Sunday, September 25, 2022

அம்மாவின் பவளமாலை

அம்மா கடைசியாகப் போட்டிருந்த மாலை இது. இங்க நடந்த ஒரு gem showல அம்மிணி பவளம் வாங்கிப் போய் என் அம்மாக்கு கொடுக்க, அதை அம்மா மாலையாகப் பண்ணி கடைசி வரை போட்டிருந்தாங்க.

நான் என் சகோதரர்களிடம் இதைக் கேட்டு வாங்கி தினமும் போட்டுக் கொள்கிறேன். குளியல் போது கூட எடுப்பதில்லை. பவளம் நன்கு சிவந்து ஒளிரும்.

அம்மிணிக்கு எப்போதும் இது மேல ஒரு கண்ணு, கேப்பாப்புல, நான் தரமாட்டேன்.

நேற்று வரலக்ஷமி பூஜையப்ப அம்மனுக்குப் போடனும் கொடுன்னு கேட்டப்ப, நான் சொன்னேன், எப்போதும் என் கழுத்தில் போட்டிருப்பது, நல்லா வாஷ் பண்ணிட்டு அம்மனுக்குப் போடுன்னேன்.

வெறும்ன கழுவாம பாத்திரம் தேய்க்கிற liquid சேர்த்துப் போட்டு தேய்ச்சுருக்காப்புல, பவளம் கலரேப் போச்சு. அதோட softness வேறப் போச்சு. கையில சொரசொரங்குது.

ரொம்ப அழுவாத வேற வாங்கித் தர்றேன்னு சால்ஜாப்பு வேற.

என்னத்த சொல்ல.

கிடைத்ததை வைத்திருப்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Cadena de coral y perlas!

No comments: