Sunday, December 6, 2020

குழந்தைகளே ஆசிரியர்கள்

 1987 ஜூலை 7ந்தேதி கடைசியாக தமிழகத்தை விட்டு கிளம்பியது. சேலத்திலிருந்து கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ்ல அப்பா அம்மாவோட ஏறி 10ந்தேதி கௌஹாத்தி வந்து இறங்கினோம். மூனு பேருக்கும் ஒரு வார்த்தை इिन्दि தெரியாது. அண்ணன் ஸ்டேஷன் வந்து கூட்டிப் போனதால தப்பிச்சோம்.

பக்கத்து வீடு சர்தார்ஜி குடும்பம். இரண்டு குட்டிப் பெண் குழந்தைகள், இன்னும் ஸ்கூலுக்கு கூட போகலை அது. வீட்டுல கணவன்-மனைவி பஞ்சாபியில பேசிகிட்டாலும், குழந்தைங்க கிட்ட ஹிந்தி தான் பேசுவாங்க. ஸ்கூல் போக ஆரம்பிச்சா அஸ்ஸாமி வேற கத்துக்கனும். 

அந்த இரண்டு குழந்தைகளும் தான் எனக்கு हिन्दि டீச்சர்ஸ். முதல்ல நான் கத்துகிட்ட வரிகள் ये (यह्) क्या है தான். இதைச் சொல்லிச்சொல்லியே அந்த குழந்தைங்களைத் துளைச்சு எடுத்து ஒவ்வொரு வார்த்தையாக் கத்துகிட்டேன். ஏதோ தப்பா சொல்லிட்டா வாசல்ல எச்சையைத் துப்பிட்டு ஓடிரும். तू मत करன்னு அதுங்க கிட்ட சொல்ல வராது! துப்பாதே துப்பாதேன்னு தமிழிலேயே சொல்லி சொல்லியே அதுங்க முதல் வார்த்தை து வை வைச்சு புரிஞ்சுக்கும்.

இப்ப அந்த குழந்தைங்க பெரிய யுவதி ஆகியிருக்கும். தொடர்பு இல்லாமப் போயிருச்சு! அசாமில இருந்த பிரச்சனைகளால சொந்த ஊர் அம்ரித்ஸர் போயிடுவேன்னாங்க. தெரியலை. தேடனும்.

அக்குழந்தைகள் நினைவில்

வாழ்வினிது!


ओलै सिरिय !

No comments: