Friday, October 30, 2020

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்

ஏணிப்படிகளில் ஏற நினைப்பவனுக்கு 
ஒவ்வொரு படியும் 
ஸ்திரமான நம்பிக்கை.

மேலிருந்து நோக்கின் 
படியேறுபவனின் தடுமாற்றங்கள் 
குடிகாரனின் பாதங்கள்.

நாம் நோக்கும் பாதை
நமக்களிக்கப்படும் மாயை
எளிதில் வழுக்கும் சரிவு!

வாழ்க்கையில் கற்கும் நல்லவை
நம் படிகளின் ஸ்திரங்கள்
கொடுப்பவைகள் நம் முதிர்ச்சி!

வாழ்வில் மெய்யறிவைத் தேடுகையில்!

No comments: