Tuesday, April 2, 2019

நிழல் தேடும் உறவுகள்

திறந்த வெளியில் மூடிய பாதைகள்
மறுதுவாரம் நோக்கி ஓடும்
எறும்புகளானோம்!

வானவெளியில் நீண்டதொரு துவாரம்
உலகில் எங்கும் சங்கமிக்கும்
பறவைகளானோம்!

விண்ணில் பறக்க முயலும் போது
பெய்யும் மழையில் குடை தேடும்
விட்டில் பூச்சிகளானோம்!

பறந்த வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு
அண்டசராசரமும் குடை விரிக்க
நமக்கோர் மரம் அருகில் தோன்றும்!

மரத்தடி மனிதர்களுக்கு
நிழலில் இளைப்பாற
காலம் தேடி காத்திருப்போம்!