Sunday, September 25, 2022

எளியவர்களும் வரி கட்டுபவர்களே

நிறைய இடத்துல இதைப் படிப்பதால் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எல்லோரும் மிக சாதாரணமாக எழுதி கடந்து செல்வது பணக்காரர்கள் மட்டுமே அதிகம் வரிகட்டுவதாகவும், அவர்கள் கட்டும் வரியில் தான் மற்றவர்கள் வாழ்வதாகவும் இலவசங்கள் கிடைப்பதாகவும் படிக்கிறேன்.

இது ஒரு தவறான புரிதல்.

பணக்காரர்கள் அதிகம் சம்பாதிப்பதால் அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரியை கட்டுகிறார்கள். இப்ப வருமான வரி விலக்குக்கு கீழே சம்பாதிப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகையினால் அவர்கள் வருமான வரி வேண்டுமானால் கட்டாமலிருக்கலாம், ஆனால் ஒரு நாட்டில் பிறந்த எந்த குடிமகனும், குழந்தையேயானாலும், வரி கட்டாத ஆட்கள் கிடையாது.

Sales tax, excise tax, property tax, gst, … … என வரிசைப் படுத்தினோம்ன்னா நாட்டுல ஏதாவது  ஒரு வகை/பல வகை/எல்லா வகை வரிகளும் கட்டாத ஆட்களேயில்லை. பஸ், ட்ரைன், ரோட்டுல நடந்தா கூட ஏதாவது ஒரு வரி நம் கண் முன் படும்.

மத்திய, மாநில, உள்ளாட்சி, நகராட்சிக்கெல்லாம் வரும் இந்த வருமானம் எல்லா பொது மக்களிடமிருந்து தான். பணக்காரர்களிடமிருந்து மட்டுமே அது வருவது அல்ல. அவர்கள் பங்கு வேணா எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்.

எல்லா வரியும் கட்டிய பிறகும் பணக்காரர்களிடம் மீதி நிற்கும் proportional amountம் சாதாரண இன்கம்டாக்ஸ் வரி விலக்குக்கு கீழே இருக்கிறவங்க கிட்ட மீதமாகிற பணத்தோட proportion கணக்குப் போட்டா mathematicalஆக யார் வருமானத்தில் அதிக பர்சண்டேஜ் செலவு பண்ணி நாட்டை இயங்க வைக்கறாங்களுகோ, அவங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு, கிடைக்கும் இலவசத்திலும்.

புரிதல்படுத்திக் கொள்வதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Todos pagamos impuestos!

No comments: