Saturday, January 12, 2013

காக்கா குளியல்


காக்கா குளியல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெயில் கொஞ்சம் சூடா வந்துது. லேக் சுத்தி இரண்டு மைல் நடந்து வரலாம்ன்னு போனோம். அருமையா இருந்தது.

ஒரு 70 வயது லேடியின் மற்றும் தாத்தாவின் ஸ்பீட் துளி கூட பிடிக்க முடியவில்லை. என்னப்பா நத்தை மாதிரி ஊர்ரேன்னு திட்டி கிட்டே வேற வரான். டபுள் இன்சல்ட். 

இயற்கையையாவது ரசிப்போம்ன்னு ரசிச்சுகிட்டே வந்தேன். ஒரு காகம் அழகா மரத்திலிருந்து தரைக்கு வந்து தத்தி தத்தி கரையோர நீரில் செம குளியல் போட்டது. ஐந்து ஆறு தடவை முக்கி எழுந்து இறக்கையை உதறி விட்டு மறுபடியும் கிளை மேல தாவி, இன்னும் கொஞ்சம் இறக்கையை உதறி சத்தமா கரைய ஆரம்பிச்சுது. மற்ற காகங்களுக்கு தனது சுகக் குளியலை அறிவிப்பது மாதிரி இருந்தது.

இன்னும் அரை மைல் நடந்த பிறகு ஒரு வினோதமான பறவை ஒலி . கிறீச் க்றீச்ன்னு தலை மேல கேட்குது. தலையைத் தூக்கிப் பார்த்தா ஒரு அழகான ஹக். பக்கத்திலுள்ள ஆளிடம் தெரிஞ்ச ரெண்டு பேரைச் சொல்லி அப்புறம் அது ஹாக் ன்னு தெரிஞ்சுகிட்டேன். பறவையின் உள்புறம் உள்ள ப்ரௌன் நிறம் வைத்து தெளிவாச் சொல்றாராம். கேட்டுகிட்டாச்சு. 

மூன்று மைல் நடந்தோம்.

Thursday, January 3, 2013

இடமறியா மணப்பெண்


இடமறியா மணப்பெண்!

தேவையற்ற இடத்தில் காலை வைத்து 
பொருந்தாத விடயத்தில் மாலை போட்டு 
விருப்பமில்லா மணப்பெண் ஆனேன்!

மண்ணில் வேரூன்றியவை 
விஷமாய்ப் போனதால்
வைக்கும் இடமெல்லாம் 
முள்செடி ஆனதடா !

முள்ளின் மீது நடக்கும் போது  
காலில் குத்தும் முட்கள் 
அகட்டி விடும் காலம் வரும் வரை 
விளையாத மண்ணில் விதைக்கும் 
பருத்தியானேன் !

முள் அகற்றத் தெரியாத 
சமூகத்தின் வேர்களைத் 
தவறித் தூக்கிப் பிடிக்கும்
கருவேல மரமானேன்!

பருத்தி முள்செடி கருவேலத்தை 
ஒன்றாய் நோக்கியதில் 
பஞ்சும் தெரியவில்லை 
எரிக்க விறகும் கிடைக்க வில்லை!