Sunday, September 25, 2022

தடி எடுத்தவனெல்லாம்

அரசு, அரசமைப்பு, அதிகாரம், நீதி, சட்டம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு அதிகாரம் செல்வாக்கு உள்ளது என்கிற check and balance தெரிந்து செயல்படுவது மிகவும் நல்லது.

தடியெடுத்தவன் தண்டக்காரன், சத்தம் போட்டு மிரட்டுபவர் சட்டாம்பிள்ளை கதை தான் எல்லா இடங்களிலும்.

ஒருவர் தன் பதவியின் அளவுக்கு மீறி மற்றவர்களை மிரட்டுவது, கையை நீட்டுவது, அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றும் செய்ய முடியாமல் அடங்கிப் போவது, நடந்த நிகழ்வு தேவையா தேவையற்றதா, பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதா வேண்டாமா எனப் பரிசீலித்து செயல்படுவதா வேண்டாமா என நடக்கும் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் உண்டு, இங்கும் உண்டு.

என்ன, இங்கைக்கும் அங்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு நடைமுறை பழக்கவழக்கங்களை இயல்பாகக் கடைபிடித்தோமென்று சொல்லி விட்டு எளிதாகக் கடந்து போக முடியும். எவரும் மற்றவர் மீது கை நீட்ட அல்லது மிரட்ட முடியாது. திரைமறைவு செயல்களில் விளைவுகள் தெரியவரும்.

பதவியில் ஏறிய பிறகும் சக மனிதனை மனிதனாக நடத்தும் போது
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Respetar a los demás!

No comments: