Thursday, December 17, 2020

தனிமையில்லை இவ்வுலகில்

அண்ணனுக்கு 60 வயது போன மாதம் பூர்த்தியடைந்தது. பிறந்த தினம் அன்று கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்ன்னு நினைத்தால் வரிசையாக உறவினர்கள் தவறியதில் சாத்தியமில்லாமல் போயிற்று.

அடுத்த மாதம் வருகிற நட்சத்திரத்தில் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நேற்று வாரத்தின் நடுநாளான புதன்கிழமையில் அண்ணன் நட்சத்திரத்தில் வைத்து, வர்ஜீனியாவில் எல்லாம் இனிதாய் நடந்து முடிந்தது.

அண்ணன் அண்ணி சாஸ்திரி தவிர நான் மட்டுமே கலந்து கொண்டது. இந்த stormல் எப்படி தனியாக வர்ஜீனியா போய் வருவது என்று கலக்கமாக, இருந்தாலும் அடாது கொட்டிய பெரும் மழையில் சென்று வந்தாகி விட்டது. போகும் போது பரவாயில்லை. வரும்போது செம அடைமழை.

இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் உறவினர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்ல, எப்படி லைவ் ஒளிபரப்பு செய்வது என்று தடுமாறி கடைசியில் ஒரு ஃபேஸ்புக் லைவ் மற்றும் ஒரு கூகுள் மீட் ஒன்றும் கடைசியில் அங்கு அநுமதி கேட்டுப் போட்டு அனைவரும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.

அதுவரை என்னடா இது எந்த உறவினர் நண்பர்கள் இல்லாமல் தனிமரமா நிற்கிறோமே என்ற கவலைகள் எல்லாம் இந்த லைவ் பிராட்காஸ்டில் பார்த்த உறவினர்கள் அனைவரும் போக்கி விட்டனர். தொடர்ந்த அவர்களது chattering ஐ கேட்க கேட்க எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங். அவர்களும் அதே சென்டிமன்ட்டை அங்கிருந்தே தெரிவிக்க மிக நிறைவாக இருந்தது.

அவர்களோட chattering எல்லாம் கேட்கக்கேட்க ஏதோ மண்டபத்தில் பக்கத்துல உட்கார்ந்து கேட்கிற ஃபீலிங். எல்லோரும் கூடவே இருக்கிற ஃபீலிங்.

எல்லோருக்கும் என்னுடைய நன்றியை இவ்வாறு தெரிவித்துக் கொண்டேன்: When you all were there virtually, and hearing every single chatters, I never felt was alone there. Thanks all, you made our day.

வாழ்வினிது!
ओलै सिरिय !

No comments: