Sunday, September 25, 2022

தேர்தல் பணிகள்

இந்த வாரம் எங்க ஊர்ல இரண்டாவது பிரைமரி தேர்தல் நடந்தது. இரண்டு மாதமாகவே தேர்தல் ஆணையத்துலேர்ந்து பல தடவை கேட்டுட்டாங்க முழு வார்டுக்கும் தலைமைப் பதவி எடுத்துக்க, நீ வேற இடத்துல தலைமைக்கு ஆளில்லாதப்ப உன்னை அனுப்ப வசதியாக இருக்கும்ன்னு பல தடவை கேட்டாங்க. பல காரணங்களால் தவிர்த்து விட்டேன்.

இங்க கூட வேலை செய்யறவங்க ரெகமண்ட் பண்ணதால நம்ம பேர் மேலே வருது. ஆனால் நிறைய சிக்கல்கள். சிலருக்கு எங்கிருந்தோ வந்தவன் நாம நம்ம தேர்தலில் சொல்ற வேலையைச் செய்யனுமான்னு எகதாளம் வேற. நேரடியாகவே காண்பிக்கிறார்கள், நாம் கேட்கும் போதே புறம் பேசுகிறார்கள்.

யாராவது ஒரு தேர்தல் பணியாளர் கொஞ்சம் ப்ரேக் எடுக்கப் போகும் நேரத்தில் நாம் அங்கு அந்த இடத்தில் உதவிக்குப் போனால் கூட வேலை செய்யும் சிலரின் நக்கல்களைப் பார்க்க முடியும். இப்போதெல்லாம் தலைமைக்கு அடுத்த கட்ட தலைமையில் இருப்பதால் பொது மக்களோ கண்காணிப்பாளர்களோ குறை கூறா வண்ணம் ஓடியாடி எல்லா வேலையும் செய்ய வேண்டிய கடமையுண்டு. அதனால் தான் எனக்கு அவர்களை விட இதில் வருவாய் கொஞ்சம் அதிகம். 

நிறையவே வேலை செய்வேன். எல்லாம் அத்துபடி, புதிதாக வருபவர்களுக்குச் சொல்லித் தருவேன். ஓட்டு போட வருபவர்களும் இதை வியந்து பார்ப்பது உண்டு.

இது அவர்களுக்கு எக்ஸ்ட்ரா இன்கம், எனக்கல்ல. எனக்கு சமுதாயக்கடமை செய்யற ஃபீலிங். உள்ளூர் மக்களோடு நன்கு கலக்கமுடியக் கூடிய வாய்ப்பு. தேர்தல் கள நிலவரம் நேரில் உணர முடியும்.

சமீப காலமாக தேர்தல் முறையை சிலர் கேள்விக்குள்ளாக்குவதால் தேர்தல் பணியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை நேரில் உணர முடிகிறது. அந்த பயத்திலும் தலைமைப் பதவியைத் தவிர்ப்பது நல்லதாகத் தோன்றுகிறது.

ஐந்து வருடம் முன் முதன் முதலாக இப்பணியாற்ற வந்த போது ஒரு சின்ன காபி ப்ரேக்கோ அல்லது பாத்ரூம் போனால் கூட, கூட வேலை செய்யும் ஆள் ஒருவர் பின்னாடியே வந்து வேவு பார்க்கிற வேலை செய்தான். இப்படியெல்லாம் பணியாற்ற வேண்டுமா, விலகிடலாம்ன்னு அப்ப நினைச்சேன்.

அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு கடந்த ஐந்து வருடமாக ஒவ்வொரு தேர்தலிலும் கடுமையாக நம் கடமையைச் செய்ததன் விளைவு தான் இப்ப அவர்களே தலைமைப் பொறுப்பு எடுத்துக்கன்னு கொடுக்கும் வரை வந்துள்ளது.

நாம் தலைமைப் பொறுப்பில் வந்தால் இவர்களுக்கு வேலை ஒதுக்கும் போது வேண்டுமென்றே ஏதாவது நடந்து விட்டால் பிரச்சனை வந்து விடும் என்கிற பயமும் இருக்கு.

வருகிற தேர்தல்களில் அமைதியாக ஒரு சிறு பங்காற்றிவிட்டு வந்தால் போதுமென்று இருக்கிறது இப்பவெல்லாம்.

சிறு அளவு பொதுப்பணியோடு நிறுத்திக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Asistencia social!

No comments: