Wednesday, January 9, 2019

இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை

இசைக்கு நாதம் இனிமை
வசைக்கு எதுவும் இனிமை
உண்மை போலி என பேதமின்றி!

இசைக்கு லய சுத்தம் வேணும்
வசைக்கு எந்த நேர்மையும் பேதமில்லை!

இசையை ரசிப்பவன் வாழ்வினிது
மெய்மறந்து லயத்தில் உறங்கலாம்
இசை பிசிறும் போதும் நேர்மை தேட
வசைகளிடத்தில் எதுவுமில்லை!


இசையும் வசையும் அவரவர் வாழ்வின் நேர்மை!

Tuesday, January 1, 2019

வாழ்க்கை எனும் கலவை சாதம்

2019 வருடத்தின் முதல் நாள்

காலையில நிதானமாக எழுந்திரிச்சு அம்மாக்கு முதல் போன் கால் போட்டேன். இப்ப தான் கோவில்ல உனக்கு அர்ச்சனை பண்ணிட்டு உள்ள வர்றேன். உன்னோட போன் கால் தான் முதல் கால்ன்னாங்க! உடனே அடுத்து டிவியில உன் நண்பன் ஜோசியம் சொல்றாரு, துலா ராசிக்கு சொல்லப் போறாரு போனை வைன்னு வச்சுட்டாங்க! புலவர் என்ன ஜோசியம் சொன்னாரோ!

அடுத்த கால் சேலம் நண்பருக்குப் போட்டேன். இப்ப தான் பத்மநாபசாமி கோவில் தரிசனம் முடிச்சு வெளிய வர்றேன்; உங்க கால் முதல் கால்ன்னார். மகிழ்ச்சியாகத் தொடங்கியது நாள்.

கூப்பிடறவங்கெல்லாம் கோவில்ல இருக்காங்க. மார்கழி மாதம் ஆரம்பிச்சதிலேர்ந்தே பெருமாள் கோவிலுக்குப் போடான்னு அம்மா சொல்லிகிட்டு இருந்ததால, நாமளும் இன்னிக்கு லன்சுக்கு முன்ன போயிடனும்ன்னு கிளம்பி மதியம் 12.30க்குப் போனேன். பையன் அவன் நண்பர்களோடப் போனதால நானும் மனைவியும் தான் போனோம்.

பெருமாள் கோவிலுள்ள கார் போக வழியில்லை அவ்வளவு கூட்டம். ரோட்டோரம் நிறுத்திபுட்டுப் போனா கோவில் உள்ள போக க்யூ ரொம்ப தூரம் நிக்குது. அதுக்குள்ள சிவன் கோவில் போய் வந்துடலாம்ன்னு போனா உள்ள ஒரு நிமிடம் நிக்க வழியில்லை. க்யூல தள்ளி அனுப்பிடறாங்க. 

சிவ பரிவார் தரிசனம் முடிஞ்சு மறுபடியும் பெருமாள் கோவில் வந்தா க்யூ இன்னும் பெரிசாயிடுச்சு. உள்ளப் போய் வர ஒரு மணி நேரமாகும். அதுக்குள்ள பையன் திரும்பி வந்து சாவி எடுத்துப் போகலை வாசல்ல உட்கார்ந்து கிட்டு தொடர்ந்து கூப்பிட்டு கிட்டேயிருக்கான்.  பெருமாள் தரிசனம் கிடைக்காம பிரகாரம்்மட்டும் சுத்திபுட்டு வந்தோம். 

கோவில் புளியோதரையை அள்ளி கிட்டு வந்து சாப்பிட்டு செம தூக்கம். எழுந்திரிச்சா 3 1/2 நேரமா வீட்டுல பவர் இல்லை. சுத்துவட்டு 60 குடும்பங்களுக்கு இரவு எட்டு மணிக்கு கரெண்ட் வந்துச்சு!

வாழ்க்கை எனும் கலவை சாதம் மறுபடியும் துவங்கி விட்டது!