Saturday, November 7, 2020

அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

 அமெரிக்க தேர்தல் 2020 - பகுதி 3

ஒரு தனிமகனின் எண்ணம் இது. அதை பதிவு செய்கிறேன். நான் பலரைப் போல் ஒருவர் வெற்றியையோ ஒருவர் தோல்வியையோ பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஜனநாயகத்தின் முழுமையான வெற்றிப்பாதைகள் நம் கண் முன்னே தெரிகிறது. ஒரு polarized election ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கக் கூடியது நடந்துள்ளது. மாநில சுயாட்சியின் அதிகாரங்கள் புடம் போட ஒரு சரித்திரம் நிகழ்ந்துள்ளது. 

புதிதாய் வருபவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கு. செய்வார்களா? எவ்வளவு செய்ய முடியும்? நடத்து முடிந்தவைகளை மாற்றி அமைக்கவே இவர்கள் காலம் ஓடப்போகிறதா அல்லது போன ஆட்சியை விட இவங்க பெட்டர்ன்னு ஒரு ஆப்ஷனுக்காக நடந்து முடிந்த தேர்தலாக முடிந்து விடக்கூடாது!

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக அளவில் வாக்குகள் வந்து குவிந்துள்ளது. இதுவரை பார்க்காத சூழ்நிலையில் தொற்றுநோயின் கிடுக்கிப்பிடி நடுவே இதுவரை அதிகம் நடைபெறாத தேர்தல் வழிமுறைகளை மாற்றி அமைத்து நடத்த வேண்டிய கட்டாயத்துடன் நடந்து முடிந்துள்ளது.

பத்து பன்னிரெண்டு வருடமாக வாக்குச்சாவடி உள்ளே நுழையாதவர்கள் இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்கிறார்கள். 3 பேரை நானே நேரில் எதிர்கொண்டேன். வாக்குச்சாவடியில் நுழையும் வாக்காளரை வாக்களிக்கமுடியாமல் வெளியே போவச் சொல்வது voter intimidation, அதைச் செய்ய ஃபெடரல் சட்டம் அநுமதிப்பதில்லை. இவ்வளவு வருடம் வராதவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் வாக்குச்சாவடி நோக்கி வந்துள்ளனர்.

இவர்கள் எதிர்பார்ப்புகள் போன்றது தான் நம் எதிர்பார்ப்போம். செய்ய வேண்டியவை அதிக அளவில் கண் முன்னே நிற்கிறது.

வாக்காளரை மதிக்கச் சொல்லும் சட்டம், வந்தாரை வாழ வைக்க, குறைந்தபட்சம் மானத்தோடு விளிப்பதற்காகவாவது உதவ வேண்டும்.

எத்தகைய பேரிடரில் எத்தகைய பெரிய வாக்குப்பதிவை மாநில மற்றும் கவுன்டி தேர்தல் மையங்கள் நடத்தியுள்ளது. அந்த வழிமுறையை செழுமைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதையேகேள்விகுறியாக்குமிடத்தில் தகுந்த பதிலளித்துள்ளது கிடைத்த அதிகபட்ச வாக்குப்பதிவுகளே! அது யாருக்கு கிடைத்தது என்பதைப்பற்றி கவலையில்லை! எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை உணரவேண்டும். இது ஜனநாயக அமைப்பிலேயே சாத்தியம்.

மேலும் தொடரலாம்!

No comments: