Sunday, August 31, 2014

ஏமாற்றப்படுதல்

 சமீப காலமாக பொருளாதார ரீதியாய் ஏமாற்றுவதற்கான முயற்சிகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றது. இத்தனை வருட வாழ்க்கையில் நம்மை இவ்வளவு தூரம் யாரும் நெருங்கியது இல்லை. இப்பொழுது நெருங்கி வருகிறார்கள் என்று நினைக்கும் போது ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதை எதிர் கொள்ள எவ்வாறு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.


பத்து நாட்கள் முன் உள்ளூரில் கிரெடிட் கார்டு கொடுத்து pizza வாங்கும் போது கார்டு transaction deny ஆயிருச்சு. அடுத்த நாளும் transaction deny ஆனவுடன் கிரெடிட் கார்டு கஸ்டமர் சர்வீஸ் க்கு போன் பண்ணினால் இதே கார்டில் சிகாகோ அருகில் இரண்டு transaction நடந்திருக்கு. நீ தான் அந்த transaction பண்ணியா, 4 நாளா எங்க இருக்கன்னு கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


கிரெடிட் கார்டு கம்பெனிகளின் ஆட்டோமாடிக் fraud detection மூலம் கண்டு பிடிக்கப் பட்டு உடன் கார்டு transactionகள் தடை செய்யப் பட்டதால் அதிக damage இல்லாமல் தப்பி விட்டது. என் கார்டு மூலம் செய்யப்பட்ட இரண்டு fraud transaction இல் ஒன்று மட்டும் ஆன்லைன் அக்கௌன்ட் இல் தெரிந்தது. இன்னொன்று, பெண்டிங் transaction ஆக இருந்ததால், நான் செய்யவில்லை என்று சொன்னவுடன் அதை approve செய்ய மறுத்து விட்டார்கள். எனது அக்கௌண்டில் இருந்த ஒரு fraud transaction க்கு இன்று பணம் திருப்பி போட்டு விட்டார்கள்.


எனக்கு தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போய் விட்டது. ஒன்றில் நஷ்டம் கார்டு கம்பனிக்கும், மற்றொன்றில் அந்த கடையில் முதலில் authorize கொடுத்து வாங்கிச் சென்ற பிறகு deny செய்யப் பட்டவற்றில் அந்தக் கடைக்கு வரும் நஷ்டம். பெரிய அமௌண்ட் transaction நடந்திருந்தால் எளிதாய் பிடித்து விடுவார்கள் என்றாலும் நமக்குள் ஒரு ஏமாற்றத்தின் கலக்கம் இல்லாமல் போகாது.


கார்டு கஸ்டமர் சர்வீஸ் ஆளிடம், யாரது என்று கண்டு பிடித்து prosecute பண்ண முடியாதா என்று கேட்டதற்கு, எங்களால் முடியாது, நீ வேண்டுமானால் உனக்கு அது யாரென தெரிந்தால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடு. எங்களைப் பொறுத்த வரை, நீ மறுத்த transaction க்கு உனக்கு பணம் திருப்பி தர முடியும், உனக்கு வேற கார்டு கொடுக்கிறோம். அவ்வளவு தான் என்று விட்டார்கள். பழைய கார்டு பில் உனக்கு வராது அவ்வளவு தான் என்று சொல்லி விட்டார்கள்.


சில சமயங்களில் இங்குள்ள சர்வீஸ் சேவை பற்றி பார்க்கும் போது கடினமான தொல்லை நேரும் நேரங்களில் இவர்கள் சுலபமாய் நம்மை இதை எதிர்கொள்ள அழைத்துச் செல்லும் பாதையை பார்க்கும் போது ஒரு மரியாதை மதிப்பு அதிகரிக்கிறது. எந்த விதத்திலும் இது உன் பிரச்சனை இதை நீ பார்த்துக் கொள் என்று தனித்து விடாமல், நேரிலும் இல்லாமல் போனில் உங்களை அழைத்துச் சென்று ஆறுதல் அளித்து, நஷ்டங்களை ஏற்றுக் கொண்டு நம்மை அடுத்தவற்றில் கவனம் செலுத்தச் சொல்வது சிறப்பானது.


இது மட்டுமல்ல, தினமும் எனக்கு, என் மனைவிக்கு, வீட்டு போன் மற்றும் எங்கள் செல்போன் களில் தனியாக வெளிநாடுகளிலிருந்து மிரட்டல் போன் வருகிறது. IRS லிருந்து கூப்பிடுகிறோம் என்றும், இந்த போன்காலை துண்டித்தால் உங்கள் வீட்டிற்கே IRS ஆபீசர்ஸ் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று மிரட்டல் வேறு.


இது சமீபத்தில் அதிகரித்து விட்டது. இது ஏமாற்று வேலை என்று எங்களுக்குத் தெரிவதால், செல் போனில் காண்பிக்கும் நம்பர் எடுத்து கூகிள் search பண்ணினால் இது ஒரு ஏமாற்று பேர்களின் செயல் என்று தெரிய வருது. iphone இல் இந்த நம்பர் களை பிளாக் செய்து விட்டதால், இவர்கள் இப்போது வீட்டு நம்பர் க்கு கூப்பிட்டு மிரட்டி வருகிறார்கள். அவர்கள் accent கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் அதிகம் கண்டு கொள்வதில்லை. ஆனால் வீட்டில் போன் எடுக்கவே பயப்படும் சூழ்நிலை உருவாகிறது. பலரது கால்கள் answer machine போன பிறகு, திருப்பி கூப்பிட வேண்டி வருகிறது.


எப்பிடி நம்மைப் பற்றிய விவரங்கள் கிடைக்கிறது? எப்பிடி இந்த அளவு இவர்களால் நெருங்க முடிகிறது? அரசால், அமைப்பால், வெறும் நட்டத்தை ஈடுகட்டவோ அல்லது மேலும் ஏமாறாதீர்கள் என்று மட்டும் சொல்ல முடிகிறது. வேறொன்றும் செய்ய முடிவதில்லை. ஏன்?

 எவ்வாறு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது?
இதுவும் செய்ய முடியும். விழிப்பாய் இருந்தால்.


நம்மிடம் உள்ள சிறு துரும்பையும் நம்மை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதமாய் பயன்படுத்த வேண்டியது தான். சட்டம், அமைப்பு, அரசு உதவியுடன் காப்பாற்றிக் கொள்ளத் தான் வேண்டும்.

நமது மனதில் இது நமக்கு இது ஒரு பாதகமான செயல் என்று தோன்றும் போது, அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி விட வேண்டும்.

முறையாக அரசு, அமைப்பு, சட்டத்திடம் நடப்பவைகளை தெரிவித்து விட வேண்டும்.
நமது கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் transaction களை உடனடியாக ஆன்லைன் acct லாகின் செய்து சரி பார்க்கணும்.


ஆன்லைன் acct வெளி இடங்களில், பொது இடங்களில் ஓபன் பண்ணி பார்க்காதீர்கள். மாதம் ஒரு முறை அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறையாவது password மாற்றி விடுங்கள். Browser cookie , history எல்லாம் கிளியர் பண்ணிக் கொண்டே இருங்கள். கம்ப்யூட்டர் antivirus சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் பண்ணி வாருங்கள்.


போனில் வரும் மிரட்டல்களை சமாளிக்க தொலைபேசித் துறை மற்றும் அரசு போலீஸ் துறைகளை நாடுங்கள்.


ஏமாற்றங்களை ஏமாற்றப்படுதலை குறைப்போம் தவிர்ப்போம் எதிர்ப்போம்.