Tuesday, December 1, 2020

சுயமாய் செய்திடல் காலத்திற்கேற்ப

 பல இடங்களில் பல க்ரூப்களில் சேமிப்பது, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மண்ட் பத்தியெல்லாம் நிறைய க்ரூப்ல நிறைய பேர் பேசறாங்க!

நாம எவ்வளவு பேசினாலும் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் எந்த மாதிரி ஸ்டாக் வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

மத்தவங்க சொல்லி வாங்கிப் போடலாம்ன்னு செய்யுற செயல்கள் அதிக பலனைத் தராது. எல்லோரும் சுயமாக யோசித்து, இன்றைய சூழ்நிலைக்கு என்ன வாங்கனும்ன்னு பார்த்து வாங்கினால் தான் லாபம் பார்க்க முடியும்.

ஒபாமா வந்த காலத்துல அவர் புது ஹெல்த்கேர் பிளான் கொண்டு வரப்போறேன்னார். அந்த சமயத்துல ஹெல்த்கேர் ஸ்டாக் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்ல இன்வெஸ்ட் பண்ணவங்க இன்று 300-500% சம்பாதிச்சுருக்க வாய்ப்பிருக்கு.

ட்ரம்ப் வந்தப்ப முதல்ல இன்ஃப்ராஸ்டர்க்ச்சர், பார்டர்ல சுவர் எழுப்பறதைப்பத்தி தான் அதிகம் பேசினார். அந்த கட்டத்துல கேட்டர்பில்லர், ஜான் டியர் போன்ற கம்பெனிகளின் ஸ்டாக் வாங்கியிருந்தா டபுள் ஆகியிருக்கும்.

இன்றைய கொடுநோய் கொரோனா காலத்துல ட்ரம்ப் அதிகம் கவனம் செலுத்தியது செலவழித்தது எல்லாம் கொரோனாக்கு தடுப்பூசி, சுவாசத்திற்கு வென்டிலேட்டர் போன்றவற்றில் தான். அதைத் தயாரிக்கும் கம்பெனிகள் ஸ்டாக் மற்றும் ஃபார்மசிகள் ஸ்டாக் மற்றும் ஹெல்த்கேர் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் பண்ணும் போது மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும். 

மேலும் இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தே படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஸ்டாக்குகள் ம்யூச்சுவல் ஃபண்ட்ஸும் தான் பலன் கொடுக்கும்.

அடுத்து வரும் பைடன் ஆட்சியில் அவர் எதில் அதிக கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிந்து கொண்டு இன்வெஸ்ட் செய்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

மற்றவர்கள் சொல்லி வாங்குவதும் சரி. கொஞ்சம் சுயமாக சிந்தித்து நாமே வாங்கி விற்பது அதிக பலனீட்டும்.

முயல்பவற்களுக்கு வாழ்வினிது!

No comments: