Friday, November 28, 2014

கரிய இரவில்

கரிய இரவில் தனியாய்
கசிந்துருகி நோக்கில்
கரை தொடும் கால்களில்
கசிந்துருகும் கண்ணீர்த்துளிகள்!

கரிய நிழல்களில் படரும் கனவில்
உறவுகளின் மறைந்திருக்கும் பகைமை !
ஒருவரின் கூற்றில் மற்றவரின் திரித்தல்
இருவரின் மீது நட்பாடும் நெஞ்சில் ஓர் களக்கம் !

கரியவிடாமல் களமிறங்கி
கனிவாய் நகர்திடும் காய்கள்
கண்டோர் காணிடும் களப்பரப்பில்
களமிடும் விதைக்குவியல்!

கரிய இரவில்
கரியும் தகனமேடை
கரையும் மனதுடன்
கரையில் ஒருவன்!

Tuesday, November 25, 2014

விண்மீனை தொடும் முன்

உயரப்பறக்கும் விண்மீனை 
கயிற்றில் கட்டி இழுக்கும் மணவாழ்வு!
ஒன்றாய்ப் பறந்திடும் பறவைகளுக்கு 
கடல் காடு மணல் அனைத்தும் சுகமே !

விண்ணில் மின்னும் ஒளிநட்சத்திரங்கள் 
மணவாழ்வின் விரிசலில் ஒளியிழக்கின்றன!
பரந்த வெளிப்பரப்பில் பறவைகளின் கூட்டுக்களவுகள் 
திணை சாய்ந்து விழும் கழனியின் சுக ஆரவாரங்கள்!

எவ்வெளிப் பறந்தாலும் கூடு வந்து சேரும் பொழுதில் 
சுகமாய் சோர்வு நீங்க நல் இல்லறமே கூடு!
ஆத்மார்த்த நட்பின் அணைப்பில் 
பறந்திடும் தூரம் 
விண்ணையும் கையால் பிடிக்க உதவும்!

பிடிப்பற்ற உறவில் கைபிடித்து பறந்தாலும் 
காலில் கட்டிய கயிறு வழுக்கி இழுக்கும்!
பிரிந்த கூட்டிற்கு பாதுகாப்பு அளித்தாலும் 
துணையற்ற கூட்டில் பாதுகாப்பு யேது !

எந்தோ தூரம் பறந்திடுவோம்!
கூடு சிறக்க செய்திடுவோம்
விண்மீனை தொடும் முன் !

Sunday, November 23, 2014

விடைபெறும் தருணம்

எம்பதுகள் விடைபெறும் நேரமிது!
தீர்காயுஷ்மான் பவ என்று
வாழ்த்திய நெஞ்சங்கள்
ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன!
எஞ்சி நிற்பது நினைவலைகள் மட்டுமே!


செல்வதற்கு முன்
என்ன ஓடியிருக்குமோ
அவர்களது நினைவில்!


காடு வா வாங்கிறது
வீடு போ போவென்பதை
நேரில் கேட்கும் துரதிர்ஷ்ட வயதிலும்
ஒரு கம்பீரத்தை இழக்காமல்
விடைபெறுகின்ற பெருமை
கிடைக்கப் பெறுவது அரிதாய்ப் 
போகும் போது
தான் வாழ்ந்த ஒரு
போற்றுதல்குரிய வாழ்வை
அவர்களது நினைவலைகள்
சுமைதூக்கிப் பார்த்திருக்கும்!


பலரது தகன மேடைகளைப்
பார்த்திருந்த போதும்
மரண பயம் கவ்வாமல்
விடைபெறக் கூடிய
வலிமையற்று தள்ளாமை
வீழ்த்தும் அந்த கொடிய மணித்துளிகள்
சிறுகச் சிறுக மறைந்து
நித்திரை கவ்வும் நேரத்தில்
கடைசியாய் அழைத்து
விடைபெறும் பாக்கியமற்று
வீழும் போது
கைதூக்கி நிறுத்தியவர்களிடம்
கண்மூடியே விடைபெற மட்டும்
முடிந்திருக்கும்.


தள்ளாமையின்பால் தள்ளி நின்ற
பிள்ளைகள் சுமந்து சென்று
தகன மேடையில் விடை கொடுத்துச்
செல்லும் சமயத்தில் விழும்
அவர்களது கண்ணீர்த்துளிகளை
ஏற்பதா ஏற்க கூடாதாவென்று
நம்மிடம் சொல்லமுடியா
தூரத்தில் விடைபெற்று நிற்கிறோம்.


சாம்பலில் பொறுக்கி எடுத்த
சுள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்
கரைக்கும் நேரத்தில்
அனைவரது வலிகளும்
ஒன்றாய் கரைகின்றனவா
தெரிவதில்லை.


தள்ளாமை தள்ளிவிடா விட்டால்
ஒவ்வொரு மனிதனின் அந்திம நேர
விடைபெறுதல் என்றும் எளிதாய்
நிகழக்கூடிய நிகழ்வாய் மாறி
மண்ணில் கரைய வேண்டிய
நேரத்தில் மனிதத் தன்மையோடு
விடைபெறும் தருணமாயிருந்திருக்கும்!


எதை மனதில் நினைத்துக் கொண்டு
விடை பெற்றுச் செல்கிறார்களோ
தெரியவில்லை !
நம்மனதில் சுமக்கும் துக்கங்களை
தெரிவிக்க முடியா தூரத்திற்கு
விடைபெற்றுச் செல்கிறார்கள்.


தனித்து நிற்பது அவர்கள்
விட்டுச் சென்ற
நினைவலைகள் மட்டுமே!

Saturday, November 15, 2014

பயணம்

கடைசி நேரத்தில்
சுகமாய் பிரயணிக்க
அளித்த நன்கொடை என
உளமறியா பேதை மனம்
ஊரில் இறங்கியவுடன்
நடைபெயன்று
ஆட்டோ மிச்சம் பிடித்து
மனதாறிக்குள்ளும்
பேதை மனம்.

படுத்து உறங்கும் பயணத்திற்கு
செலவால் உறக்கமின்றி
பயணிக்க வைக்கும் கட்டணம்.

தேவையற்ற கவலைகளை
உருவாக்கும் பயணத்தை
சுலபமாய் கடைசியில்
உருவாக்கி கொடுத்தவைக்கு
நன்றி நவிலும் போது
உறக்கம் அமைதியாய் 
பயணிக்கும்.

பயணம் இனிதாய் அமையட்டும்.