Sunday, September 25, 2022

எலி வலையில் சிக்கிய பொழுது

எலி வலைகளுக்குள் வலிய புகுந்த வச்சுடறாங்க! ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்னுலையும் இழப்புகள் அதிகமாகவே ஆகிகிட்டு இருக்கு. எதுவுமே செய்ய முடிவதில்லை. இழந்தவை மிக அதிகம். இயல்பாக நடக்கிறது இப்ப.

இழப்புகளை இப்பவெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிடுச்சு இப்ப. 

என் உறவினர்களுக்குச் சொல்வேன் எப்போதும் குறைகளைப் பட்டியலிடாதே, அதுவே, அந்த லிஸ்டே நமக்கு பாரமாக வந்து நிற்குமென. 

கஷ்டங்களைக் கடந்து விடலாம். ஆனால் கஷ்டங்களின் பட்டியல் தான் மனதில் பாரமாய் நிற்கும்.

எவ்வாறு களைவது இதை!

கவலைகளுக்கு நம்மைப் பிடிப்பதால் அவை நம் அருகில் வருகிறதென அறிக.

வருவதை ஏற்றுக் கொள். வலை விரித்தாலும் புகுந்து கொள், அதில் நடக்கப் பழகிக்கொள்.

மனதில் சுமையா, கவலைப் படாதே, சுமையை இறக்க பல நடைபாதைகள் கிடைக்கும். அதில் நம் நகைச்சுவையின் நகைப்பில் பாரத்தை இறக்கி விடு.

பெருமாள் கோவில் தட்டில் போடும் அந்த ஐந்து பைசாவில் உன் கவலையைக் கரைத்து விடு.

கவலைகளைக் களைய உலா புறப்பட்ட ஒரு பொழுதில்
வாழ்வினிது
ओलै सिरिय।
¡No te preocupes en tu sonrisa!

பின் குறிப்பு: சும்மா எழுதத் தோன்றியது.

No comments: