Friday, September 25, 2020

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை

தசையின் ஓய்வில் ஓர்இசை!

தசை தேடிய அமைதியில் ஓய்ந்த இசை
இசையில் அழைத்தவை பல கோடுகள்
ஒவ்வொரு இழையும் பிழியும் உணர்வுகள்
தசையதனை மாற்றி ஓய்ந்தது இசை!

உள்ளம் உருக வேதமாய் ஒலித்த கீதங்கள்
அலை போல் ஆர்ப்பரிக்கும் மன ஓசைகள்
அழகிய அடுக்குகளாய் கொடுத்த சாதனைகள்
சந்தம் ஏற்ற இறக்கத்தில் மலரும் மலர்கள்!

தன் பாடல்களை அசை போடுகையில்
மறவாமல் இசைத்தவரை ஆராதிக்கும் சமர்பணங்கள்
இசை படைப்பவரின் ஞானம் கொடுப்பவரின் ஆலிங்கனம்!

குழந்தைப்பருவம் முதல் கிடைத்த அமுதகீதங்கள்
அலைகடலாய் பெருகி வளர்ந்த நம் காலங்கள்
ஒவ்வொரு பருவமும் அவர்தன் பாடலின் வழியாக
நாம் பெற்ற வரம் வளரும் காலத்தில் கிடைத்த
இம்மகானுபாவலுவின் குரல் இசை!

பலகோடி மக்களின் மனதில்
நீங்காத நினைவாய் நிற்கின்ற பாடல்கள்
பொழுதன்றும் அசைபோடும் நம் மனதில்
அமரராய் நிற்கப்போகும் குரலுக்கு நம் அஞ்சலிகள்!

தன் தசையின் அமைதியில் ஓய்ந்த குரல் இசை!

No comments: