டு வர ஏதுவாக இருக்கும்.

கீழ்கண்டவற்றில் பெருமளவில் என் சொந்த அநுபவத்தில் எடுத்து ஆபத்திலிருந்து மீண்டவை. இப்போதும் தொடர்கிறது.

1. Health insurance that covers pre-existing conditions

2. Life insurance ( term life or whole life)

3. Critical health insurance (that covers heart attack, major surgeries, cancer, etc)

4. Cancer insurance 

5. Accident and Death insurance 

6. Disability insurance 

7. Sports and special games insurance if the family members participate in any school games or professional games 

8. Flexible spending account to keep aside some amount to cover our deductibles and coinsurance.

9. Child day care spending account if you have qualifying children.

10. Home insurance and apt rental insurance 

11. Auto insurance.

12. Long term care insurance 

இவையனைத்தும் இங்கு பாதுகாப்பாக வாழ அனைவருக்கும் தேவை. மாதம் 500$லிருந்து 1000$க்கு மேல் கூட இது வரலாம்.  நமது சம்பளத்தில் இது ஒரு பெருந்தொகையாகக்கூட (one-third) நிற்கலாம். இவை அமெரிக்க வாழ்வின் அத்தியாவசியமானது. நிரந்தரத் தேவை. தவறாமல் எடுக்கனும்.

இவை மட்டுமே இடர்காலத்தில் நம்மை, நம் குடும்பத்தைக் காப்பாற்றும். 

1/3 - வீடு

1/3 - இன்சூரன்ஸ்

1/3 - வாழ்க்கையில் பிறவற்றிற்கு

வரக்கூடிய ஓபன் என்ரோல்மண்ட் பீரியடைத் தவறவிட்டு விடாதீர்கள்.

நம்மைக் காப்போம். நம் குடும்பத்தைக் காப்போம்.

Friday, September 25, 2020

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை

தசையின் ஓய்வில் ஓர்இசை!

தசை தேடிய அமைதியில் ஓய்ந்த இசை
இசையில் அழைத்தவை பல கோடுகள்
ஒவ்வொரு இழையும் பிழியும் உணர்வுகள்
தசையதனை மாற்றி ஓய்ந்தது இசை!

உள்ளம் உருக வேதமாய் ஒலித்த கீதங்கள்
அலை போல் ஆர்ப்பரிக்கும் மன ஓசைகள்
அழகிய அடுக்குகளாய் கொடுத்த சாதனைகள்
சந்தம் ஏற்ற இறக்கத்தில் மலரும் மலர்கள்!

தன் பாடல்களை அசை போடுகையில்
மறவாமல் இசைத்தவரை ஆராதிக்கும் சமர்பணங்கள்
இசை படைப்பவரின் ஞானம் கொடுப்பவரின் ஆலிங்கனம்!

குழந்தைப்பருவம் முதல் கிடைத்த அமுதகீதங்கள்
அலைகடலாய் பெருகி வளர்ந்த நம் காலங்கள்
ஒவ்வொரு பருவமும் அவர்தன் பாடலின் வழியாக
நாம் பெற்ற வரம் வளரும் காலத்தில் கிடைத்த
இம்மகானுபாவலுவின் குரல் இசை!

பலகோடி மக்களின் மனதில்
நீங்காத நினைவாய் நிற்கின்ற பாடல்கள்
பொழுதன்றும் அசைபோடும் நம் மனதில்
அமரராய் நிற்கப்போகும் குரலுக்கு நம் அஞ்சலிகள்!

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை!

Thursday, September 10, 2020

நினைவலைகளாய் மாறிப்போன நட்பு

அம்மாவோட இயற்கையான மரணத்திலிருந்து இன்னும் விடுபட முடியலை. தினமும் அம்மா அப்பாவின் நினைவுகள் இரவில் கனவில் அவர்களுடன் இருந்த குழந்தைப் பருவத்தையே நிழலாய்க் கொண்டு வருகிறது.

அதிலிருந்து மீண்டுவருவதற்குள் இங்கே உள்ளூரில் ஒரு நண்பரின் அகால மரணம் மிகவுமே பாதித்து விட்டது.

போன மாதம் இதே நாள் அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்டு போன் பண்ணினார். பத்து நிமிடத்திற்கும் மேல் அவரோடும் அவர் குடும்பத்தோடும் பேசிக்கொண்டிருந்தேன். அவரே போன் பண்ணி ஒரு உதவி கேட்க, முடிந்தவரை தெரிந்த தகவல்களைச் சொன்னேன். அன்றிலிருந்து துவங்கி பத்து நாட்களில் ஐந்து ஆறு முறை பேசியுள்ளோம். அது அவர் என்னிடம் கேட்ட அவரது கடைசி ஆசையாகிப் போய்விட்டது. அவற்றை நிறைவேற்றி வைக்கக்கூடிய அளவிற்கு கூட ஒரு கையாலாதவனாகிவிட்ட வருத்தமே இப்போது மிஞ்சி நிற்கிறது.

இரண்டு வாரம் முன் மாலையில் வாக்கிங் போகும் போது ஒரு மனநோயாளியால் ஐந்து முறை சுடப்பட்டு அகால மரணம். இரண்டு நாள் கழித்து தமிழ் சங்கத்திலிருந்து வந்த ஈமெயில் மூலம் தான் அவரது மரணமே எனக்குத் தெரிந்தது. கேட்ட இரண்டு மணி நேரம் மிகவும் துடித்து விட்டேன். மரணத்தை துளி கூட ஏற்க முடியவில்லை. பையனும் மனைவியும் என் நிலை கண்டு அசந்தே போய் விட்டனர். அந்தளவுக்கு பாதித்து விட்டது.

எப்போதும் மலர்ந்த முகத்தோடு எதையும் மிகவும் பாசிடிவ்வாக பேசுவது மட்டுமல்ல, ஒரு அழகிய தூய கொங்கு தமிழில் அன்போடு அவரது பேச்சு வந்து விழும். பேச்சில் அவ்வளவு அன்பு, தெளிவு இருக்கும.

என் பையனும் அவர் பெண்ணும் தமிழ் வகுப்பு போன போதெல்லாம் அந்த 4-5 ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிறு மதியமும் வகுப்புகள் முடியும் வரை வெளியில் உட்கார்ந்து பேசுவோம். என் blog படிச்சுபுட்டு வந்து இன்னும் நிறைய எழுதுங்க, உங்களுக்கு எழுத வருதுன்னு ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். நான் அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லைங்கன்னு நழுவிடுவேன். ஸ்டாக்ஸ் பத்தி பேசியிருக்கோம், இணையம் பற்றியெல்லாம் பேசியிருக்கோம்.

உள்ளூர் தமிழ் சங்கத்தில் தலைமைப் பொறுப்பாலர்களில் ஒருவராக இருந்தார். போன வருடம் ஜூலையில் சி மகேந்திரன் ஐயாவும் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் வந்த போது அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல், ஸ்டாலின் குணசேகரனிடம் நான் எழுத்தாளர் என அவர் சொல்ல, ஸடாலின் குணசேகரன் என்னை ஏதோ பெருசா நினைச்சு அவர் விசிடிங் கார்ட் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்ல எனக்கு ஒரே embarrassing ஆகப் போயிருச்சு! ஏன் செல்வா அவ்வளவு பெரிய மனிதர்களிடம் அப்படி சொல்றீங்க, இதெல்லாவற்றிற்கும் எனக்கு தகுதியில்லைன்னு சொன்னா, உங்களால் முடியும்ங்க செய்யுங்கன்னார் செல்வா! எதையும் பாசிடிவ்வாகவே பார்த்து பேசியவர். அமைதியாகவே இருந்து விட்டேன்.

இதற்கு முன் எழுத்தாளர் ஜெயமோகன் இரண்டு வருடம் முன் வந்த போதும் அவர் கூட்டத்தில் நானும் செல்வாவும் கலந்து கொண்டோம். கையிலிருந்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புத்தகங்களில் ஜெயமோகன் கையொப்பத்தையும் பெற்று வந்தேன். அப்போதும் செல்வாவுடன் பேசி விட்டுதான் வந்தேன்.

எப்போதும் அவரே தான் தொடர்பு கொள்வார். பேசுவார். பேச்சில் கொங்கு தமிழ் கவர்ந்திழுக்கும்.

இப்படி ஒரு மிக ஜாலியான மனிதரின் அகால மரணம் அதுவும் சமீபத்தில் போன மாதம் பேசி உறவாடியவரின் மரணம் ஒரு ஒரு வார இடைவெளியில் நடந்ததின் பாதிப்பிலிருந்து மீள கஷ்டமாக இருந்தது.

இறந்து ஒரு வாரம் கழித்து நடந்த இறுதிச் சடங்கில் இருமுறை உடலருகில் சென்று ஒரு சுற்று சுற்றி வந்து அஞ்சலி செலுத்தி வந்தேன். எப்போதும் தலைநிமிர்ந்து கம்பீரமாக சிரித்துப் பேசுபவரின் முகம் கறுத்துப் போய் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்தது மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது. நான் கொண்டு போன ரோஜா மலர்க்கொத்து மற்ற மலர்களோடு அவரது காலடியில் கிடத்தப்பட்டு அதுவும் ஒன்றாகவே எரியூட்டப்பட்டு மண்ணோடு மண்ணாய்ப் போனது.

ஒரே சம வயதுடையவரின் மலர்ந்த நட்பு இனி நினைவலைகளாக மட்டும் நின்று விட்டது!

Sunday, August 23, 2020

முதல் சம்பளம் ஒரு கனாக்காலம்

1987ல pgdca முடிச்ச கையோட மறுநாள் கிளம்பி நானும் அப்பா அம்மாவும் சேலத்தில் ரயிலேறி கொச்சின்-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் அஸ்ஸாம் போயி இறங்கியாச்சு.

