Sunday, September 25, 2022

சுதந்திரமாய் பேச முடியலையே

அக்னிபத் ன்னு ஒருத்தர் போஸ்ட்ல கமெண்ட் போட்டேன், அம்புட்டு தான். அக்னி பொசுக்கிடுச்சு. இனி உனக்கு கமெண்ட் போட உன்னை விட மாட்டேன்னு தூக்கிட்டாப்புல.

கேஸ் விலை ஏறிப் போச்சுன்னு புலம்பினாங்க. சரி எலக்ட்ரிக் ஸ்டவ் உபயோகிக்கறேன்னு சொன்னேன். இப்ப அதோட விலை ஏறிப்போச்சு. அடுத்து மண்ணெண்ணெய் கெரசின் கரி அடுப்புக்கு எப்ப விலை ஏறுமோ தெரியலை. அதுக்குள்ள அங்குட்டும் கமெண்ட் போட ஃப்யூஸ் போயிடும்.

அரிசிக்கு வரின்னாங்க, நம்ம தொப்பை சைஸ் பார்த்து வரி வருமான்னேன். அவர் கறிக்கடை ரேட்டு கூட அத்துப்புடியா இருக்கார். இப்ப என்ர கமெண்ட்டுக்கு என்ன ரேட் வைப்பாரோ தெரியலை.

ஒருத்தர் இன்சூரன்ஸ் எடுக்கலைன்னா வரி போட்டுருவார் போலயிருக்கு. மனுசன் படிச்சு படிச்சு சொல்றாப்புல. ஆனால் உங்களுக்கு ஃபைன் போட்டாத் தான் சரி வருவீங்கன்னு இன்னும் சொல்லாத குறை தான். என்ர கமெண்ட்ஸ்க்கெல்லாம் ஒரு லயபிலிட்டி இன்சூரன்ஸ் வாங்கி வச்சுக்கனும் போல.

எங்கூர்ல பெட்ரோல் டீசல் வண்டிக்கு மட்டுமல்ல, நீ எலக்ட்ரிக் வண்டி ரோட்டுல ஓட்டுனா கூட வரி போடப்போறோம். அடுத்த நாம ரோட்டுல நடக்கிறதுக்குக் கூட வரி கட்ட வேண்டி வரும்.

இதெல்லாம் சொன்னா, சொன்ன அடுத்த பத்து நிமிசத்துல என்ர போஸ்ட்டையே உள் டப்பியில பொசுக்க வேண்டி வருதே!

நமக்கெல்லாம் எப்பயா சுதந்திரம் வரப்போவுது!

வாய் நீளம். குறைக்க முடியல, குரைக்கரோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Mantente fresco!

No comments: