Sunday, September 25, 2022

மூஞ்சியில் வாசனை வீசுது

போன வெள்ளிக்கிழமை அம்மிணி கிட்ட ‘ நான் இரண்டு வாரம் இந்த மாதக்கடைசி வரை வெளிய சாப்பிட மாட்டேன், இன்னிக்கு எனக்குப்பிடிச்ச பஞ்சாபி ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிடப் போறேன்’ன்னு சொல்லிபுட்டு அங்க போய் அவங்க மெனுவை நமக்கு ஏற்ற மாதிரி மாற்றி ஒரு வெட்டு வெட்டிவிட்டு வந்தேன். அம்மிணி கூப்பிட்டும் வரலை.

கடந்த ஒரு வாரமாக காபி தண்ணி கூட வீட்டுலத் தான்.

இன்னிக்கு அம்மிணி அவங்க ஆபீஸ் ஆட்களோடு அதே ரெஸ்டாரண்ட் போகப் போறாங்களாம்.

என்னைப் பழி வாங்கனும்ன்னு நினைச்சாப்புலயா இல்லையான்னு தெரியலை இதுவரை மூனு நாளு தடவை கேட்டு உசுப்பேத்தறாப்புல: நீ அந்த கடையில எந்த காம்போ ப்ளேட் வாங்கின, காம்போ நம்பர் என்ன, என்னென்ன நீ அதுல மாத்தினேன்னு மாறி மாறி கேள்வியா அடுக்கறாப்புலயே.

இரண்டு வாரம் வாயைக் கட்டி உட்காரனும்ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கேன். திருப்பித் திருப்பி என் ஃபேவரிட் கடை மெனுவைக் கேட்டு ஆட்டம் காமிக்கறாப்புல.

இருபது வருடமாக அந்தக் கடையில் சாப்பிடறேன். அதே சர்தார் குக் அதே முதலாளி. நம்மைப் பார்த்தா நமக்கு வேணுங்கிற மாதிரி மாத்தித் தருவாங்க!

இரண்டு வாரம் முடியட்டும். இன்னிக்கு சத்திய சோதனையாக ஆட்டம் காண்பிக்கறாக அம்மிணி!

நாவடக்கத்தில் வாழ்வினிது
ओलै सिरिय।
¡Espera tu regalo!

No comments: