Friday, September 30, 2022

வெகுளியின் பொருட்டு எழும் விழுப்புண்

வெகுளியாய்க் கேட்டதென்னவோ 
     விழுப்புண்ணை தொட்டுவிட்டது
உள்ளத்து குமுறல் வெகுளித்தனமாய் வழிகிறது!

உள்நோக்கில்லா கேள்விகள்
  உலோகத்தை உருக்குமாயின்
உருக்குத் தத்துவங்கள் உள்நோக்கமானது!

என்னை மறந்து ஒரு கேள்வி
  என்னையே ஆட்டிப்போட்டது
எவரது கேள்விகளும் மறவாது!

வாழ்வியல் சூழ்நிலை தரும் சுகம்
  பிறர் தன் வாழ்வைப் பதம்பார்க்கையில்
வெகுளியாய் நிற்பது அறிவிலிபோலாயிற்று!

வெகுளியின் பொருட்டு எழும் விழுப்புண்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Las preguntas inocentes duelen!

No comments: