Friday, July 15, 2022

பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை

1986ல் திருச்சி ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க உள்ள நுழைஞ்ச போது எனக்கு 22 வயது. இது வரை படித்துப் பெற்ற பட்டங்களை வச்சு வேலை வாங்குறது கஷ்டம், இனி வருங்காலம் கம்ப்யூட்டர் கையில் தான்னு புரிய ஆரம்பிச்சு அதுல எப்படியாவது சேர்ந்து படிக்கனும்ன்னு ஒரு புரபசர் உதவியோட மாலை நேரக் கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பிச்சேன்.

கல்லூரியில் நாலு dumb terminals, கம்ப்யூட்டர்ல இருந்த மெமரி 16kb தான். வாரத்தில் இரண்டு நாள் 40 நிமிஷம் கம்ப்யூட்டர் முன் கிடைக்கும், அந்த குறுகிய நேரத்திற்குள் நாம எழுதிகிட்டுப் போன ப்ரோக்ராமை பன்ச் பண்ணி, error proof பார்த்து ஓட வைக்கனும். அங்க போய் புதுசா எழுத நேரமில்லை. அப்படி எழுதி கத்துகிட்டது தான் basic, cobol, fortran. Pascal பின்னாடி கத்துகிட்டேன். தஞ்சை LIC போனப்ப அவங்க punched card system reader வச்சுகிட்டு ஓட்டிகிட்டு இருந்தாங்க.

காலை நேரத்துல அப்ப இருந்த அரசியல் உணர்வோடு வங்கி வாசல்லையும் இன்சூரன்ஸ் கம்பெனி வாசல்லையும் போயி, வங்கிகளிலும் இன்சூரன்ஸிலும் கம்ப்யூட்டரைப் புகுத்தாதே வேலை வாய்ப்பைப் பறிக்காதேன்னு கத்திவிட்டு வருவேன்.

மாலை நேரத்துல உட்கார்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், ப்ரோக்ராம் படிப்பேன். படிக்கும் போது தான் இந்த விஞ்ஞான வளர்ச்சி எப்படியெல்லாம் உதவப்போகிறதுன்னு புரிய ஆரம்பிச்சுச்சு.

என்னோட இந்த காலை மாலை முரணான இரட்டை நிலையை நினைச்சு ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்ச காலம் அது. வயசும் 22 தான். எல்லாவற்றையும் ஒரேயடியாக புரிஞ்சுக்கிற வயதல்ல. இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சியை குறை சொல்ல மற்றும் தடுக்கக் கூடிய சக்தியாக எனது செயல் இருந்ததை நினைத்து வருந்தியது உண்டு.

இப்ப இந்த 35 வருட வளர்ச்சியில் பார்த்தால் கம்ப்யூட்டர் உள்ளே நுழையாத ஒன்று கூட இல்லை என்று சொல்லலாம். Arts, literature, medical, astronomy, ஆன்மீகம், archaeology, architecture, science, biology, chemistry, veterinary, history and geography, கம்யூனிகேஷன் என எல்லாயிடத்திலும் கம்ப்யூட்டர், அது உள்ளே புகாத இடமே கிடையாது இப்ப. அதன் மூலம் எந்த ஒரு நாடும் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்.

சிலர் எழுதுகிறார்கள்: ஆர்ட்ஸ், literature, கவிதையெல்லாம் எழுதிகிட்டு இருக்கிறவனுக்கு விஞ்ஞானத்தைப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு. ரைட்டு. அது அவர்கள் ஒபீனியன். நடைமுறையில் அதுவல்ல எவரது வாழ்க்கையும்.

நேற்று நாசா வெளியிட்டுள்ள டெலஸ்கோப் இமேஜை வச்சுகிட்டு பலர் தனக்கேற்றவாரு எல்லோரும் உருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி, அது மற்றவைகளைப் புரட்டிப் போடப் போகிறதென.

என்னைப் பொருத்தவரை இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டர் வளர்ச்சி எவ்வாறு அனைத்து துறையினருக்கும் உதவியதோ, அது போல இதுவும் அனைத்து துறையினருக்கும் உதவக்கூடிய ஒன்றாக மாறலாம். ஒவ்வொருவருடைய தேடலும் அவரவரது தேவை, நம்பிக்கை, வாழ்வியல், வளர்ச்சி என தேவைப்படும் ஒவ்வொன்றுக்கும் இதிலிருந்து அவர்கள் எதை வேணுமானாலும் தேடி எடுக்கலாம். அத்தகைய கண்டுபிடிப்பாக இந்த பிரபஞ்சத்தின் ஒளிக்கற்றை நமக்கு ஒளி வீசட்டும்.

விஞ்ஞானம் அனைவருக்கும் சொந்தமானது. அவரவரது தேவைக்கேற்ப இதில் தேடிக்கொள்வார்கள்.

தடைகளை கண்டு அஞ்சாத எறும்பு போல் ஊர்வோம்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los inventos científicos son para todos!

No comments: