Sunday, September 25, 2022

அரசு அலுவலர்களை அவமதித்தல்

பதிவிலிருந்ஒது த்த வரியை எடுத்துகிட்டுப் போய் அதைத் தான் எப்போதும் எதையாவது உருட்டுவது போல உருட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளதைப் பார்த்தேன். இணையத்துல எதை வேணா வெட்டி ஒட்டிக்கலாமில்ல. பதிவோட முழு content அவர்களுக்குப் ஒரு பொருட்டல்ல. தான் உருட்டுவதற்கு ரோடு போட ஏதோ கிடைச்சாப் போதும் இவர்களுக்கு.

அரசு அலுவலங்களில் விபூதி சந்தனப் பொட்டு இயற்கையாகவே பல காலகாலமாக இருக்கு. அதை வெறும் ஒரு மதத்தோட ஒப்பிட்டு அதன் சின்னம்ன்னு அரசு அலுவலகத்தில் ஏனிருக்கனும்ன்னு நேரிடையாக கேள்வி கேட்க யாவருக்கும் உரிமையிருக்கு. ஆனால் அந்த அலுவலகத்திலிருப்பவர் அனைவரும் நாத்திகர்கள், லஞ்ச லாவண்யத்தில் திளைப்பவர்கள் என்று முத்திரை குத்துவது அனைத்து அரசு அலுவலர்களையும் கேவலப்படுத்தும் ஒரு செயலல்லவா.

லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், அந்த அலுவலகத்திலிருக்கும் அனைவரும் நாத்திகர்களென்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றமல்லவா. ஒரு அரசு அலுவலகத்தில் 500 பேர் தன்னோட அப்ளிகேஷன் கொடுத்து இருக்கிறார்களென்றால், அவர்கள் வரிசைப்படி பிராஸஸ் செய்ய விடாமல் ஒரு புரோக்கர் புடிச்சு அரசு அலுவலருக்கு சட்டத்துக்கு மீறி பணம் கொடுத்து இவர்கள் அப்ளிகேஷனை முன் கூட்டியே பிராஸாஸ் செய்ய வைப்பவர்கள் சட்டத்துக்கு முன் குற்றவாளியில்லையா, இவர்கள் செய்வது அறம் சார்ந்த செயலா? 

அரசு அலுவலகங்களை தனது சுயநலத்துக்கா தன் வேலை முன் கூட்டியே நடத்திக் கொள்வதற்காக ஒரு புரையோடிய அலுவலகமா மாற்றிய பங்கு அனைவருக்கும் உண்டு. அனைவரும் குற்றவாளிகளே, நாத்திகர்களே உங்கள் கூற்றுப்படி. அறம் படி.

ஒரு கமெண்டில் சொல்வதை எடுத்துக் கொண்டு போய், அதில் ஒரு ப்யூன் கூட அரசு அலுவலகத்தில் பொது மக்களைக் கேவலமாக நடத்துவதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் அவர் சொல்ல வருவது: மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அதே மனுவை வைத்து தலையில் அடித்தது தவறல்ல, இவரது பார்வையில் அது ஒரு செல்லத் தட்டு தானோ. தர்மபுரி எம்பி பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பொதுப்பணித்துறை அதிகாரியை மரியாதையற்ற முறையில் நடத்தியது சரி தானோ.

ப்யூன் கதைக்கு முதலில் வருவோம். நம்மூர் கோர்ட்டில் நீதிபதி வந்து தன் சீட்டில் அமர்ந்து அன்றைய வழக்குக் கட்டுகளைப் பார்க்க உட்காரும் முன் அந்த நீதிபதி அருகில் நிற்கும் அந்த நீதிபதியின் உதவியாளருக்குப் பணத்தைக் கொடுத்து, தன்னோட வழக்கு சீக்கிரம் முன் கூட்டியே வருவதற்கு, தன்னோட வழக்குக்கட்டு அந்த அடுக்கில் மேலெழுந்து வருவதற்கு அந்த உதவியாளர்களுக்கு பணம் கொடுப்பது யாரென்று பாருங்கள். நீதித்துறையையே இப்படி மாற்றி செயல்பட வைக்கும் ஊரில் மிகச் சாதாரணமான ஒரு அரசு அலுவலகத்தைக் குறிப்பிடுகறீர்கள்.

ஒரு ப்யூனுக்கு இவ்வளவு அளவுக்கு அவரை எதேச்சதிகாரமாக செயல்பட வைக்க வைத்தது யாரு. உங்கள் காரியம் நடக்க நீங்கள் கொடுக்கும் லஞ்சப் பணமில்லையா? இங்கு குற்றவாளி யாரு? அரசு அலுவலகர் மட்டுமா?

ஒரு ஜனநாயகத்தின் முக்கியமான மூன்று ஆணிவேர்களில் ஒன்று நீதித்துறை. அதை ஒழுங்கு முறையாக செயல்பட வைக்கும் போது தான் நமது ஜனநாயகம் தழைக்க முடியும்.

அடுத்து எம்பியின் செயலுக்கு வருவோம். அன்று நடந்த செயல் உண்மையில் கண்டிக்கதக்கது, முறையற்றது. பாராளுமன்ற சபாநாயகரிடம் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டிய குற்றமது. 

இந்தியாவில் காலகாலமாக அடிக்கல் நாட்டு விழா நடப்பது தான். அதை பூமி பூஜையாக நடத்த விரும்புவர்கள் புரோகிதரை வைத்தோ, அல்லது கோழி அறுத்து பலி கொடுத்தோ, வசதியுள்ளவர்கள் ஆடு அறுத்து துவங்குவதோ, அல்லது இன்னும் பலவகையாக காலம்காலமாக நடப்பது. இப்போது கிறித்துவப் பாதிரியார்கள் கூட இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர். இத்தகைய பூமி பூஜைகள், அடிக்கல் நாட்டு விழாக்கள் மதம் சார்ந்தது மற்றுமல்ல, மக்களின் அந்தந்த ஊர் வழக்கப்படி நடக்கும் கலாச்சார பண்பாடு சம்பந்தப்பட்டது கூட. 

அந்த எம்பி அவமதித்தது ஒரு அரசுப்பணியாளரை மட்டுமல்ல, பொதுமக்களோட கலாச்சார பண்பாட்டு வழக்கத்தையும். அந்த எம் பி கேட்ட மாதிரி அவருக்கு ஒரு புரோகிதர் வைத்து நடத்துவது பிடிக்கவில்லையென்றால் அவருக்கு எது பிடிக்குமோ அதை முன் கூட்டியே தெரிவித்திருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருபவர்க்கு இதெல்லாம் முன்பே தெரியாது என்று சொல்வதெல்லாம் நம்பத் தகுந்ததல்ல. திட்டமிட்ட ஒரு அவமதிப்பு அரங்கேற்ற நாடகம். கண்டிக்கத்தக்கது.

பதிவு ரொம்ப பெருசாயிடுச்சு. அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

நாடகமேடையில் நானும் ஒரு கதாபாத்திரம் என்பதில் 
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Drama escénico!

No comments: