Tuesday, December 16, 2014

வெட்கித் தலைகுனியும் மானுடம்

 தலைகுனியும் மானுடம்
பிஞ்சுடலைப் பறித்து 
பசியாற நினைக்கும் வெறியர் கூட்டம் 
வெல்வது மதமும் அல்ல மானிடமும் அல்ல 
மதவெறியைத் தூண்டுபவனுக்கு 
மாலையிடும்  கயமைத்தனம்!

பிஞ்சுடலைப் பறிப்பதால் 
யாரை வெல்ல நினைக்கிறாய் 
இவ்வுலகில் எவரும் நிலையான 
நண்பனுமல்ல எதிரியுமல்ல! 
பறித்தவை மண்ணுள் மறையும் முன் 
உன் மேல் எழும் வெறுப்பு கனலாய் மாறிடும் !

எரியும் கனலில் வெந்து போவப் போவது 
உன் மதவெறிக் கூட்டம்!நீ பிஞ்சைப் பறிக்கவில்லை 
மனித குல கழிவிரக்கத்தைப் பறிக்கிறாய்!
மரித்துப் போகிறது மானிடம்
வெட்கப்படு உன் செயலைக் கண்டு !

மதவெறியால் மானிடம் அழிகிறது 
மனிதகுலம் அழுகிறது
இவ்வுலகில் வெல்லப் போவது 
நீ வெல்ல நினைக்கும் மதமன்று 
அன்பும் பாசமும் கொண்ட மானிடம் மட்டுமே!

Thursday, December 4, 2014

மேனேஜர்

தினமொரு கடுப்பு மேனேஜர் மேல்
செயலை கண்காணிப்பதால்
சொல்பவை பிடிக்காததால்!

மேனேஜரின் நண்பனானால் மேல் செல்கிறார்கள்!
பகை கொண்டாலும் மேலிடம் செல்கிறார்கள்!
இருப்பினும் தினமும் நிந்திப்பவனிடம்
மேற்கொண்டு செல்ல முடியாது
சொல்லவும் முடியாது!

ஆபீசில் பகை கொள்பவன் வீட்டிலும் நிம்மதி இழக்கிறான்.
பகை தாண்டி அன்பாய் மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்.
வருமானமின்றி வாழ்வு கொள்ளாது.
மானமின்றி வாழ்தலும் நிலை கொள்ளாது!

பகை தாண்டி செல்ல வழியுண்டோ
மேனேஜர் எனும் தடைக்கல்லை தாண்ட வழியுண்டோ!
மனதின்றி மார்க்கமில்லை.
உன் பணியே மார்க்கமென்று பணி புரிந்தால்
தடைக்கல் உன் முன் நிற்க வழியில்லை
தடைக்கல்லும் தவிடாகும்!

தினமொரு நிந்தனை தேவையின்றி
நின்பணி கடிந்து செயல்பட்டு
செய்யும் பணி சிறக்கச் செய்திட்டால்
அகம்பாவம் வென்றதோர் காரியமது
பெற்ற ஊழியத்திற்கு சிறுமையின்றி ஆகிடும்
பகைவனும் நண்பனாவான்
வாழ்வும் நிலைகொள்ளும்!