Sunday, December 6, 2020

வேலைக்கான தகுதி எடைபார்த்தலில்

 அஸ்ஸாம்ல போன பத்து பதினைஞ்ச நாள்க்குள்ளவே வீட்டுல சும்மா உட்காரேதேன்னு ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல பொட்டிதட்ட அண்ணன் அனுப்பிட்டான். அவனே பேசி அவனே 1000 ரூபாய் சம்பளமும் பேசி துரத்திட்டான். மூனு மாசம் அங்க ஓட்டியிருப்பேன்.

பின்னாடி அரசு உதவியில நடக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட்ல ஜூனியர் ப்ரோகிராமர்/அசிஸ்டண்ட் புரபசர் வேலைக்கு பேப்பர்ல விளம்பரம் வந்தது. கௌஹாத்தி யுனிவர்சிட்டி கம்ப்யூட்டர் சயின்ஸ் புரபசர் எச்ஓடி தான் இன்டர்வியூ பண்ணினார். நான் அப்ப தான் கல்லூரி படிப்ப முடிச்சு வந்திருக்கேன், இன்னும் மாணவன்கிற மென்டாலிட்டி தான். இன்டர்வ்யூ பண்றவர் பெரிய புரபசர், மிகவும் பிரபலமானவர். அவர் முன்ன போட்டிருந்த சேர்ல உட்காரச்சொன்னார். பெரிய புரபசர் முன்ன உட்கார மனசு வரலை. நுனி சீட்ல உட்கார்ந்தேன். ரிலாக்ஸ்ன்னார்.

இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சு கடைசியில எழுந்து போகுற நேரத்துல அவர் சொன்னார். என்னோட பல ஸ்டூடன்ட்ஸ் இந்த போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க, எல்லோரையும் இன்டர்வ்யூ பண்ணியாச்சு நீ தான் கடைசி, நீ ஒருத்தன் தான் எங்கிருந்தோ இங்க பிழைப்பு தேடி வந்துருக்க. நீ எல்லாத்துலையும் அதிகம் மார்க் வாங்கலைன்னாலும், என்னோட சில ஸ்டூடண்ட்ஸ் உன்னை விட அதிக மார்க் வாங்கியிருக்காங்க. ஆனால் ...

ஆனால்ன்னு சொல்லி நிறுத்திட்டார்.

என்ன சொல்லப் போறார்ன்னு பக்குன்னுச்சு. ஏன்னா அந்த காலத்துல அஸ்ஸாம் agitation மும்முரமாக நடந்து முடிந்து பிரஃபுல்ல மகந்தா முதலமைச்சர் வேற. 
சரி நமக்கு கிடைக்காது நினைச்ச நேரம், வாயைத் திறந்தார்.

இந்த போஸ்ட் நான் உனக்குத் தர்றேன். அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அவர் டேபுள் முன்ன இன்டர்வியூ ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நான் கொடுத்த என்னோட மார்க்‌ஷீட்ஸ் எல்லாம் பரப்பி வைத்திருந்தார். சொல்றார். நீயும் மற்றவர்களைப் போல் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தாய். ஆனால் இதுல பார் உன் 10வது, 12வது, டிகிரி, மாஸ்டர்ஸ்ல இருக்கிற ஒவ்வொரு ஷீட்லையும் பார், ஒரு consistency இருக்கு பார். The same score percentage, no fluctuations தெரியுது பார். Inadvertently you have some mental stability and it is needed when you live in an outside domain where you are not accustomed to in life. when you get stress you will be able to handle it easily ன்னார். அதுக்காவே இந்த போஸ்ட் உனக்குத் தர்றேன்னு சொல்லிக் கொடுத்தார். 2200 ரூபாய் அரசு சம்பளம். அப்ப அவர் சொன்ன இந்த காரணங்கள் எதுவும் புரியலை. புரிஞ்சுக்கிற வயதுமில்லை. 23-24 வயசு தான். மிக மிக மரியாதையோட எழுந்து நன்றி சொல்லிட்டு வந்தேன்.

அடுத்த ஆறு மாதத்துல இன்னொரு போஸ்ட்ல அவரோட ஸ்டூடண்ட்க்கு கொடுத்தார். அந்த ஸ்டூடண்ட் வந்து என் கிட்ட சொன்னான், போன இன்டர்வ்யூவிலேயே நான் ரொம்ப நல்லா பண்ணினேன், நான் அவரோட பெஸ்ட் ஸ்டூடண்ட், ஏன் அப்ப கிடைக்கலைன்னு தெரியலைன்னான். நான் அவன்ட்ட ஒன்னும் சொல்லலை. அவர்ட்டயே பிஎச்டி பண்ணப் போறேன்னு சொல்லிகிட்டு இருந்தான்.

நான் என்றும் போற்றும் மாமனிதர் கௌஹாத்தி யுனிவர்சிட்டி புரபசர் அவர்.

வாழ்வினிது
ओलै सिरिय

No comments: