Sunday, September 25, 2022

விநாயகச் சதுர்த்தி

வாழ்க்கையில சில பேருக்குத் தான் அவங்க நினைக்காமலேயே எல்லா நல்லவைகளும் நடக்கும், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நமக்கு அது பெரியதாகத் தோன்றலாம்.

அத்தகைய தினம் இது.

சில வருடங்கள் முன் அம்மிணிக்கு பெருமாள் கோவில் ஏகாந்தசேவைக்கு வீணை வாசிக்க வாய்ப்பு கிடைச்சப்ப சில வெட்டிக்காரணங்களைக் கூறி தள்ளிப் போடப் பார்த்தாப்புல. நான், பெருமாள் கூப்பிடறார் ஒழுங்காப் போய் வாசிக்கிறதைப் பாரு, தேதி மாத்தாதேன்னு மிரட்டி வச்சேன். கடைசியில வாசிக்கப் போகிற அன்னிக்கு ராமநவமி. அம்மிணி பின்னாடி சொல்றாப்புல உன்னால ஒரு நல்ல காரியம் நல்ல நாளில் பண்ண முடிஞ்சதுன்னு.

இப்ப எனக்குத் தெரியாமல் அவங்க நண்பர்கள் மூலம் மாதத்தில் ஒரு நாள் சிவன் கோவில் நடைசாத்தும் நேரம் ஏகாந்த சேவைக்கு கஷ்டப்பட்டு தேதி வாங்கியிருக்காப்புல. போன மாதம் கேட்டதற்கு அவர்கள் சிவன் கோவில் சேவைக்கு இன்று நாள் ஒதுக்கியிருந்தார்கள்.

இரண்டு வாரம் கழித்து தான் தெரிந்தது அவர்கள் அலாட் பண்ணிய நாளான இன்று இங்கு கோவிலில் விநாயகச் சதுர்த்தி துவக்கம் என்று.

இப்ப தான் ஏகாந்த சேவை முடித்து வீட்டிற்கு வந்தோம். அம்மிணிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு விநாயகச்சதுர்த்தி நாளன்று.

கோவிலில் செம கூட்டம், கார் நுழையவே கடினம். உள்பிரகாரம் போனால் ஹாலுக்குள் நுழைய முடியாத அளவு கூட்டம். எல்லோரையும் ஒதுக்கி வீணை மற்றும் ஸ்பீக்கர் செட் பண்ணி எல்லா எடுபுடி வேலையும் செய்த திருப்தி இன்று.

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
 ¡Todos nosotros obemos las bendiciones de Dios!

No comments: