Sunday, November 15, 2020

நரகாசுரவதம்

 நரகாசுரவதத்தை எப்படி கொண்டாடுவது!

ரொம்ப சிம்பிள்! யாருக்காவது கொரோனா வந்துடுச்சுன்னு சிம்ப்ளா சொன்னா முடிஞ்சுது கதை! போதும், நம்மளை நரகாசுரவதம் பண்ணிருவாங்க!

அத்தகைய நரகாசுரவதம் நாள் நேற்று. எவ்வளவு இடி வாங்கினாலும் கொண்டாடற பக்குவம் வந்துடுச்சுங்கிறதால இதையும் சுலபமாக ஓசியில பட்டாசு வெடிக்க நமக்கு கத்துக்கொடுக்கனுமா! புடம் போட்டல்ல வச்சிருக்காக நம்மை!

நேற்று காலை அம்மணியோட ஆபீஸ்லேர்ந்து போன். அம்மிணி கீழ வேலை செய்யற ஒருத்தருக்கு பாசிடிவ்ன்னு வர, அவங்க அம்மிணியை ஒரு நிமிடம் ஆபீஸில் பார்த்ததாக county ஆபீஸில் சொல்ல, அம்மிணி ஆபீஸில் அம்மிணி இன்சார்ஜ்ங்கிறதால முடிஞ்சது கதை! ஆபீஸ் முழுக்க சானிடைஸ் பண்ண நடவடிக்கை எடுக்கனும், போன்ல அவங்களைப் போட்டு வறுத்து எடுத்தது போக, இப்ப வூட்டுல அம்புட்டு பேரும் டெஸ்ட் எடுக்கனும்ன்னு நம்ம பக்கம் திரும்பிருச்சு நரகாசுரவதம்.

பையன் தான் இதுக்கு முன்ன போன pediatric urgent care தான் போவேங்குறான். அம்மிணி அவங்க டாக்டர் கிட்டத்தான் போவேங்குறாங்க! நடுவுல செத்தாண்டா சேகரு நிலை!

பையன் சொன்ன இடத்துக்குப் போன் பண்ணினா அவங்க ஒரு ஆளுங்கு டெஸ்ட்டுக்கு 150$ கேட்கிறாங்க. அவங்க கிட்ட இந்த கோவிட் டெஸ்ட் ஃப்ரீ ஆச்சே, எங்க இன்சூரன்ஸ்ல ஃப்ரீ ஆச்சேன்னா, அதெல்லாம் முடியாது, நீ உள்ளவந்தா இந்த வருச deductibles எல்லாம் சேர்த்து ஒரு ஆளுக்கு 150ங்கிறாங்க! மூனு பேருக்கு 450$.

என்னடா சத்திய சோதனை இது வேற செலவான்னு நினைக்கையில, இவங்க இரண்டு பேருக்கும் உசுரு முக்கியமா காசா முக்கியம்கிறாங்க. உண்மை தான். இவ்வளவு கோடி பணம் அரசு இந்த டெஸ்ட்டுக்கு ஒதுக்கி செலவு செய்யுது, எதுக்கு இன்னும் நாம செலவு பண்ணனும்ன்னு நினைச்சு வேற இடம் தேடறதுக்குள்ள என்னை வூட்டுல ஊசி பட்டாசு சரவெடியில கொளுத்த, இதையும் மீறி நமக்கு திரியை வெளிய நீட்டத் தெரியாதா!

Countyயோட வெப்சைட் போய் இன்னிக்கு எங்க அவங்க டெஸ்ட் பண்ற இடம் தேடினா இன்றைய ரிசர்வேஷன் எல்லாம் ஃபுல். அரை மணி்நேரத்துல 30 பேருக்கு டெஸ்ட் பண்ற இடமெல்லாம் ஃபுல். 

ஊரெல்லையில ஒன்னு கிடைக்க 3 பேருக்கும் ரிசர்வ் பண்ணினா இவங்க வரமாட்டேங்குறாங்க. ஏன்னா அங்க போனா டெஸ்ட் ரிசல்ட் வர 48-72 மணி நேரமாகுமாம், இவங்க அவ்வளவு நேரம் பொறுக்க முடியாதாம். ரிசல்ட் உடனே தெரியனுமாம். 450$ கட்டினா 8 மணி நேரத்துல ரிசல்ட் போட்டு ஒரே குடைச்சல். ரோட்டுல வெடிக்கிற பட்டாசெல்லாம் ஒன்னுமேயில்லாத கதை தான்.

நம்ம கிட்ட எதுவும் செல்லுபடியாகாதுன்னு இரண்டு பேரும் வர, county testing siteக்கு கூட்டிப் போனேன். செம சேஃப்டி. மத்தவங்க எதையும் கையுல தொடுவது கிடையாது. நம்ம காரில் உட்கார்ந்து நாமே டெஸ்ட் பண்ண எல்லாம் automatic ப்ரொசீஜர்ஸ். பார்க்கிங் லாட் உள்ளே நுழையும் போதே ஆளுக்கு ஒரு டெஸ்ட் கிட் சேஃப்டி புரோசீஜரோடு கொடுக்கறாங்க! காரை தள்ளிப் பார்க் பண்ணி, நம்ம போன் மூலம் பார்கோடு ஸ்கேன் பண்ணி் நம்ம டீடெயில்ஸ் போன் மூலம் என்டர் பண்ணி, வெரிஃபை பண்ணினா நாம ரெடி!

டெஸ்ட் எடுக்க படம் போட்டு விளக்கத்தோட எல்லாம் பிளாஸ்டிக் கவர்ல இருக்கு! நாமளே test swabஐ மூக்குல உட்டு எடுத்து குப்பியில போட்டு ஒரு கூலர் பாக்ஸ்ல போட்டா ஏழு மணி நேரத்துல லேப்கார்ப் டெஸ்ட் ரிசல்ட் நம்ம போனுக்கு வருது. பையனுக்கு இப்பவே தான் ஒரு மெடிகல் புரொபஷனல்ன்னு நினைப்பு, அவரு தான் மூக்குல சொருகுவாரம்! உள்மூக்குல போட்டு குடைஞ்சுபுட்டான். அங்கயே தும்மலை அடக்க முடியாமப்போயிருச்சு!

யாரும் யாரையும் தொடுவதில்லை. கிளினிக் உள்ளப்போனா கதவைத் தொட்டோம் அதைத் தொட்டோம் இதைத் தொட்டோம், சானிடைஸ் பண்ணுன்னு ஒரு தொந்திரமும் இல்லாம நம்ம காரில் உட்கார்ந்தே எல்லாம் இலவசமாக முடிந்தது!

காலையிலிருந்து ஒவ்வொருத்தரும் அய் என் ரிசல்ட் நெகடிவ்ன்னு என் ரிசல்ட் நெகடிவ்ன்னு சந்தோசத்துல குதிக்கிறாங்க!

இரண்டு பேரும் உங்க 150$ எடுத்து வைங்க எங்கிட்டேன்னேன். கொடுக்கிற ஆளுங்களா இவங்க! அடுத்த பட்டாசோட ரெடியாக நிப்பாங்க!

தீபாவளி நரகாசுரவதம் எப்படி இருக்கும்ன்னு கேட்கிறாகளே! இதுவல்லவோ எங்கள் வதம்!

No comments: