Sunday, September 25, 2022

வெட்டிப் பொழுது

நமக்குத் தான் யார் கேட்கலைன்னாலும் ஃப்ரீ அட்வைஸ் தர்ற பழக்கம் உண்டே. ஆதலால் யாராவது எனக்கு நேரமேயில்லைன்னு கதை விட்டாங்கன்னா எனது மூன்றாவது கண் திறந்துரும். சும்மா நமக்குத் தெரிஞ்ச டைம் மேனேஜ்மண்ட் பத்தி அடிச்சிவுட்டு விடுவது தான், பிறகு நம்மப் பக்கமே வரமாட்டாங்க.

ஆனால் இன்னிக்கு என்ர நிலமை அப்படி. ஏகப்பட்ட வேலை ஒன்னு மாத்தி ஒன்னு, நேரமில்லை. நெற்றிக்கண் தானாகத் திறந்துகிச்சு.

என்னைப் பார்க்க வர்றேன்னு சொல்றவங்க வரமாட்டாங்க. ஆனால் அவங்க வந்தாங்கன்னா என்ன செய்யன்னு நானும் அம்மிணியும் ஆயிரத்தெட்டு பிளான் போட்டு மாத்துவோம். கடைசியல ஒன்னும் பண்ணாம நேரமேயில்லைன்னு இரண்டு பேரும் அலுத்துக்குவோம். ஒருத்தரை ஒருத்தர் நீ வெட்டியாக இருக்கேன்னு சொல்லிரக்கூடாதல்ல.

நேற்று மாலை ஐந்தரை மணிக்கு ஒருத்தர் வர்றேன்னார், அவர் வந்தா டின்னருக்கு வெளியப் போலாமேன்னு நினைச்சேன். ஆனால் மாலை வரலை, காலையில் வர்றேன்னார். சரி், பிளான் மாத்தியாச்சு.

வெள்ளிக்கிழமை இரவு பண்ற ஸ்பானிஷ் ஹோம் வொர்க் பண்ணலை. சரி இன்று சனிக்கிழமை காலையில பண்ணலாம்ன்னு விட்டேன். இப்ப அவர் மறுபடியும் மாலை வரப்போறேங்கிறார். 

இரவு பெருமாள் கோவில் ஏகாந்த சேவைக்குப் போகனும். அம்மிணியும் ஸ்டூடண்டும் பெருமாளுக்குத் தாலாட்டு வாசிக்கனும்.

முக்கியமான இந்தியக் கடமையைச் செய்யனும் அங்க என்ர ஃபோன் ரிப்பேர். கடமையைச் செய்திருக்கேன் ஃபோனில்லாம.

அடுத்து ஸ்பானிஷ் ஹோம்வொர்க் எடுத்தா அரண்டு போயிட்டேன். எல்லாம் ஸ்பானிஷ் விளம்பரம் மற்றும் சூப்பர்மார்க்கெட் வீடியோ போட்டு விட்டு அதிலிருந்து எல்லா கேள்விகளும் ஸ்பானிஷ்ல. இப்ப ஸ்பானிஷ் படிச்சா கொஞ்சம் நெப்புகுத்தாப் புரியரதால, அத்தனை கேள்விகளுக்கு ஸ்பானிஷ்லேயே பதிலளிச்சாச்சு.

அடுத்து மதியம் ஒரு வேலை இருக்கு, சாயந்தரம் அவர் வந்தா (வருவாராத் தெரியலை) கொஞ்ச நேரம். 

இரவு பெருமாள்ட்ட சரணாகதி.

அம்மிணி வேற நீ எப்பப் பார்த்தாலும் இந்த ஃபோன்லயே பொழுத ஓட்டறேங்கிறாப்புல. நேரம் பத்தவில்லை பெருமாளே!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Gestiona tu tiempo con prudencia!

No comments: