Friday, August 30, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி - 7

போன பதிவில் ஒரு emergency கையிருப்பு பணத்தின் அவசியத்தைச் சொல்லியிருந்தேன். அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இந்த அவசரத்தேவைக்கு சேமித்த பணம் எத்தனை நாட்களுக்கு உதவும். அது போதுமா?

நம் வேலை போய் விட்டாலோ அல்லது இரண்டு பேர் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் வேலை செய்வதை  நிறுத்திக் கொண்டாலோ, அல்லது இருவரில் ஒருவருக்கு வேலை போய் விட்டால் என்ன செய்வது? இரண்டு பேருடைய வருமானத்தின் அடிப்படையில் போட்டு வைத்த பட்ஜெட்டில் இனி ஒருவரது வருமானத்தில் எவ்வாறு சமாளிப்பது?

சம்பளமற்ற விடுமுறையில் இருவரில் ஒருவர் சில காலம் செல்ல முடிவு செய்து வீட்டு பிரச்சனைகளை சமாளிக்க அல்லது பிரசவத்தை சமாளிக்க, பெற்றோர் உடல் நிலை சரியில்லாது போகிற காலங்களில் கொஞ்ச நாள் சம்பளமில்லைன்னாலும் பரவாயில்லை, போய் உதவி செய்ய முடிவதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.

வீட்டில் இருவரும் வேலை செய்யும் போது இரண்டு குழந்தைகள் இருந்தால் daycare expenses ஒருவரது வருமானத்திற்கும் மேல் ஈடு கட்ட முடியாமல் போகும் போது ஒருவர் வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்ப்பதன் மூலம் சமாளிக்க சில காலம் வேலையை விட்டுவிட்டு இருக்க முடிவதற்கு என்ன செய்ய வேண்டும்.

வேலையை விட்டு விட்டு குழந்தைகளைப பார்ப்பதை விட வேலை செய்து கிடைக்கும் வருமானம் முழுவதும் போனால் கூட ஒரு லாங் டெர்ம் பெனிபிட் இருக்கு. குழந்தை பராமரிப்பு பற்றிய பதிவல்ல இது. இது மாதிரி நிகழ்வுகளில் நம்மைத் தயார் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.

இந்த மாதிரி நிகழ்வுகளில் மாத பட்ஜெட்ல் துண்டு விழுவது மட்டுமல்ல, வீட்டில் மன அமைதி போய்  அல்லது சிலருக்கு மன அழுத்தம் (depression ) வர வாய்ப்புண்டு. எப்பிடி சமாளிப்பது. கடன் வாங்காமல் இதை சமாளிப்பது எவ்வாறு?

நமது தேவைக்கு நமது விருப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்பிடி?

ஏற்கனவே மாத பட்ஜெட் போட்டுவிட்டதால் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவுத் தேவைப் படும் என்பது திட்டவட்டமாகத் தெரியும் இப்போது. குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை இந்த மாத அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவையானவையை முன்கூட்டியே சேமித்து வைத்தால், மேற் கூறியுள்ள பிரச்சனைகள கடன் வாங்காமல் எளிதில் சமாளிக்க முடியுமா? 3 மாதத்தில் திரும்ப வேலை கிடைக்காமல் போய்விட்டால், அது எட்டு மாதமாக நீட்டித்தால் என்ன செய்வது?

இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ள Dave Ramsey சொல்வது 3-6 months க்கு தேவையானப் பணம் முன் கூட்டியே சேமியுங்கள் என்று.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தது 6 மாத சேமிப்பு தேவை. இது எவ்வளவு கடினமானாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஒன்றே உங்களை மறுபடியும் கடன் வாங்க இட்டுச் செல்லாத நிலையை ஏற்படுத்தும். வீடு வாங்க வாங்குகிற கடனுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் தினசரித் தேவைக்காகவும் வாங்கும் கடனையும் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டும் வேற.

ஆனால் நான் 8 ஒன்பது வருடம் முன் செய்தது இதை விட வித்தியாசமானது.

நண்பர்கள் அனைவரும் வீடு வாங்கும் போது எனக்கும் வீடு வாங்கனும் என்ற நமைச்சல். அதற்குத் தயார் பண்ணிக் கொள்ள 8-9 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன்.

ஒரு வீடு வாங்கத் தேவைப்படும் primary லோன்க்கு 10% முதல் 20% வரை down payment (Our initial own contribution)  போடுபவர்களுக்கு 6% வட்டிக்கு குறைவாகவும், அதை விட குறைவாக down payment போடுபவர்களுக்கு வட்டி அதிகமாகவோ அல்லது வீட்டு லோன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு நான் வீடு வாங்கும் காலத்தில் இருந்தது. இதை சரி கட்ட எல்லோரும் ஒரு செகண்டரி லோன் அதிக வட்டியில் எடுத்து primary  லோன் க்கு down payment  போடுவார்கள். பிறகு இரண்டு லோன் க்கும் சேர்ந்து வட்டியும் முதலுமாய் கட்டி வருவார்கள்.

நான் முடிவு செய்ததது செகண்டரி லோன் வாங்கக் கூடாது என்று. Primary லோன் க்கு 20% down payment போடணும். இது மட்டுமல்ல, வீடு வாங்கி கொஞ்ச நாளில் செய்து வந்த வேலை போய்  விட்டால் 6 மாதம் சமாளிப்பது எப்பிடி. வீடு வாங்கிய பிறகு லோன் அமௌண்ட் கூட budget ல் இடம் பெற்று விடுமே.

இதற்காக 3 வருடங்கள் சேமிக்க ஆரம்பித்து விட்டேன். வீண் செலவுகள் தவிர்த்து விட்டேன். வீட்டில் மனைவி பொறுமை இழந்து விட்டார்கள். வீட்டுத் துணையின் உதவி இல்லாமல் எந்த மாதந்திர பட்ஜெட் எதுவும் வொர்க் ஆகாது. வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் தியாகங்கள், மனைவி மக்களின் உதவியில்லாமல் கடனற்ற வாழ்வு சாத்தியமில்லை. என் தந்தை வழியிது, என் வழியில் நான் பார்த்து வருவதும் அதே.

கடைசியில் 17-18% down payment உடன் 6 மாத saving உடன் வீடு வாங்கினேன். 3 வருடம் பொறுத்ததால் வீட்டு விலை அந்த காலகட்டத்தில் கொஞ்சம் ஏறியது உண்மை. ஆனால் செகண்டரி லோன்க்குப்  போக வேண்டிய அவசியமில்லாமல் போனதோடு இன்னும் 15-20 வருடம் செகண்டரி லோன் கட்ட வேண்டிய அவசியமில்லை. மாத பட்ஜெட் இல் நெருக்கடி இருக்காது. கட்டியிருக்க வேண்டிய லோன் வட்டியையும், வீட்டு விலை ஏற்றத்தையும் பார்த்தால் இழந்து எதுவுமில்லை மக்கா.

இந்தப் பணமெல்லாம் primary லோன் க்கு அதிகம் கட்டி கூடிய சீக்கிரம் அடைக்கப் பார்க்கக் கூடிய ஒரு தைரியத்தை இந்த செயல் அளிக்கிறது.

இப்போது அந்த 6 மாத தேவைக்கான சேமிப்பை எதற்கு உபயோகப் படுத்தனும், எதற்க்கெல்லாம் கூடாது என்று

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Thursday, August 29, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 6

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 6

திடமான வாழ்வு வாழ திட்டமிடுதல் முக்கியம். பொருளாதார வாழ்வில் திட்டமிடுதலுக்கு ஒரு மாத budget தேவை. Budget இல்லாமல் வருவதும் போவதும் தெரியாது. திட்டமிடுதல் சாத்தியமில்லை.

ஒரு மாதத்தில் என்னென்ன வரவுகள் செலவுகள் என்பது முன்கூட்டி ஒரு பிளான் போட்டு வைக்கும் போது பற்றாக்குறை எவ்வளவு என்பது தெரிய வரும். கடன் வாங்கும் நிலை ஏற்படுமா, அதை எவ்வாறு தவிர்க்கலாம், எது அநாவசியம், எதை விற்று பொருள் ஈட்டலாம். எவை வாங்குவதற்கு இந்த மாதத்தில் இடமிருக்கும் என்பதை திட்டமிட முடியும்.

திட்டமில்லா வாழக்கை திசையில்லாப் பயணமாக மாற வாய்ப்பிருக்கு.

திட்டமிடும் போது எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகளுக்கு என்ன செய்வது, எவ்வாறு சமாளிப்பது. இந்த சமயத்தில் கடன் வாங்காமல் எப்பிடி சமாளிப்பது.

இதற்குத் தேவை ஒரு எமெர்ஜென்சி fund. ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக ஒதுக்கி வைத்து விட்டு, அதை பேங்க் போய் எடுக்க வேண்டிய நிலை இல்லாமல் வீட்டில் தனியாய் cash ஆக வைத்திருக்க வேண்டும்.

மாதந்திர சம்பளக்காரனுக்கு 2000-5000 வரை கூட போதுமானதாக இருக்கலாம். இதை எப்பிடியாவது ஒதுக்கி வைக்க வேண்டும். எது emergency என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கால அரிசிப் பானைக்குள் அல்லது பாத்திர டப்பாக்குள் ஒளித்து வைத்திருக்கும் பணம் போன்றது.

டிவி ரிப்பேர், refrigerator ரிப்பேர்க்கெல்லாம் இதிலிருந்து எடுக்கக் கூடாது. சாதாரணமாக வண்டி பழுதடையும் போது பொதுத்துறை வாகனங்களை உபயோகப் படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது இந்த பணத்தைத் தொடக் கூடாது. அடுத்த நாள் பேங்க் போய் எடுத்து கட்ட அவகாசம் இருக்கும் போதும் தொடக் கூடாது.

எது நாம் எதிர்பார்க்காமல் திடீரென ஏற்படும் செலவு, budget ல் இடம் பெறாதது, பிறரிடம் கையேந்த வைக்கும் நிலையை ஏற்படுத்தும் போது மட்டுமே இதைத் தொட வேண்டும்.

 பாங்கில் போட்டு வைத்தால் இந்த அமௌண்ட் க்கு நல்ல வட்டி கிடைக்கலாம். அதைப் பார்த்து பாங்கில் term டெபொசிட் போட்டு வைத்தால் எடுக்கும் போது பெனால்டி வர வாய்ப்புண்டு. ATM machine மூலம் எந்த நேரத்திலும் எடுக்கக் கூடிய வாய்ப்பாக இருந்தால் பரவாயில்லை. அவசரத்துக்கு வாராந்திர இறுதியில் ஏற்படும் செலவிற்கு, குறிப்பாக யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பதற்கு, இதை பயன்படுத்தனும்.

கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும்.

இது மட்டுமல்ல. இன்னொன்றும் தேவை.

அடுத்ததில் தொடர்கிறேன்.

Wednesday, August 28, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 5

வேலைக்கு சேர்ந்த இரண்டாம் மாதம் வீட்டு வாசல்ல ஒரு LIC agent வந்து நின்னார். எப்பிடியா மோப்பம் பிடிக்கிறாங்கன்னு நினைச்சேன். ஒரு பாலிசி எடுங்கன்னு ஒரே வற்புறுத்தல். மாதா மாதம் கட்டினாப் போதும், ஒரு ஒரு லட்ச ரூபாய் பாலிசி எடுத்துறலாமான்னார். எண்டோவ்மென்ட் பாலிசி, moneyback பாலிசி ன்னு சொல்லிகிட்டே போறார். ஒரு வாரம் கழிச்சு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்.

2000 சம்பளக்காரனுக்கு 1 லட்சம் பாலிசி எடுத்தா வருடத்துக்கு 3800. மாதா மாதம் கட்டினா 4100 ஆகுது.Maturity period ல அதிக வித்யாசம் இருக்காதுன்னார். எப்பிடி சரி பார்க்கிறது. தெரியாது. எதற்கு அதிகம் கொடுக்கணும். Premium கட்டுவது Annual payment ஆக இருக்கட்டும்ன்னு முடிவு பண்ணி விட்டேன்.

வருட ப்ரீமியம் 3800 எனும் போது இரண்டு மாத சம்பளம் போகும்ன்னு நினைச்சா ரொம்ப ஜாஸ்தின்னு பயமாயிருந்தது. அதனால 50K பாலிசி எடுக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். MoneyBack பாலிசி எடுத்தா premium ஜாஸ்தி, 5 வருடம் கழித்து என்ன செய்வது என்ற ஒரு பக்குவம் அப்போது இல்லை.

மாதா மாதம் LIC க்கு கட்டுவதற்குப் பதிலா மாதம் 200 என் பேங்க் அக்கௌன்ட் ல தனியா ஒதுக்கிறது என முடிவு செய்தேன். வட்டியும் 9 டு 10% கிடைச்சது. சுலபமா கட்ட முடிஞ்சது.

இரண்டு இலட்சியம் நிறைவேறியது. ஒரு காப்பீடு கிடைத்த உணர்வு, மாதம் 5% சேமிப்பு கிடைக்க ஒரு வழி பண்ணிக் கொண்டது ஒரு திருப்தி. அதிகம் கட்ட வில்லை, கையக் கடிக்காது என்ற ஒரு திருப்தி.

போன வருடம் mature ஆகி 1.4 lakhs கிடைத்து.  இப்போது deposit பண்ணியுள்ளேன். Inflation க்கு ஈடு கொடுக்க முடியிற அளவு சேமிப்பு இல்லைன்னு இப்ப புரியுது. அப்போது எவ்வளவு சேமிக்கனும்ன்னு தெரியிலை.

இங்க வீடு வாங்கும் முன்னர் கூட வீட்டு வரியைக் கட்ட ஒரு Escrow அக்கௌன்ட் ஓபன் பண்ணச் சொல்லி வீட்டு லோன் வாங்கும் போது வற்புறுத்துவார்கள். அது தேவையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். Escrow அக்கௌன்ட் இல் போட்டு அதன் வட்டியை நாம் அனுபவிக்க முடியாமல் போவதை விட, நாமே ஒரு அக்கௌன்ட் ல் தனியாகப் போட்டு சேமித்து வந்தால், வட்டியும் கிடைக்கும், கட்டும் போது  சிரமுமும் இருக்காது.

நான் வேலை சேர்ந்த இடத்தில் 15 பேருக்கு குறைவாக இருந்ததால் PF அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாது என்றனர். நான் விடலை. SBI யில போய் PPF அக்கௌன்ட் brochure வாங்கி வந்து எல்லோருக்கும் PPF அக்கௌன்ட் ஓபன் பண்ண வைத்தேன். அலுவலக contribution கிடைக்க வழி செய்ததது இது.

இப்போது வேலை சேர்ந்த முதலே பென்ஷன் அக்கௌன்ட் மற்றும் 401K அக்கௌன்ட் ல் தவறாமல் போட்டு வருகிறேன். மாதம் எப்பிடியும் 12% சேமிக்கிறேன்.

இது துளி கூட retirement period இல் போதாது. குறைந்தது 15% மாதம் தோறும் சேமிக்கணும். உங்கள் வயது 50 நெருங்கும் போது இன்னும் அதிகம் சேமிக்கணும்.

Dave தன்னுடைய புத்தகத்தில் கேட்பது உனக்கு retirement காலத்தில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு தேவை என்பதை இப்போது முடிவு செய்து கொள். Inflation 4% போக குறைந்தது 8% interest வரும் mutual fund தேடி மாதம் தோறும் இன்வெஸ்ட் செய் என்கிறார். மாதம் தோறும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று அதில் தோராயமாகத் தெரிய வரும் என்கிறார். அவரது புத்தகமோ அல்லது இணையத்திலுள்ள retirement calculators உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த எதிர்கால நோக்கு இல்லாததால் தான் LIC saving பண்ணும் போது தெரியாமல், குறைந்த அளவு சேமித்தது. இப்போது வந்துள்ள matured அமௌண்ட், எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

மேலும் தொடர்கிறேன்.

Tuesday, August 27, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 4

தமிழகத்தில் கல்லூரி படிப்புகள் முடித்துக் கொண்டு முதலில் வேலைத் தேடிக் கொண்டது அஸ்ஸாமில் அரசு நிதியில் நடத்தப் பட்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வாத்தி வேலை. மாதம் 2200 சம்பளம். வீட்டு வாடகை 500 போக மீதி என் கையில.

அங்கு எல்லா நண்பர்களும் உள்ளூர் அஸ்ஸாமியார்களே. ஒரே ஒரு தமிழ் நண்பன் 7 மாதம் கழித்து அறிமுகமானான். விலங்கியல் மருத்துவக் கல்லூரி (Veterinary) PG students மற்றும் professor களுக்கு நிறைய ப்ரோக்ராம் எழுதிக் கொடுப்பேன். இலவசமாகத் தான்.

அப்போது உதவி தேடி வந்த அஸ்ஸாமிய நண்பன் நாசர் அஹம்மது. மிகப் பெரிய பணக்காரன். Guwahati ஃபான்சி பஜார் ல் ஒரு மிகப் பெரிய கட்டிடத்தின் உரிமையாளன். நான் அவனுக்குப் ப்ரோக்ராம் எழுதிக் கொடுத்தாலும், நான் அவனிடம் கற்றவை மிக அதிகம்.

அதில் மிக முக்கியமானது கடனற்ற வாழ்வு வாழ்வது எப்பிடி என. சில students, colleagues என்னிடம் கடன் வாங்கிப் போவார்கள். அடிக்கடி நடக்கும். நாசர் மிகவும் கடிந்து கொள்வான். அவர்களிடம் எடுத்துரைத்து வாங்கியும் கொடுப்பான். அவர்களுக்கு எப்பிடி கடன் அடைக்க வேண்டும் என்று சொல்லித் தருவான்.

எனக்கு சமைக்கத் தெரியாது. அவனுடைய மெஸ் இல் சாப்பிட ஏற்பாடு பண்ணிக் கொடுத்தான். கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிக் கொடுத்தான். 10 அல்லது 20 ரூபாய்க்குள் ஒரு முழு நாள் சாப்பாடு முடிந்திரும். புதிதாக ஒரு உடுப்பி ஹோட்டல் கட்டினார்கள். 32 ரூபாய் vegetarian தாளி (தட்டு). சில நாள் அங்கு போய் சாப்பிடுவேன். மிகவும் கடுமையாக விமர்சிப்பான். ஒரு வேளைக்கு 32, ஒரு மாசத்துக்கு 900 க்கும் மேல். மூணு வேளை உன்னால் சாப்பிட முடியாது. கூடாது. போய் பக்கத்திலுள்ள ராஜஸ்தானி மெஸ் ல 10 ரூபாய் கொடுத்து சாப்பிடு என்பான். பல தடவை அவன் வீட்டில் சாப்பிட்டு இருக்கேன்.

வாங்கிற சம்பளத்தை எப்பிடி செலவு செய்யணும் சேமிக்கணும் என்பதை என் வயதுடைய ஒரு பணக்காரன் அப்போது எனக்கு சொல்லிக் கொடுத்தான். எதனால் பணக்காரன் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பான். காரில் போகும் வசதி இருந்தும் தான் ஸ்கூட்டர்ல் போவதின் பயன் பற்றி சொல்வான்.

நான் எழுதிக் கொடுத்த ப்ரோக்ராம்  க்கு எனக்கு கூலி ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக் கொடுக்கணும்ன்னு. இரண்டு மாதம் கழித்து கடைசி ப்ரோக்ராம் முடிந்தவுடன் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொடுத்தான்.

நான் வேலையை விட்டு  விட்டு வரும் போது, என் மேற்படிப்பிற்கு உதவியதால் வேலை செய்த இடத்தில் அக்ரீமெண்ட் படி 25000 கட்டணும். என்னிடமிருந்தது 22000 மட்டுமே. நாசர் தான் 4000 கடன் கொடுத்ததும் இல்லாமல், என் வீட்டை காலி செய்ய உதவி ரயில் நிலையத்தில் ஏற்றியும் விட்டது.

ரயில் நிலையத்தில் அவன் எனக்கு சொல்லியது. அந்த 4000 எனக்குப் பெரிதல்ல. ஆனால் உனக்குப் பெரியது. இனி நாம்  சந்திப்பது அரிது என்று தெரியும். யு must return தட் money. நீ எங்கிருந்தாலும் அதைச் செய்யணும் என்றான். Installment ல் கொடுத்தாலும் பரவாயில்லை.

பணத்தால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்ற எண்ணம் என் மனதில் என்றும் வரக் கூடாது. நம் நட்பை கொச்சைப் படுத்தும் விதமாக  இந்த பணம் அமையக் கூடாது என்றான். நல்ல வேளை ! நீ ஊர் திரும்பும் போது  என்னிடம் கேட்டாய். முன்பே கேட்டிருந்தால் நமக்குள் இருந்த நட்பு பாதிக்கப் பட்டிருக்கலாம். பார்த்தாயா நீ கடன் கொடுத்தவர்கள் அதற்குப் பிறகு உன்னை சந்திப்பதை தவிர்ப்பதும் இல்லாமல் உன்னைப் பார்த்து கூனி குறுகிற மாதிரி ஆகி விட்டது. உங்கள் நட்பு என்ன ஆச்சு என்றான். ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

பெங்களூர் வந்தவுடன் அப்பாவிடம் புரட்டி அவனுக்கு அனுப்பி விட்டேன்.

20 வருடம் கழித்து போன வருடம் அவன் எங்கிருக்கிறான் என்று இணையத்தில் தேடி கண்டுபிடித்ததில் இப்போது வெளி நாட்டில் ஒரு பெரும் பதவியில் இருக்கிறான்.

போனில் அவன் சொல்லியது கேட்டு செம சிரிப்பு வந்தது. நான் உன்னிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றான். நீ உட்கார்ந்திருந்த அதே சீட் அதே வேலையை நானும் கொஞ்ச காலம் செய்து கொண்டு இருந்தேன். கம்ப்யூட்டர் கற்கணும் ங்கிற ஒரு வெறி, உன்னைப் போல வெளியிலப் போய் நல்ல அனுபவம் பெறனும். We learned from each other mutually என்றான்.

Dave ராம்சே இதையேத் தான் சொல்கிறார். கடன் வாங்குவதால் இழப்பது அதிகம். கடனற்ற வாழ்வு வாழும் போது மட்டுமே நீ ஒரு பணக்காரனாக முடியும் என்கிறார். நட்பு, உறவுகளின் இழப்பை விடவா பணம் முக்கியம். இவர்களிடம் கடன் வாங்காதே. வாங்கினால் முதலில் இதை அடையுங்கள்.

அரசு அங்கீகரிக்கப்  பட்ட வங்கிகள் தனியார் வங்கிகளிடம் மட்டுமே வாங்குங்கள். கந்து வட்டி மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் கடன் வாங்கவே வாங்காதீர்கள். மீண்டு வர பல ஆண்டுகள் பிடிக்கலாம், போண்டியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் தொடர்கிறேன்.

Saturday, August 24, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 3

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 3

தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடன் வாங்கிற நிலைமையிலத் தான் நாமிருக்கிறோம் என்கிற நிலை வரும் போது வருமானத்தை உயர்த்த வேண்டிய வழி முறைகளைத் தேடுவது தவிர வேறு வழியில்லை. பார்ட் டைம் வேலைகள் மூலம் கொஞ்சம்  உயர்த்த முடியும்.

அப்பா 1986 ல் ரிடையர் ஆனார். 1970லிருந்து பார்ட் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். பக்கத்திலுள்ள லேடீஸ் கிளப்பில் கணக்கர் ஆக சேர்ந்தார். மாதம் 70 ரூபாய். அவருடன் வேலை பார்க்கும் இன்னொருவர் மாலை வேளையில் சோடா கடை வைத்தார். அவர் மகன் என் அப்பா லேடீஸ் கிளப் ல் வேலை செய்வதை கிண்டல் செய்வான். கண்டுக்க மாட்டேன். வீட்டைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் எதற்கு கவலைப் படனும்.

82களில் அதை 100 ஆக்கிக் கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். முடியாது என்று சொல்லி விட்டு ஓரிரு மாதங்களில் 90 ஆக்கினார்கள்.

அலுவலகத்தில் கிடைக்கும் ஓவர் டைம் வாய்ப்பை விட மாட்டார். கான்டீன் காபி யை விட அம்மா கொடுத்து விடச் சொல்லி நாங்கள் கொண்டு போவது கொஞ்சம் சூடு ஆறிப் போயிருந்தாலும் ஒன்னும் சொல்லாமல் குடிப்பார். இந்த எக்ஸ்ட்ரா வருமானம் அம்மாவின் தீரா ஆசையான நகைக்கடை சீட்டு மற்றும் பலவற்றிற்கு உதவியது.

அத்யாவசியப் பொருட்களுக்காக கடன் வாங்க வேண்டிய நிலைமையை நாங்கள் சந்திக்க விடாமலே  செய்து விட்டனர். Dave ராம்சே யும் இதைத் தான் சொல்கிறார். கடன் அடைக்கும் வரை வாரத்திற்கு 60 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்தாலும், குறைந்தது இரண்டு மூன்று வருடங்களுக்கு கடன் தீரும் வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

கடன் அடைப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. வருங்கால சேமிப்பைத் தொடங்க வேண்டும். அது கடன் தீரும் வரை பார்ட் டைம் வேலை செய்யுங்கள் என்கிறார்.

கடன் வாங்குவதை நிறுத்துங்கள். கடன் அடையுங்கள். அடைத்த பின் கடனிற்கு கட்டிய அத்தனைப் பணமும் சேமிக்க முடியும். ஒரு இடத்தில் Dave சொல்கிறார். உங்களது கம்பெனி யில் ரிடயர் மன்ட் saving பணத்தில் கம்பெனி மாட்சிங் 3 பெர்சென்ட் இருந்தாலும், முதலில் 10 பெர்சென்ட் மேல் வட்டி இருக்கும் இடத்தில் முதலில் கடன் அடையுங்கள் என்கிறார். பிறகு கம்பெனி கொடுக்கும் அந்த 3 பெர்சென்ட் க்கு சேமிக்கலாம். 15 மாதத்தில் கடன் அடைக்க முடியும் என்றால் அதற்காக பொறுத்திருத்தல் நலம்.

நான் செய்தது, பாங்கில் 2 அல்லது 3 பெர்சென்ட் வட்டிக்குப் பணத்தை போட்டு வைப்பதை விட, 7 அல்லது 8 பெர்சென்ட் வட்டிக்கு கார் வாங்காமல், காஷ் கொடுத்து வாங்கினேன். என் மனைவி 8 3/4 பெர்சென்ட் வட்டிக்கு 7 வருடம் முன் கார் வாங்கினார். ஒரு நாள் சொல்லாமல், முழு கடனையும் கட்டி விட்டேன். 2 நாள் செம கடுப்புல இருந்தாங்க. அடுத்த மாத தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்ற நிலை வந்ததும் கொஞ்சம் மனம் மாறியது. அடுத்த சில மாதங்களில் அவர்களது சேமிப்பு மற்ற பிற செலவுகளுக்கும் பற்றாக்குறை இல்லை என்று தெரிய வர பல மாதங்கள் ஆகியது.


மேலும் தொடர்கிறேன்.

Friday, August 23, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 2

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 2

அப்பாக்கு பசங்க கேட்கிறத எப்பிடியாவது வாங்கிக் கொடுக்க முடியுமான்னு பார்ப்பார். அம்மா கறாரா முடியாது என்பாங்க. இந்த மாச budget ல பணம் ஒதுக்கல, முடியாதும்பாங்க. இல்லாட்டி வேற எது கட் பண்ணலாம்ன்னு யோசிப்பாங்க.

வீட்டு பக்கத்திலேயே சித்தப்பா, மாமா இருந்தாலும், அவர்களை கேள் என்றோ, அவர்களிடம் கடன் வாங்கி செய்வது என்றோ துளி கூட இருவருக்கும் பிடிக்காது. பிறரிடம் கடன் வாங்கினால் அவர்களிடம் அடிமையாகவோ, பணிந்து போக வேண்டிய நிலைமை யாயிடும் சாத்தியமில்லை என்று சொல்லி விடுவார்கள்.

தீபாவளிக்கு தீபாவளி மாமா செமையா பட்டாசு வாங்கித் தருவார். அது மட்டுமே.

பால் மற்றும் நெய் கடன் கூட சம்பளம் வந்த அந்த வாரமே முழுதும் கொடுத்து அடைச்சிருவாங்க. கலர் டிவி புதுசா வந்த போது கூட தனியார் யாரிடமும் கடன் வாங்காம, கம்பெனி தொழிலாளர் கூட்டுறவு வங்கியில கடன் வாங்கி சீக்கிரமே மாத budget ல போட்டு அடைச்சிட்டாங்க.

மாத செலவு போக பத்து சதவீதமாவாவது சேர்க்க முடியுமான்னு ரொம்ப யோசிப்பார் அப்பா. அம்மாக்கு நகை வாங்கிக்கணும் என்பது தவிர வேற எந்த எதிர்கால சேமிப்பு பற்றி ஒன்றும் தெரியாது. இதுக்காகவே நவாப்ஜான் நகைக் கடையில எப்பிடியாவது சீட்டு போட்டு பணம் கட்டிருவாங்க.

 தீபாவளிக்கு மட்டும் எப்பிடியாவது ஒரு பட்டுப் புடவை வாங்கனும்ன்னு ரொம்ப ஆசைப் படுவாங்க. இரண்டு தீபாவளிக்கு வாங்கினா அடுத்த இரண்டு தீபாவளிக்கு நூல் அல்லது சுங்குடிப் புடவை தான். கல்யாணம் காட்சிகளுக்கு பழைய பட்டுப் புடவை தான். அழுக்கு படியாம தூசி படியாம வைச்சிருப்பாங்க. பழசு எதையும் விடாம பாத்திரக்காரனுக்குப் போட்டு பாத்திரம் வாங்கிடுவாங்க.

பக்கத்து வீட்டு Lambrador ஸ்கூட்டர் பார்த்து எங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி கடைசியில ஒரு 2nd hand சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். இரண்டு வருஷம் கழித்து யாரும் ஒட்டலைன்னு பார்த்தவுடன் வந்த காசுக்கு கொடுத்துட்டாங்க.

இவ்வளவும் ஏன் சொல்றேன்னா இதைத் தான் Dave தன்  புக் ல சொல்றார். Budget இல்லாம வரவும் தெரியாது செலவும் தெரியாது. என்ன பண்ணனும் என்றே தெரியாது .

கடன் வாங்குபவன் கடன் கொடுப்பவனுக்கு அடிமையாகி விடுவான். சொந்த தாத்தா பாட்டியிடம் பணம் வாங்கி பீஸ் கட்டினா கூட நாளை அவர்களது ஏச்சு பேச்சுக்கு பணிய வேண்டியிருக்கும்.

யாரிடமும் கடன் வாங்காதே. கடன் வாங்கிக்  கொண்டிருந்தால் எப்போது முழு கடனும் அடைப்பாய். தேவைக்கு மீறிய பொருட்களை வைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு கடன் அடைக்கனும்.

கடன் முழுவதும் அடைக்கும் வரை விடாது இதை செயல் படுத்த வேண்டும். எந்த புது கார் வாங்கினாலும் முதல் இரண்டு வருடத்தில் வீழ்ச்சி அடையும். நிறைய கடன் இருக்கும் போது புது வண்டி வாங்குவதில் அர்த்தம் இல்லை. மூன்று வருட பழையது தேவைக்கு ஏற்ற அளவுக்கு திறம்பட செயல் படும் என்கிறார் Dave.

இது என் பெற்றோரின் உண்மை வாழ்க்கை.

இங்கு என் அம்மாவின் சேமிப்பு முறை சீட்டு போடுவதில் இருந்தது. ஆனால் இது சரியல்ல என்பது என் நிலை. கண்டிப்பாக இதை பரிந்துரைக்க மாட்டேன். இதை ஒரு வங்கி deposit, mutual fund, insurance சேமிப்பு என்று எடுத்துக் கொள்ளவும்.

அடுத்த தொடரில் தொடர்கிறேன்.

(கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி - 1)

Thursday, August 22, 2013

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி

கடனற்ற வாழ்வு வாழ்வது எப்படி. இது தான் Dave Ramsey தன்னோட புக் மற்றும் டாக் ஷோ, பிற கோர்ஸ் கள்  மூலம் கட்டணத்துடன் சொல்லித்தருவது.

ஆனால் இவரது புத்தகத்தைப் படிக்கும் போது என் பெற்றோரின் 59 வருட திருமண வாழ்க்கை என் முன் வந்து நிற்கிறது.

இந்த தடவை ஊர் போன போது அம்மா மேல் வீட்டு உறவினர் உதவியுடன் தான் எழுதி வரும் வரவு செலவு கணக்கு புத்தகத்தை என் கையில் நீட்டிய போது ஒரு குற்ற உணர்வுடன் அதைப் பார்த்தாலும், அவர்களது சிறந்த வாழ்க்கை என் கண் முன் வந்து நின்றது. அப்போது இந்த ராம்சே புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பா ஏழாவது கூட பாஸ் பண்ண வில்லை. அம்மா பள்ளிக் கூடம் போனதில்லை. இன்றும் கூட ஒரு கடன் இல்லாமல் தன் வரவு செலவு கணக்குகளை எழுதி வரும் போது அதில் அவர்களது மாதாந்திர strength அண்ட் weakness புரிந்து செயல் படுவது  இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

நான் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை முன்பு பிளஸ் ல் பகிர்ந்திருந்தேன். சிறு வயதில் நான் பார்த்த வரை அந்த வீட்டில் நடமாடியவை இன்றும் நினைவுக்கு வருகிறது.

மாத சம்பளம் வருவதற்கு முதல் நாள் இரவு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அந்த மாத budget போடுவார்கள். அம்மா, கட்ட வேண்டிய வீட்டு லோன், வாடகை வரவு,  பால் கணக்கிலிருந்து ஒவ்வொன்றாக சொல்லி வர, அப்பா ஒரு notebook ல் எழுதிக் கொண்டே வருவார். அந்த மாதம் வரும் பண்டிகை அல்லது எதிர்பார்க்கும் திவசம் செலவு வரை இருக்கும்.

அப்பாவின் சம்பளம் குறைவாக இருந்தாலும், அது ஒரே அளவு தான்.  இருந்தாலும் மாத budget இருவர் கையிலும் இப்ப. சாலரி வந்தவுடன்அப்பா cheque கொடுக்க வேண்டியது போக மீதி தொகையை அம்மாவிடம் cash ஆகா கொடுத்து விடுவார். பிறகு மாதம் முழுவதும் அம்மா administration தான்.

முதலில் கொடுக்க வேண்டிய சிறு சிறு கடன்களை, சீட்டுகளை, பால்காரர்க்கு கொடுப்பதெல்லாம் கொடுத்து விடுவார்கள். கையில் budget இல் எழுதியது தவிர மீதிக்கு எதிர்பாராத செலவிற்கு ஒரு தொகை வைத்திருப்பார். திடீர் உறவினர் வருகையெல்லாம் இதில் சமாளித்து விடுவார். சினிமாக் கொட்டகையில் நாங்க தரை டிக்கெட். வந்த உறவினருக்கு மேல 2nd கிளாஸ் அல்லது 1st கிளாஸ் டிக்கெட் கொடுத்து சரி கட்டிவிடுவார்.

ஒவ்வொரு இரவும் அன்று தான் செய்த செலவை எங்களிடம் சொல்லி அந்த வரவு செலவு கணக்கு புத்தகத்தில் எழுதச் சொல்வார். ஒரு வாரத்தில் அப்பாவிடம் வந்து total போடச் சொல்லி தன் கையில் மீதியுள்ளதை சரிபார்த்துக் கொள்வார். இவர்கள் budget ல் துண்டு விழுவதை துல்லியமாக அறிந்து கொள்வார்கள். சரி செய்ய எதை குறைத்துக் கொள்ள வேண்டும் எதை வாங்கக் கூடாது என்று அப்போது முடிவாகி விடும்.

இதென்ன பெரிய விஷயம் என்கறீர்களா. Dave Ramsey சொல்லித் தருவது இதோ மேலே உள்ள என் அப்பா அம்மாவின் வாழ்க்கை முறையை. இதை தான் முதல்லிருந்து முதல் ஆறு சாப்ட்டர் களில் கவர் செய்துள்ளார்.

கல்லூரி படிப்பற்ற இவர்கள் வாழ்க்கையை இப்போது அலசிப் பார்க்கிறேன்.

மீதியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Friday, August 16, 2013

ஆழ்ந்த வாசிப்பு

ஆழ்ந்த வாசிப்பு என்பது என்னிடம் சின்ன வயதிலிருந்தே கிடையாது. வானம்பாடிகள் பாலா சார் அடிக்கடி கிண்டல் பண்ணுவார் 'வாசிக்கணும், படிக்கக் கூடாது'ன்னு. என்னளவில் இரண்டும் ஒன்றாகவே கருதி இருந்து வந்துள்ளேன்.

ஆழ்ந்த வாசிப்பு என்றால் என்ன? படிப்பதை புரிந்து கொண்டு அதை analyse செய்யக் கூடிய பக்குவத்துடன் படித்து உள்வாங்கிக் கொள்ளுதல் என்று கொள்ளலாமா.  எதை அவ்வாறு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

படிப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து உபயோகப் படுத்தும் அளவிற்கு எதைத் தேவை என்று எப்போது எடுத்துக் கொள்கிறோமோ அப்போது வாசிப்பதில் கவனம் இருக்கும். உதாரணமாக பரிட்ச்சைக்குப் படிக்கும் போது மனப்பாடம் பண்ணி எக்ஸாம் பாஸ் பண்ண மட்டும் உபயோகப் படுத்துவோம் என்றால் அந்த சமயத்தில் உள்வாங்கி வாசித்தது எத்தனை நாள் நிற்கும். பரீட்சை முடிந்ததும் மறந்து விடும்.

எல்லா வித புத்தகங்களும் பரிக்ஷைக்குத் தேவையானதது  மாதிரியானதா ? இல்லை. அரசியல் பொருளாதார சமூகவியல் புத்தகங்கள் படிக்கும் போது அதை உள்வாங்கி வாசிப்பது மிகவும் தேவையானது. இவைகள் பலகாலம் நம்மிடம் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

வாசிப்பனுபவம் கேட்டும் பெறலாம். சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார சமூக அறிஞர்களின் பேச்சுக்களை கேட்கும் போது உள்வாங்கி நன்கு புரிந்து ஆராய்ந்திருந்தால் அவை பல காலம் நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். நமது பேச்சில் அவைகள் கண்டிப்பாக ஒரு உதாரணம் மற்றும் ஆதாரமாக வெளிவரக் கூடும்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல உன்னத அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்களின் பேச்சுகளை நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இப்போது எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுகள் மட்டுமே மறந்து விட்டது. அவர்களை சந்தித்த அனுபவம் இடம் ஆகியவை ஞாபகம் இருக்கிறது. எது தேவையோ அது இருப்பதில்லை, தேவையற்றது தொடர்கிறது. காரணம் உள்வாங்கி புரிந்து கொள்ளும் பக்குவம், வயது, அறிவு அப்போதும் இல்லை  இப்போதும் இல்லை.

எந்த ஒரு புத்தகத்தையோ படிக்கும் போது வாசிக்கும் போது அதை ஆராய்ந்து சமூக வாழ்வில் தொடர்பு படுத்தி பார்க்கும் போது அது தேவை அல்லது தேவையற்றது என்று பிரித்து வாசிப்பதின் பயன் பல காலம் நிற்கும். வெறும் ஒரு எழுத்தாளனின் படைப்பை மட்டும் படித்து ஆராதிப்பதின் மூலம் இழப்பது தான் அதிகமாக இருக்கும். காலமும் உலகமும் மாறிக் கொண்டு இருக்கும். நாம் அந்த எழுத்தாளனுடன் பின் தங்கி விடுவோம்.

பரந்த அனுபவம் பெற பல எழுத்தாளர்களின் படைப்பை படித்து புரிந்து கொள்வதில் வரும் அனுபவம், புலமை, பெருமை ஆகியவை  ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்துக் கொள்ளும் போது எல்லாம் பின் தங்கி விடுகிறது.
படித்தவர்கள் பேசும் போது வெறும் கேட்டு தலையாட்டும் கூட்டமாகி விடுவோம்.

Thursday, August 15, 2013

வருங்கால ஓய்வு நிதி

வருங்கால ஓய்வு நிதி சேர்ப்பு பற்றி பல கட்டுரைகள் இணையத்திலிருக்கு. இன்னிக்கு பென்ஷன் fund பற்றிய நோட்டீஸ் ஒன்று வந்தது. retire ஆக இன்னும் பல வருடம் இருந்தாலும் என்னதானிருக்குன்னு ஓபன் பண்ணிப் பார்த்தேன். சிறுதுளின்னாலும் கொஞ்சம் சுவையோடு தானிருக்கு.

எங்க ஆபீஸ் ல பென்ஷன் fund க்கு ஆபீஸ் contribution உண்டு. 401K க்கு கிடையாது. நானே தான் போட்டு வருகிறேன். 15 வருடப் பழக்கம். சேருது.

இன்னிக்கு முக்கியமா கண்ணில உறுத்தியது அதை retire ஆகும் முன்னர் எவ்வாறு எடுக்கப் போறோம்ன்னு தெரிவிக்க வேண்டும்.

ஒன்று நாம் உயிருடன் இருக்கும் வரை நாமே முழுத்தொகை எடுக்கலாம். நாம் இறந்த பிறகு பென்ஷன் அல்லது பிற ஓய்வு நிதி distribution நின்று விடும்.

இரண்டாவது நாம் உயிருடன் இருக்கும் வரை  குறைவாகவும், நாம் போன பிறகு நமது nominee (பெரும்பாலும் spouse, spouse from older marriage , etc)  அவர்கள் இறக்கும் காலம் வரை அதே அமௌண்ட் பெறலாம்.

இரண்டாவது option போல இன்னும் சில options உண்டு. சோசியல் செக்யூரிட்டி benefits க்கும் இதே மாதிரி options உண்டு.

இங்கு தான் நாம் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

முதல் option ல் அதிக பணம் வர வாய்ப்பு உண்டு. ஏறக்குறைய நாம் கடைசியாக வாங்கின சம்பளம் அளவு இருக்கும். ஆனால் நாம் இறந்த பிறகு நின்று விடும்.

மனைவி நீண்ட ஆயுளுடன் இருப்பவரென்றால் முதல் option தேர்ந்தெடுப்பது சரியல்ல. ஆனால் நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு செலவிற்குத் தேவைப் படும் போது தேர்ந்தெடுப்பது தவறல்ல.

நம் வயது spouse வயதை விட அதிகமிருப்பதாலும், நாம் அவர்களை விட சீக்கிரம் retire ஆக வாய்ப்புள்ளதால் இரண்டாவது அல்லது மூன்றாவது option சரிவரலாம்.

நமது contribution மட்டுமே, retire ஆகி குறைந்தது 5 வருடத்திற்கு நம் சேமிப்பு பணத்திலிருந்து நாமே பெறுவதாக இருக்கும். அதற்கும் மேல் உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பென்ஷன் fund பிற பகுதியிலிருந்து பெற்றுத் தருமாறு இருக்கும்.

Retire ஆவதற்கு முன் உங்கள் குடும்பத்தினரின் உடல்நிலையைப் பொறுத்து முடிவிடுங்கள்.

இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்னு கேட்கறீங்களா. ஏதோ தோணிச்சுங்க.