போய் இறங்கி 10-20 நாள் கூட வீட்டுல சும்மா இருக்க விடாம என் அண்ணன் அங்க ஒரு ஃபேமஸ் சிஏ கிட்ட இவனே இவ்வளவு சம்பளம் கொடுத்தா என் தம்பியை அனுப்பறேன்னு சொல்லி அவர்ட்ட மாசம் 1000 ரூபாய் சம்பளத்துக்கு அனுப்பிவிட்டான். அப்ப டிஸ்பூர் பக்கத்துல நாங்க இருந்த 2 பெட்ரூம் அபார்ட்மண்ட்டுக்கு 700 ரூபாய் வாடகை! போக வர பஸ் சார்ஜ் 100 ரூபாய்.

சிஏ அங்க ரொம்ப பிரபலம். பல டீ எஸ்டேட் முதலாளிகள் ஒரு மூட்டையில சிங்கிள் என்ட்ரி அக்கௌண்டிங் நோட் புக்குகளை கொண்டு வருவாங்க! சிஏ கீழ ஏகப்பட்ட சிஏ மாணவர்கள். பெரும்பாலோர் ஜெயின்ஸ்/மார்வாடீஸ். 

சம்பாஷனைகள் எல்லாம் ஹிந்தியில். எனக்கு ஹிந்தி ஒரு வார்த்தை கூட தெரியாது. ஏக் காவ் மேம் படிச்சது கூட 8-10 வயசுல. எங்க போனாலும் விழி பிதுங்கறது தான். பரிதாபப்பட்டு ஆங்கிலத்தில் சொல்வாங்க!

சிஏ ஒரு சின்ன கம்ப்யூட்டர் டப்பா வாங்கி வச்சிருந்தார். ஃப்ளாப்பி டிஸ்க் 5-6. கம்ப்யூட்டர் மெமரி 64கேபி தான். மண்டபத்துல யாருக்கும் அதை ஆன் ஆஃப் பண்ணக் கூட தெரியாது! மூன்ற ஏசி ரூம்ல ஒன்னு அவருக்கு, ஒன்னு அவர் தம்பி (சிஏ), இன்னொன்னு இந்த புனித கம்ப்யூட்டருக்கு.

விண்டோஸ் 3 ஆபரேட்டிங் சிஸ்டம். காலையில போனா ஒன்னு இரண்டு பாலன்ஸ் ஸீட் டைப் பண்ணி வந்து என் கிட்ட கொடுத்து இதை கம்ப்யூட்டர்ல போட்டுக் கொடும்பாங்க. பைனான்சியல் அக்கௌண்டிங் சாஃப்ட்வேர் இந்தியாவுல இன்னும் வரலை. அந்த பாலன்ஸ்ஸீட்டை ஒரு வேர்ட்பேட்ல டைப் பண்ணிக் கொடுப்பேன். அதைக் கொண்டுபோய் இது கம்ப்யூட்டர் ஜெனரேட்டட், சயின்டிஃபிக்ன்னு சொல்லி அவங்க கிட்ட நிறைய கறந்துருவாங்க!

ஒரு கட்டத்துல இது புரிய ஆரம்பிக்க, அவரிடம் சார் இது டைப்பிங் மிஷன்ல பண்ணாலே போதுமே, எதுக்கு கம்ப்யூட்டர்னனு கேட்டா, கம்ப்யூட்டர்ல் டைப் பண்ண ஷீட்டுக்கு வேல்யூ ஜாஸ்தி நீ சொன்னதைச் செய்யுன்னுட்டார். 

2 மாதத்தில் சிலது இம்ப்ரூவ் பண்ணிக்கொடுக்க,  அவர் இனி அக்கௌண்டிங் சாஃப்ட்வேரை நீயே எழுது, உனக்கு சுளையாக 1000 கொடுக்கிறது அதுக்குத்தானுட்டார். சார் இது இந்த கம்ப்யூட்டரில் சாத்தியமில்லை. அக்கௌண்டிங் சாஃப்டேவேர் விக்கறாங்க, அதை வாங்கி ட்ரை பண்ணலாம்ன்னேன். அவன் 15000-20000 கேட்கிறான். நீ எழுதுன்னுட்டார்.  சிம்பிள் அக்கௌண்டிங் புரசீஜர்ஸ் தெரியாம என்னத்த எழுதறது. எல்லாம் சிங்கிள் என்ட்ரி லெட்ஜர்ஸ். 

ஒன்னு இரண்டு ப்ரோக்ராம் எழுதி கொடுத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்த்து அரசுவேலை பக்கம் நகர்ந்துவிட்டேன்.

சில வருடங்களில் உல்ஃபா இவர்களை டார்கெட் பண்ண சிஏ ஃபார்மை மூடிவிட்டு அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டுப் போய் விட்டனர். ஊர் டவுன்டவுன் ஃபான்சிபஜாரில் பல அடுக்குமாடி கட்டடங்கள் இவர்களிடமிருந்தது!

முதல் சம்பளம் பத்தி கேட்டதில் வந்த நினைவலைகள்!

Sunday, June 14, 2020

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி

வாட்சப் போனா எல்லா க்ரூப்லையும் அந்த நடிகரின் தற்கொலைக்கு இரங்கல் செய்திகளாகவே இருக்கு! இங்க முகநூலிலும் அதுவே! ஆனால் அவங்க மேனேஜர் இறந்தப்ப கூட இவ்வளவு இரங்கல்பா வரவில்லை! அது இனி தடம் மாறிப் போகலாம்.

பொதுவான காரணம் சொல்லப்படுவது ‘மன அழுத்தம்’ தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என.

அம்மா தான் மனதில் வருகிறார்கள். பிறந்த சிறிது நாட்களிலேயே வறுமையை பார்த்துப் பழகிய ஏழ்மை நிலை. திருமணம் ஆன பின்னும் தொடரும் கவலைகள் குடும்ப கஷ்டங்கள். 20-21 வயதில் திருமணம் ஆகி வந்த பின்னும் வந்த இடத்திலும் இரண்டு நாத்தனார்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் பிரசவங்களையும் தன் வீட்டில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம். தொடரும் குடும்பச் சுமைகள் ஏழ்மை இல்லாத நாட்களே கிடையாது!

சுமைகளை இறக்க ஒரு சுலபமான வழி வைத்திருந்தார். அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய் அர்ச்சனைத் தட்டில் 5 பைசா போட்டு தன் சுமையை அந்த தொந்திப் பிள்ளையாரிடம் இறக்கிவிட்டு வந்து விடுவார்.

அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரு வார்த்தை! வாழ்க்கையில கஷ்டம்ங்கிற வார்த்தை விலக ஆரம்பிச்சதே நீ பிறந்ததலிருந்து தாண்டான்னு கடைசி வரை சொல்லி கிட்டு இருந்தாங்க!

எந்தவொரு மனக்கலக்கம் ஏற்பட்டாலும் அம்மா ஓடுவது அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு. அர்ச்சனைத் தட்டில் போடற அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் தன் மன அழுத்தங்களை கவலைகளை வருத்தங்களை இறக்கி விட்டு வந்து விடுவார்கள்.

கடந்த டிசம்பரில் அம்மா படுக்கையில் விழுந்த பின்னும் சொன்னது: டேய் இன்னிக்கு அமாவாசை. வீட்டு பக்கத்திலுள்ள அந்த பிள்ளையார் கோவிலில் 4 கன்னட அர்ச்சகர்கள் இருப்பார்கள். ஆளுக்கு 20 ரூபாய் கொடுத்துர்றா. அதில் ஒருத்தர் வெளியே உட்கார்ந்து பிரசாதம் கொடுப்பார், அவருக்கு கொடுக்காம விட்டுராதே!

இங்க ஒரு டாக்டர் anti-depressionக்கு மாத்திரை எழுதித் தரலாமான்னு கேட்டார். சில சமயம் தேவைப்படுபவர்கள் எடுக்கலாம். சிலருக்கு தேவை கூட. எடுத்தால் செம தூக்கம் வரும். தூக்கத்தில் கவலைகளை மறக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் அனைவரும் தன் கவலைகளிலிருந்து வெளிவர மாத்திரை எடுத்தால் தூக்கத்தில் குடும்பம் நடத்த முடியுமா!

என் அம்மிணியின் stress busters அவரது வீணை வாசிப்பு தான். அதீத கவலைகள், சிரிப்பு, அழுகை, வருத்தம், சண்டைகள் எல்லாம் மறந்து தன்னோட வீணை வாசிப்பில் இறக்கிவிட்டு வந்து விடுவார். ஆட்டம், ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கவலை, அழுகை, சண்டைகள் கொடுக்கும் வலிகள் தன் வீணையின் தொந்தியில் இறக்கிவிடும் ஒரு அபரீதமான anti-depression மருந்து அம்மிணியிடம்.

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி!

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி

வாட்சப் போனா எல்லா க்ரூப்லையும் அந்த நடிகரின் தற்கொலைக்கு இரங்கல் செய்திகளாகவே இருக்கு! இங்க முகநூலிலும் அதுவே! ஆனால் அவங்க மேனேஜர் இறந்தப்ப கூட இவ்வளவு இரங்கல்பா வரவில்லை! அது இனி தடம் மாறிப் போகலாம்.

பொதுவான காரணம் சொல்லப்படுவது ‘மன அழுத்தம்’ தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என.

அம்மா தான் மனதில் வருகிறார்கள். பிறந்த சிறிது நாட்களிலேயே வறுமையை பார்த்துப் பழகிய ஏழ்மை நிலை. திருமணம் ஆன பின்னும் தொடரும் கவலைகள் குடும்ப கஷ்டங்கள். 20-21 வயதில் திருமணம் ஆகி வந்த பின்னும் வந்த இடத்திலும் இரண்டு நாத்தனார்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் பிரசவங்களையும் தன் வீட்டில் வைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம். தொடரும் குடும்பச் சுமைகள் ஏழ்மை இல்லாத நாட்களே கிடையாது!

சுமைகளை இறக்க ஒரு சுலபமான வழி வைத்திருந்தார். அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய் அர்ச்சனைத் தட்டில் 5 பைசா போட்டு தன் சுமையை அந்த தொந்திப் பிள்ளையாரிடம் இறக்கிவிட்டு வந்து விடுவார்.

அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரு வார்த்தை! வாழ்க்கையில கஷ்டம்ங்கிற வார்த்தை விலக ஆரம்பிச்சதே நீ பிறந்ததலிருந்து தாண்டான்னு கடைசி வரை சொல்லி கிட்டு இருந்தாங்க!

எந்தவொரு மனக்கலக்கம் ஏற்பட்டாலும் அம்மா ஓடுவது அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு. அர்ச்சனைத் தட்டில் போடற அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் தன் மன அழுத்தங்களை கவலைகளை வருத்தங்களை இறக்கி விட்டு வந்து விடுவார்கள்.

கடந்த டிசம்பரில் அம்மா படுக்கையில் விழுந்த பின்னும் சொன்னது: டேய் இன்னிக்கு அமாவாசை. வீட்டு பக்கத்திலுள்ள அந்த பிள்ளையார் கோவிலில் 4 கன்னட அர்ச்சகர்கள் இருப்பார்கள். ஆளுக்கு 20 ரூபாய் கொடுத்துர்றா. அதில் ஒருத்தர் வெளியே உட்கார்ந்து பிரசாதம் கொடுப்பார், அவருக்கு கொடுக்காம விட்டுராதே!

இங்க ஒரு டாக்டர் anti-depressionக்கு மாத்திரை எழுதித் தரலாமான்னு கேட்டார். சில சமயம் தேவைப்படுபவர்கள் எடுக்கலாம். சிலருக்கு தேவை கூட. எடுத்தால் செம தூக்கம் வரும். தூக்கத்தில் கவலைகளை மறக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தக் குடும்பத்தில் அனைவரும் தன் கவலைகளிலிருந்து வெளிவர மாத்திரை எடுத்தால் தூக்கத்தில் குடும்பம் நடத்த முடியுமா!

என் அம்மிணியின் stress busters அவரது வீணை வாசிப்பு தான். அதீத கவலைகள், சிரிப்பு, அழுகை, வருத்தம், சண்டைகள் எல்லாம் மறந்து தன்னோட வீணை வாசிப்பில் இறக்கிவிட்டு வந்து விடுவார். ஆட்டம், ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கவலை, அழுகை, சண்டைகள் கொடுக்கும் வலிகள் தன் வீணையின் தொந்தியில் இறக்கிவிடும் ஒரு அபரீதமான anti-depression மருந்து அம்மிணியிடம்.

சுமைகளை இறக்க ஒரு தொந்தி சுமைதாங்கி!

Friday, June 12, 2020

கிளிக்கு இறக்கை முளைச்ச மொமண்ட்

பையனுக்கு 16 வயசு. 11வது படிக்கிறான். கடைசியில ஸ்கூல் மூடியதால ஆன்லைன் கோர்ஸ் மூலமா பள்ளிப்படிப்பு முடியுது. சம்மர் வாலண்டியரிங் பண்ணனும்.

பையன் இரண்டு நாளா சீக்கரம் நல்லபுள்ளையா தானே அலாரம் வச்சு எழுந்து குளிச்சு புதுசா வாங்கி வச்சிருக்கிற மெடிகல் ஸ்கரப்ஸ் எடுத்து போட்டுகிட்டு பெருமையா வாலண்டியரிங்கு கிளம்பிடறான். இன்னிக்கு காலையில ஏழு மணிக்கே புது உடையில கிளம்பியாச்சு. 30 மைல்ஸ் தள்ளி இருக்கிற கிளினிக்குக்கு தானே கார் ஓட்டிப் போய் வரனும்.

நேற்று மதிய இடைவேளையில போன் பண்ணி, டாட் guess what I got to doன்னான். நான் அவன்ட்ட தமிழில் தான் பேசுவேன். சொல்றது புரியலைன்னா ஆங்கிலம். என்னடான்னேன்.

முதல்ல பேஷண்ட் சீட் க்ளீன் பண்ணி வேற உட்கார்ற  ஷீட் மாத்தர வேலை கொடுத்தாங்க ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும். அடுத்து கொஞ்ச நேரத்துல கதையே மாறிடுச்சு அப்பா! பேஷண்ட் ஹிஸ்ட்ரி ரெக்கார்ட் பண்ணச் சொன்னாங்க! ஆர்த்தோ ஷூ ஃபிட்டிங் எல்லாம் பண்ணினேன்னு செம பெருமை! அவங்க எல்லா வேலையும் செய்யக் கொடுக்கறாங்க! சின்ன பையன்னு எடுபுடி வேலை மட்டுமில்லை டாட்ங்கிறான்!

நேற்று காலை எட்டு மணிக்கு கிளம்பி 9 மணியேலேர்ந்து 5 மணி வரை அங்கு வேலை செய்ஞ்சுட்டு வீட்டுக்கு கிளம்பும் போது எல்லாம் பெருமையாக சொல்லிகிட்டே வந்தான். நேரா சீக்கிரம் வீட்டுக்கு வாடான்னேன்.

நோ டாட். ஐ ஹேவ் டு செலிபிரேட் மை டே! ன்னு பெருமையாக சொல்லிகிட்டு போய் கால்ஃப் ரேஞ்ச் போய் அரை மணி நேரம் விளையாடிட்டு வர்றேன்னு போய்ட்டு வர்றான்!

கிளிக்கு இறக்கை முளைச்ச மொமண்ட் இப்ப!

பையன் வளர்கிறான் பெத்த மனம் பித்து என்று

பையன் நாலு நாளா செய்யற வாலண்டியரிங்ல செமையாக முழுகிட்டான். காலையில ஏழு மணிக்குப் போறவன் சாயந்தரம் ஐந்து வரை வேலை செய்து வீடு திரும்ப ஆறாகிறது!

அவன் திரும்பற நேரம் நான் வாக்கிங் போற நேரம்! வழியில ரோட்டுல நிறுத்தி கொஞ்சம் அன்றைய கதையைச் சொல்லிட்டுப் போவான்!

இரண்டு நாளாக ஆர்த்தோ சர்ஜரியை நேர்ல வேற பார்க்கிறான். சர்டிபிகேசன் இல்லாதவங்க சர்ஜரி பக்கம் போக முடியாததால மற்ற வைடிங் ரூம் வேலை மற்றும் பிற வேலைகள் தான். நேற்று ஒருத்தர் மயக்கம் போட்டதைப் பார்த்து கூட இருந்திருக்கான். இன்று இரண்டு மூன்று சர்ஜரிகளை வேற நேரில் பார்த்திருக்கான். 17 டாக்டர்களுக்கு நான் எடுபுடிமான்னு பெருமை வேற!

யாரும் என்னை 16 வயசு பையன்னு நினைக்க மாட்டேங்குறாங்க! ஏதோ 22-24 வயசு பையன் நினைச்சுகிட்டிருக்காங்க! பெரிய டாக்டருக்கு என் வயசு நல்லா தெரியுமான்னான்!

எல்லா பீத்தலும் பீத்திய பிறகு ஒரு குண்டைப் போட்டான் பொடிப்பய!

ஹைஸ்கூல் முடிஞ்ச உடனே அந்த டாக்டர் எனக்கு அங்க வேலை கொடுத்தா ஒரு வருசம் படிப்புக்கு sabbatical எடுத்துட்டு வேலை செய்து மெடிகல் எக்ஸ்பீரியன்ஸோட அப்புறம் தான் காலேஜ் போவேன்னான்.

அம்மிணி உடனே அதெல்லாம் முடியாது! காலேஜ் முடிச்சு தான் வேலை எல்லாம்ன்னு ஆரம்பிக்க, உங்க கிட்ட பேசறது வேஸ்ட்டுன்னு கிளம்பிட்டார் பெரிய மனுசன்!

முடிஞ்சுது கதை! அம்மிணி ஒரே அழுகை! இந்த வயசுல பணத்தைப் பார்த்தா படிப்பு போயிருமேன்னு ஒரே ஒப்பாரி! ஒப்பாரி முடிய 10 நிமிஷமாச்சு!

எல்லாம் கேட்டுகிட்டு அமைதியா நம்ம தொழிலைப் பார்த்து கிட்டு இருந்தேன்! தட்டுல விழற அடையும் தோசையும் நின்னுருமோன்னு!

பையன் வளர்கிறான் பெத்த மனம் பித்து என்று!

அம்மிணி ஆர்டர்

அம்மிணி பண்ற ரகளை தாங்க முடியாது! தினமும் வேலைக்குப் போயிட்டு வர்ற ஆளு கோவிட்னால காஸ்ட்கோ உள்ள போகமாட்டாகளாம். இது என்னய்யா ரீல்வுடறேன்னா, ஆபீஸ்ல தனிக்காட்டு ராணி, யாரும் வர்றதில்லை, கதவு வாசல்ல நின்னு பேசிட்டு போயிடுவாங்கலாம். காஸ்ட்கோ கதை அப்படியில்லையாம். அதனால அங்கு ஆன்லைன் ஆர்டர், வீட்டு டெலிவரி தான்.

இன்னிக்கு காஸ்ட்கோவிலே வாங்கப்போறேன்னு டெக்ஸ்டு வேற. சரி பெரிய மனுஷி நேர்ல போறான்னு நினைச்சா இல்லையாம். அதே ஆன்லைன் ஆர்டர்.

உனக்கு என்ன வேணும்.

எனக்கு முந்திரி வேணும்.

அதுல கொழுப்பு ஜாஸ்தி! தேவையா இப்ப!

உனக்கு இருக்கிறதை விடவா! சரி நானே வாங்கிக்கிறேன்.

சரி சரி பொழைச்சு போங்க.

ஆர்டர் பண்றாலாம் ஆத்தி! இரண்டு மணி நேரத்துல வருதாம், எடுத்து எல்லாம் உள்ள வைங்கன்னு ஆர்டர்.

இந்த WFHக்கு இன்னொரு பேரு தண்டசோறா சார்! வீட்டுல இருந்தாலே இளக்காரம் தான். இரண்டு பேரும் காரைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க! வெள்ளிக்கிழமை கோவில் போக முடியலை, உண்டகட்டியும் போச்சு!

ஏங்க அவங்க டெலிவர் பண்ணி இரண்டு மணி நேரமாச்சு உள்ள எடுத்து வைக்கலையா!

இரு பார்க்கிறேன்! இல்லையே! வாசல்ல ஒன்னுமேயில்லையே!

என்ன ஆளுங்க நீங்க! அவன் டோர் டெலிவரி பண்ணி கதவு பக்கத்துல வச்சிருக்காங்க பாருங்க, படம் அனுப்பியிருக்கான் வேற! வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு என்ன ஆளுங்க! வீட்டுல இப்படி இருந்தா எப்படி!

கதவுக்கு வெளிய ஒன்னுமேயில்லையே! அட்ரஸ் கரெக்டா கொடுத்தியா!

படத்தைப் பாருங்க! அட்ரஸெல்லாம் கரெக்டா தானே இருக்கு! படத்துல மிதியடியெல்லாம் தெரியர மாதிரி போட்டோ போட்டிருக்கான். என்னங்க நீங்க!

ஆமாம் இது யார் வீட்டு மிதியடி!

ஙே ஙே ஙே!

போன் பண்ணி கேளு! யார் வீட்டுல போய் டெலிவர் பண்ணியிருக்கான் பாரு!

அந்த டெலிவரி நம்பரை எங்க தேடறது? கஸ்டமர் சர்வீஸுக்குத் தான் கேட்கனும்!

நீயும் உன்னோட ஆன்லைன் ஆர்டரும் டெலிவரியும். மதியம் தூக்கம் போவுதுயா!

வீதியில இறங்கி ஒவ்வொருத்தன் வீட்டு வாசப்படியைப் பார்த்து எவன் வீட்டுல இறக்கிருக்கான்னு கண்டுபுடிச்சு, அவங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு புட்டு திரும்ப பத்தடி தள்ளி ரோட்டுக்கு வந்து நின்னு, அவங்க வந்து கதவைத் திறந்த பிறகு விவரம் சொல்லி எடுத்து வாரதுக்குள்ள நமக்கு பின்னி எடுக்குதுயா!

பத்து வருசமா எதிரும் புதிரும் இருக்கிறவங்களின் முகத்தை இன்னிக்குத்தான் நேரில் பார்க்கிறேன். யார் பெத்த மகராசியோ தெரியலை! இது என்ர சாமானில்லை அதனால நீ எடுத்துட்டுப் போய்க்கன்னு சொன்னதால எடுத்து வந்து சேர்ந்தேன்.

ஏம்மா! முதல்ல காஸ்ட்கோக்கு போனைப்போடு! ஏன் இப்படி ராங்க் டெலிவரி பண்றாங்கன்னு கேளு!

முடியாது! கேட்க முடியாது!

ஏன் ஏன்!

முடியாது. ஏன்னா, கேட்டா டெலிவரி பாய்க்கு வேலை போயிரும். போய் உங்க வேலையைப் பாருங்க! சாமான் கிடைச்சிருச்சுல்ல. ப்ரிட்ஜ்ல வைக்க வேண்டியதைப் பாருங்க!

அடி ஆத்தீ! இந்த போடு போடறாளே!

Sunday, May 31, 2020

அசெம்ப்ளி ப்ரோகிராமில் என் நிழல்

எவருக்கும் தன்னோட உழைப்பை அது மற்றவரிடமிருந்து திருடி எழுதப்பட்டதுன்னு சொன்னா செம கோவம் வரும். நியாயம் தான்!

1991-92. கம்ப்யூட்டர் மேற்படிப்பு படித்த நேரம். கிளாஸ்ல கொடுக்கப்பட்ட அசைன்மண்ட் அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல கோடு எழுதனும். அதுவும் நாம தொட்டு டைப் அடிக்கிற கீ ஸ்ட்ரோக்ஸ் ரிகக்னைஸ் பண்ணி அதை மானிட்டர்ல டிஸ்ப்லே பண்ணனும். இதை அசெம்ப்ளி லாங்க்வேஜ்ல பண்ணனும். கீ போர்ட்ல இருக்கிற அத்தனை கீ களையும் ரிகக்னைஸ் பண்ணனும்ன்னு அஸைண்ட்மன்ட்.

லாங்க்வேஜ் யாருக்கும் கத்துத் தரப்படலை. ஒரு மாதம் கால அவகாசம்.

கிளாஸ்மேட்ஸ் 25 பேருக்கும் இது பெரிய சேலன்ஞ். கூடப்படித்தவர்களெல்லாம் மிகப்பெரிய அறிவாளிகள். அவர்கள் வாங்கிய மார்க் எல்லாம் என்னோட கம்பேர் பண்ணினால் கிளாஸில் என்னோட ரேங்க் 22-23 வரும்.

காலேஜ் லைப்ரரி போய் முதல்முறையா அசெம்பளி லாங்க்வேஜ் எப்படி இருக்கும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். அடுத்து கம்பைளர் எப்படி வேலை செய்யும்ன்னு படிக்க ஆரம்பிச்சேன். சனி ஞாயிறு எல்லாம் கம்ப்யூட்டர் லேப்ல உட்கார்ந்து இதைச் செய்தேன்.

மொத்த வகுப்புல இரண்டே பேர் மட்டும் அத்தனை கீ ஸ்ட்ரோக்கும் ரிகக்னைஸ் பண்ணி டிஸ்ப்ளே பண்ணி காமிச்சோம்

கடைசி நாள் புரபசர் என் கூட உட்கார்ந்து என்னோட புரோகிராமைத் எடுத்து ஒவ்வொரு வரிக்கோடையும் விளக்கமாகப் பார்த்தார். சபாஷ் சொல்லிட்டு A+ grade கொடுத்தார்.

கூடப்படிச்சவங்க யாரும் இதை நம்பவேயில்லை. கூடப்படிச்ச நேவல் ஆபீசர் மற்றும் இன்னொரு நண்பி எல்லாம் இது எப்படி சாத்தியம். இவன் போன வருட ஸ்டண்டோட கோடு திருடி கொடுத்திருக்கான்னாங்க. கிளாஸ்ல இவன் மகா மட்டமாக படிக்கிறவன். நம்மில் யாராலையும் செய்ய முடியலை. இவன் திருடியிருக்கான்னு சொன்னாங்க. நான் உட்கார்ந்து வேலை செய்த கம்ப்யூட்டர் லேப்ல போய் மத்தவங்க கோட் எல்லாம் தேடிப்பார்த்திருக்காங்க! எதுவுமே இல்லை.

என் கோடை நான் ப்ளாப்பி டிஸ்க்ல வச்சிருப்பேன். அதுலேர்ந்தே தான் நான் ரன் செய்வதும்.

எனக்கோ மிகப்பெரிய அவமானம். சொல்வதோ கூடப்படிக்கும் நேவல் ஆபீசர். மற்ற இரு மிலிட்டரி மேஜர்கள்கிட்டயும் என் கோடைக் காண்பிச்சேன். சரி விடுன்னாங்க! அதில் ஒரு மேஜர் கோல்ட் மெடலிஸ்ட். புரபசரே அவர் முன்ன கிளாஸ் எடுக்கும் போது உளறிடுவோமான்னு நடுங்குற ஆள்.

கஷ்டப்பட்டு உழைச்சு சுயமாக எழுதியதை திருடிட்டேன்னு சொல்லிட்டாங்களேன்னு செம வருத்தம்.

திரும்ப புரபசர்ட்ட போனேன். சார் நான் ஒரு சீனியர் கோடைத் திருடிட்டேன்கிறாங்க! நீங்க ஒருத்தர் தான் இந்த கோடு என்னுதுன்னு சொல்ல முடியும். சந்தேகமிருந்தா எனக்கு ஏ ப்ளஸ் தராதீங்கன்னு போய்ச் சொன்னேன்.

புரபசர் அந்த நேவல் ஆபீசரையும் இன்னும் இருவரையும் தன்னோட ஆபீஸ்க்கு கூப்பிட்டு நீண்ட விளக்கம் கொடுத்தார் நான் திருடலைன்னு.

அதற்கப்புறம் தான் அந்த ஆபீசரும் மற்றவர்களும் வந்து என்னோட கோடைப் பார்த்து சரி சரி தப்பிச்சுட்டேன்னாங்க. படிக்கிற காலத்திலும் அவர்கள் தான் நெருங்கிய நண்பர்கள். இப்போதும்.

காலேஜ் முடியற சமயத்துல அவர்களில் ஒருவர் என்னைப்பற்றி எழுதிய கவிதை இது:

ப்ரோகிராமிங் கா வேர்ல்ட் மே தோ தும் ஜீத் சுக்கே ஹோ!
லேகின் இஸ்கோ லேப் மே தியா சபீ நே தங்!

Saturday, May 9, 2020

அலையாத அலைதனில் ஓர் அலகு


அலைகளை அளக்கும் அலகு ஓர் அழகு
    அன்னநடை அலையில் மிதக்கும் அதன் உலகு
அவைதனை சுவைக்க தவமிருக்கும் இலவு!

குளிர்தனைப் போக்க தென்னோக்கி பறந்திடும் கொக்கு
   குளிரையும் சுமக்காமல் நம்மிடம் இறக்கி விட்ட மக்கு
நம்கண்ணிற்கு கொடுப்பதோ எழில் விருந்து!

பருவ காலங்கள் மாறும் நேரம்
  பறவைகள் அதன் போக்கை மாற்றும் நேரம்
வடக்கு நோக்கி வரும் நேரம்
  நம்முள் இருக்கும் இருளைப் போக்கும் நேரம்!

வசந்த காலம் வரவேற்கும் நிலையில் நாம்
   இன்னும் குளிர் விலகாத பருவம்
பறவைகளின் வரவேற்பை எதிர்நோக்கும் காலம்
  சிலநாள் காத்திருக்க வேணும் நாம்!

அன்னநடை அலையில் கிறங்கும் மனது
   அலையில் அலையாத மனநிலையில் அதன் இலக்கு
அவை தரும் காட்சிப்பருகலில் கிறங்கும் மனது!

அலையாத அலைதனில் ஓர் அலகு!