Wednesday, December 23, 2020

துலாபாரம் தடுமாறும் பொழுதில்

 குற்றம் செய்திடல் கொற்றவனின் கருணையுடன்
கருணையின் குற்றம் கொற்றவனின் கையூடல்
மண்ணின் குற்றம் கொற்றவனின் அரியணை!

வாழ்வியல் நீதி கொற்றவனுக்கில்லை
மண்ணின் நீதி மனிதனுக்கில்லை
ஏற்றமும் இறக்கமும் கொற்றவன் அசைவில்!

வழித்தடம் வகுத்தல் கொற்றவனுக்கு அழகு
நீதியும் நேர்மையும் தராசின் நுனியில் தடுமாறின்
கொற்றவன் வகுத்ததே சமணின்றி பாரங்கள்!

மனிதன் வகுக்கும் நீதிபரிபாலனம்
கொற்றவன் கையில் சிக்கிய பூமாலை போல்
உதிரும் மலர்கள் மண்ணின் அவலம்!

துலாபாரம் தடுமாறும் பொழுதில்!

ओलै सिरिय !

No comments: