Tuesday, March 23, 2021

மறதியின் சுமைகளில்

 மறதி புகுந்து விளையாடுது!

முந்தாநாள் நல்லா ஒரு 2 1/2 மைல் வாக்கிங் போயிட்டு வந்தேன். வந்து உடனே அப்படியே பக்கத்திலுள்ள இந்தியன் ஸ்டோர்ஸ் போய் நொறுக்குத் தீனி வாங்கலாம்ன்னு போய் எல்லாம் கூடையில எடுத்து போட்டுகிட்டு counterல போய் பாக்கெட்ல கையை விட்டா காசில்லை! பக்குன்னுச்சு! 

கடைக்காரம்மா கிட்ட சொல்லிட்டு இதோ போய் பணம் எடுத்துகிட்டு வந்துர்றேன்னு சொல்லி கிளம்பி வீட்டுக்கு வந்தேன். பாதி வழியில அம்மிணி கிட்ட சொன்னா, நீ எதுக்குத் திரும்பி வர்ற, கடையிலேர்ந்தே இதைச் சொல்லியிருந்தா, நான் போன்ல கிரெடிட் கார்ட் நம்பர் சொல்லியிருப்பேனே! என்ன ஆச்சு ஏன் வர்றீங்ககாப்புல! அதானே! தோனலை!

வீட்டுக்குப் போய் எடுத்து வந்து கடைக்காரம்மாட்ட கார்ட் கொடுத்தேன்.

கடைக்காரம்மாவும் அவங்க புருஷனும் நொந்துட்டாங்க! 

நீ பணம் எடுத்து வர்றேன்னு காருக்குத் தான் போறேன்னு நினைச்சோம். வீடு வரைக்கும் போயிருக்கயே! நீ பணம் கொடுக்காட்டித் தான் என்ன, எத்தனை வருஷமா வர்ற, அடுத்த தடவை வந்து கொடுத்திருக்கலாமே, 45$ க்காக வீடு வரைக்கும் போனுமா, எங்களை இப்படி பண்ணிட்டியேங்கிறாங்க!

அட ஆமாம்ல அதைப் பண்ணியிருக்கலாமே! தோனலை!

இல்லைங்க இதுவரை அப்படி ஆனதில்லை. முதல் தடவை. வாலட் இல்லாம வண்டியேறியதில்லை! எப்படி மறந்தேன்னு தெரியலைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுபுட்டு வந்தேன்!

Counterல வந்து பணம் இல்லாம நிக்கறோமேன்னு செம கில்டி ஃபீலிங். சில தடவை மத்தவங்களை இந்த situationல பார்த்து அவங்களுக்கும் சேர்த்து 4-5 தடவை கட்டியிருக்கேன். 

நம்ம ஊர்க்காரங்க ஒருத்தங்களுக்கு அது மாதிரி ஒரு தடவை 5$ கட்டினேன். அதை அவங்க ஒரு வருடம் கழிச்சு தேடி வந்து கொடுத்தாங்க! ஏங்க 5$ ஒன்னுமேயில்லாதது, அதுக்குப் போய் இவ்வளவு மாதம் கழிச்சு தேடி வந்து கொடுக்கனுமான்னு கேட்டதற்கு, அவங்க, ஆமாம் அது ஒன்னுமில்லாத அமௌண்ட், ஆனால் தேவையான நேரத்துல கொடுத்த பாரு, அதோட மதிப்பு ஜாஸ்தின்னு சொல்லி என்னோட பத்து வயசு சின்னவங்க பத்து வருஷம் முன்ன சொன்னது மனசுல இப்ப நிக்குது! 

அதே நிகழ்வு எனக்கு!

சரி இந்தக் கதை இப்ப எதுக்கா? இருக்கு!

அன்னிக்கு அந்த கடையில மோர் மிளகாய் வாங்கி வந்தேன். அம்மிணி நான் திருட்டத்தனமா அப்பளம்/பப்படம் பொரிச்சுத் திங்கறதைக் கண்டுபுடிச்சுட்டாப்புல. அதனால ஒரு oil fryer (french fries பொரிக்கிற மாதிரி ஒரு சின்ன குக்கர் வாங்கிக் கொடுத்துட்டாப்புல. இனி எண்ணெய் சமாசாரம் எங்கிட்ட வராதே நீயே இதுல பொரிச்சுக்கன்னுட்டாப்புல!

இனி திருட்டுத்தனம் பண்ண வேண்டிய அவசியமில்லை! அம்மிணி முன்னவே நல்லா மோர் மிளகாய் பொரிச்சு டேபுள் மேல வச்சேன். தயிர்சாதத்துல கலந்து வெட்டலாம்ன்னு.

இரண்டு நாளா தயிர்சாதம் சாப்பிட்டு முடிச்சு எழும் போது மோர் மிளகாய் கண்ணுல படுது. சாப்பிட முடியலை. இப்ப நமுத்துப் போயிருக்கும்.

மறதியின் சுமைகளில்
வாழ்வினிது
ओलै सिरिय !

Monday, March 22, 2021

புலம்ப முடியா ஒரு புலம்பல்

 போன மாசம் கொஞ்சம் தடுமாறிப் போற நிலமையாயிடுச்சு. வெளிய சொல்லி புலம்ப முடியல.

பத்து வருசம் முன்ன வாங்கின பாஸ்போர்ட் இன்னும் இரண்டு மாசத்துல எனக்கும் அம்மிணிக்கும் காலாவதியாகப் போவுது. சரி புதுசு வாங்கிடலாம்ன்னு ஆன்லைன்ல பார்த்து, சுலபமாக வாங்கிடலாம்ன்னு தயாரானேன். நம்மது straight forward case என்பதால ஒரு ஃபார்ம் fill பண்ணி, பழைய பாஸ்போர்ட்டோடு பணத்தை அனுப்பினால் போதும், வந்துரும். அவ்வளவு தான். 

அம்மிணி யோசிச்சாப்புல. இந்த கோவிட் ப்ரீயட்ல பாஸ்போர்ட் மாட்டிக்கிச்சுன்னா அவங்கம்மாக்கு ஏதாவது ஒன்னு ஆனா எப்படி நாம ஊர் போவதுன்னு ஒரு வாரம் இழுத்தடிச்சாப்புல.

எனக்கு பொறுமையில்லை. பாஸ்போர்ட் ஆறுமாசத்துக்குள்ள எக்ஸ்பயர் ஆவுதுன்னா சில நாடுகளில் உள்ள விடமாட்டாங்க.

சரி நம்முது முதல்ல பண்ணிருவோம், வந்த பிறகு அம்மிணிக்கு பண்ணலாம்ன்னு நினைச்சேன். அப்ப யாராவது ஒருத்தர் போய் வர ஏதுவாக இருக்கும்ன்னு நினைச்சேன்.

எனக்கு இந்த ஊர் போஸ்ட் ஆபீஸ் மற்றும் பாஸ்போர்ட் சர்வீஸ் மேல எல்லாம் ஒரு அபார நம்பிக்கை உண்டு. கடமை தவறாம குறித்த நேரத்துல செய்வாங்கன்னு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. இது வரை நடந்துள்ளது.

எல்லாம் ரெடி பண்ணி வெறும் ஆர்டினரி போஸ்ட்ல அனுப்ப தயாராகும் போது அம்மிணி தன்னோடதும் பண்ணுன்னு கொடுத்தாப்புல.

இங்ஙன தான் பெரிய தப்பு பண்ணினேன். அந்த சர்வீஸஸ் மேல உள்ள அபார நம்பிக்கையில் பழைய பாஸ்போர்ட் போட்டோகாப்பி எடுக்காம, அதையும் சேர்த்து ஒரு போஸ்ட்ல அனுப்பிட்டேன். எவ்வளவு பெரிய முட்டாள் தனம்ன்னு புரிய ஒரு வாரம் ஆச்சு.

வெள்ளிக்கிழமை அனுப்பியது போக வேண்டிய ஊருக்கு திங்கள் காலையில போய் சேர்ந்துருச்சு. சரி இன்னிக்கே பாஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்துருவாங்கன்னு நினைச்சேன். அதே ஊர்ல அடுத்த zip code. செவ்வாய், புதன் அன்று ஸ்டேடஸ் பார்த்தா இவனுங்க போய் கொடுக்கலை. வேற facility க்கு போயிருக்கு, ஆனால் கரெக்டா டெலிவரி ஆயிரும்ன்னு சொல்லுது. சரி செக்யூரிட்டி ஸ்கேனுக்குப் போயிருக்குன்னு நினைச்சேன்.

அந்த வாரம் பூரா இவனுங்க டெலிவரி பண்ணலை. ஒரே ஊர்ல அடுத்த ஸிப்கோடு. என்னடா பிரச்சனைன்னு போஸ்ட் ஆபீஸ் போன் பண்ணா, அவங்க நீ கேஸ் ஓபன் பண்ணிக்கங்குறாங்க! கேஸ் ஓபன் பண்ணினேன். ஆனால் பதிலில்லை.

ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. மூன்று வாரம் எந்த பதிலும் கிடையாது. போன் பண்ணினால் அதே ஸ்டேட்டஸ் சொல்றாங்க. பாஸ்போர்ட் ஆபீஸ் போன் பண்ணினா அவங்க கடுப்பாகுறாங்க, வரலைன்னு சொல்ல.

ஆடிப்போச்சு நமக்கு. பத்து வருசமா டிராவல் பண்ண ரிக்கார்ட் எல்லாம் அந்த பழைய பாஸ்போர்ட்ல உள்ள முத்திரையை வச்சு தான் கண்டுபிடிக்கனும். போட்டோகாப்பி லேடஸ்ட் இல்லை, 3-4 வருசம் முன்ன எடுத்த போட்டோகாப்பி தான் இருக்கு. ஆடிப்போச்சு. ட்ரம்ப் சொல்றது நிஜமான்னு சந்தேகம் வந்துருச்சு. போஸ்ட் ஆபீஸ் ஆளு தூக்கி கடாசிட்டானான்னு சந்தேகம். 

இனி எப்படி டூப்ளிகேட் வாங்கறது, அதை வச்சு எப்படி இந்திய விசா வாங்கறது எப்படி ஊர் போவறதுன்னு ஒரு மாசமா ஆடிப்போச்சு.

3 வாரம் பிறகு போஸ்டாபீஸ் கேஸ் escalate பண்ணினேன். திடீர்ன்னு 4 நாள் கழிச்சு நாளை டெலிவரி பண்ணுவோம்ன்னு மெசேஜ் வருது. கடைசியில அன்னிக்கு சாயந்தரமே கொண்டு போய் பாஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்திருக்காங்க! எஸ்கலேட் பண்ணதுல ஏதோ நடந்திருக்கு, என்னாச்சு தெரியலை, போய் கொடுத்துட்டாங்க.

அடுத்த நாள் பாஸ்போர்ட் ஆபீஸ் போன் பண்ணினேன். இந்த தடவை ஒரு நல்ல பெண்மணி கையில போன் போச்சு. அவங்க இன்னிக்குத் தானே எங்க கிட்ட வந்திருக்கு, பிராஸஸ் பண்ண 4 வாரம் ஆவும், நீ இப்ப டிராவல் பண்ணப் போறயான்னு கேட்டாங்க! 

இல்லைங்கன்னு சொல்லிட்டு இதுவரை நடந்த கதையை சொல்லிட்டு, ஒன்னே ஒன்னு சொல்லுங்க, உங்க கையில என் பாஸ்போர்ட் எந்த டேமேஜும் இல்லாம வந்து சேர்ந்ததா சொல்லுங்க, அது போதும்ன்னேன்.

எல்லாம் சரியா இருக்கு, ஏற்கனவே உனக்கு 4 வாரம் டிலேவா, சரி, 4 வாரத்துக்குள்ள என்ன பண்ணமுடியுமோ பண்றோம்ன்னாங்க! 

அவ்வளவு தான். பேசி பத்து நாள் கூட ஆவலை. இன்னிக்கு கையில எங்க இரண்டு பேரோட பாஸ்போர்ட் வந்துருச்சு! இனி ஓசிஐ விசா வேலை ஆரம்பிக்கனும்.

பிரச்சனைகள் சிலருக்கு மட்டும் விதவிதமாக வந்து நிக்குது. Straight forward case, போஸ்ட் ஆபீஸ் அல்லது பாஸ்போர்ட் ஏஜன்சி போய் எதுவும் வெரிஃபை பண்ணக்கூட இல்லாதது நம்ம கேஸ், போஸ்ட்ல அனுப்பினா போதும் வந்துரும்கிற கேஸ். இருப்பினும் 5 வாரம் வெளிய சொல்லிக்க முடியாம முடக்கிப் போட்டுருச்சு!

விடிவு பிறந்த இன்று
வாழ்வினிது

ओलै सिरिय !

Sunday, March 14, 2021

வாழ்வினிதாய் அமைய நம்மால் ஒன்று

அம்மா அடிக்கடி சொல்வாங்கவாழ்க்கையிலெந்த பெண்ணோட சாபத்துக்கும் வயித்தெரிச்சலுக்கும் உள்ளாகாதீங்கடாஒரு பெண் இல்லாம ஒரு குடும்பம் முன்னேறவே முடியாதுவீட்டுல பசங்களா பெத்துவச்சுட்டேன்சமையல் உள் கூட உங்களை வர விடாம வளர்த்துட்டேன்பெண்கள் கஷ்டம் தெரியாமவளர்ந்துட்டீங்களேடான்னு அடிக்கடி சொல்வாங்க!


ஐந்து வருடம் முன் அம்மா இங்க வந்தப்பஎன்னடா இது ஆபீஸ்லையும் உழைச்சுட்டு வீட்டுல வந்து எல்லாவேலையையும் செய்துட்டு இவ்வளவு லேட்டா போய் வீணை வாசிக்கப் போறாஉட்கார்ந்து தின்னுகிட்டுஇருக்கிறபோய்ப்பாத்திரம் தேய்ச்சு லோடு பண்றான்னு விரட்டினாங்கஅப்ப துவங்கிய பாத்திரம் டிஷ் லோடு பண்ண ஆரம்பிச்சதுஇன்று வரை தொடருதுபோய் சமைக்க உதவுடான்னு விரட்டியிருந்தாங்கன்னாஅதுவும்செய்தாலும் செய்திருப்பேன்இப்ப சொல்ல அம்மாயில்லஆனால் மற்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கனும்


பையனுக்கு நான் டயப்பர் மாத்த ஆரம்பிச்சு அவனுக்கு பன்னிரண்டு வயசு வரை குண்டி கழுவி விட்டாச்சுஇது வரைஅவன் துணி துவைப்பது எல்லாம் என் தலையில் தான்இப்பவும் எதுனா எங்கிட்டத்தான் வருவான்மற்றதைஅம்மாவை ஏய்த்து செய்து கொள்வான்நான் எனது அம்மாவைப் பார்த்துக்கொள்ள சென்ற நேரத்தில் அம்மிணி அவனுக்கு துணி லோடு பண்றதுலேர்ந்து சமையல் வரை பலவற்றைக் கற்றுக் கொடுத்துவிட்டார்.


அஸ்ஸாமிலிருந்தப்ப நண்பன் டாக்டர் சைதுல் இஸ்லாம் அடிக்கடி சொல்வான்பெண்களோடு கூட வளர்ந்தாதான் உனக்கு அந்தக்கஷ்டம் தெரியும்இப்ப உனக்குப் புரியாதும்பான்தன்னோட இரண்டு தங்கைளுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடியலைன்னு, தனக்குக் கிடைச்ச ஒரு மிக நல்ல பெண்ணை நன்கு படித்த ஒரு நல்ல அழகிய பணக்காரப்பெண்ணை இழந்தான்


ஏன் இப்படி பண்றஅந்த பெண்ணைக் கல்யாணம் பண்ணினாஅவங்க மூலமா நல்ல வாய்ப்பு கிடைக்கலாமில்லையான்னாஒத்துக்க மாட்டான்உனக்கு முஸ்லீம் சமுதாயம் பத்தித் தெரியாதுஇன்னொருத்தரோட செல்வத்தையும் உழைப்பையும் வச்சு என் தங்கைங்க கல்யாணத்தை செய்யறதா அவங்க நினைச்சுட்டாஅதை செய்ய மாட்டேன்னு வியாக்யானம் பண்ணுவான்என் குடும்பச்சுமையை என் மனைவி மேல் திணிக்க மாட்டேம்பான் அந்த அஸ்ஸாமிய நண்பன்.


அவன் தங்கை என் மாணவிஇப்ப அஸ்ஸாம் விட்டு வந்து முப்பது வருஷமாச்சுஇரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததா, என்ன ஆச்சுன்னு தெரியலைசைதுல் இப்ப ரிடையர் ஆகுற நேரம்சைதுல் சொல்ற பெண்களைப்பற்றிய அவன் புரிதல் தான் மனதிலாடுதுதன்னோட மாணவிகளைத் தன் அன்புச் சகோதரியாகப் பார்ப்பவன் உதவுபவன்பிற மாநிலங்களிலிருந்து அங்கு வந்து தங்கிப்படிக்கும் மாணவிகளின் ஆசிரிய நண்பன், guide.


சரி இந்தக் கதையெல்லாம் இன்னிக்கு எதுக்குன்னு கேட்கறீங்களா!


எப்போதும் இரவு குடிக்கிற மிளகு மஞ்சப்பொடி கலந்த பால் வேணுமான்னு கேட்டப்ப ஒரு நாளாவது தொல்லைபண்ணாம இருப்போன்னு நினைச்சு வேண்டாம்ன்னு சொல்லிட்டு சுடு தண்ணியில ஓமம் மிளகு வெந்தயப்பொடிபோட்டு சுயமாக செய்து சூடாகக் குடிப்பதுஒரு பெண்ணைத் தொல்லை பண்ணாமல் சுயமாக உண்ணமுற்படுவதில் கிடைக்கும் சுகமே சுகம்!


வூட்டுல் அம்மிணி சந்தோஷமாக இருந்தாத்தான்


நம் வாழ்வினிது

ओलै सिरिय !