Monday, November 2, 2020

அசரீரி வாழ்த்தில் நனைகையில்

 டின்னர் சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாதுன்னு அமைதியாக தட்டு எடுத்துகிட்டு வந்து டைனிங் டேபுள்ள உட்கார்ந்தேன். நல்லப்பையனா முன்னாடியே டிஷ் லோடு வேறபண்ணியாச்சு. சிக்கல் எதுவும் வேண்டாம்ன்னு அமைதியாக இருந்தேன்.

தோசை வார்த்துகிட்டு இருந்த அம்மணி திடீர்ன்னு ஏதோ சொல்ல, exhaust fan சத்தத்துல ஒரு அசரீரியாட்டும் வந்து விழுந்துச்சு.

அம்மணி முகத்துல சிரிப்போட வேற வந்துச்சா : how come you are always perfect in judging people and say in advance ன்னாப்புல.

பக்குன்னுச்சு. என்னடா ஒன்னுமே சொல்லலை. வசிஷ்டர் வாயில பிரம்மரிஷின்னு வந்து விழுவது. நாளைக்குத் தானே சந்திராஷ்டமம் ஆரம்பம்ன்னு பார்த்தேன். இது என்ன pre-existing conditions மாதிரி வந்து விழுதுன்னு நினைச்சேன்.

வாயில உள்ள போன தோசை தொண்டையிலேயே நின்னுருச்சு.

என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்த அம்மிணி சிரிச்சுகிட்டே சொல்றாப்புல, அன்னிக்கு வீணைக்கச்சேரிக்குத் தாளம் போட என் நண்பியைக் கூப்பிட்டேன், அப்ப அதெல்லாம் வேணாம்; இத்தனை வருசமா வாசிக்கிற சரளமாக வரவேண்டாமா, வேணும்ன்னா ஃபோன் appஐ வச்சு சவுண்ட் கம்மியாக வச்சு தாளம் போட்டுக்கன்னு சொன்ன, நான் கேட்கலை அப்பன்னாப்புல.

அதுசரி. இப்ப என்ன அதுக்குன்னேன்?

இல்லை. நாலு நாளா உன் கிட்ட சொல்லலை, சொன்னா திட்டுவன்னு. நீ சொன்ன மாதிரியே அந்த நண்பி தப்பு தப்பா தாளம் போட நான் தடுமாறிட்டேன். பக்கவாத்தியம் மிருதங்கம் சின்னப்பையன், அவன் கூட அந்த தாளத்தைத் தவிர்த்துட்டான். 

தாளம் தப்பா போட்டது மட்டுமல்ல, பின்னாடி உடனே ஃபோன்ல கூப்பிட்டு நீ இந்தந்த இடத்துல எல்லாம் கேப் விட்டு வாசிச்சுட்டேன்னு சொல்றா! எனக்கு தலையே சுத்துது ஒன்னும் சொல்ல முடியலைன்னாப்புல.

எப்படி உன்னோட லைப்ல இப்படி பர்பெக்டாவே எல்லாத்தையும் வச்சுக்கிறன்னாப்புல, மறுபடியும்.

என்னய்யா ஆச்சு இன்னிக்கு எனக்குன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது. சந்திராஷ்டமம் சீக்கிரம் கூட துவங்குமா, இல்லை இந்தியா டயத்துக்கு இங்கிட்டு எபக்டா!

தொண்டையில நின்ன தோசை அதுவும் துப்பாம உள்ள இறங்கிடுச்சு!

அம்மாடி!

வாழ்வினிது.

No comments: