Saturday, May 2, 2020

கொரோனா நாட்களில் புத்தாண்டு

புதுவருடம் ஒரு புதிர் போல் புலர்கிறது
புடைத்துவிட்ட நெல்லை புழங்க முடியாமல்
உள்ளிருக்கும் புத்துணர்ச்சியை புடம் போட்டு நிமிர்த்தி
வெளிக்கொண்டு வந்தால் இறங்கும் தடிவரிசை!

அத்திவரதர் வந்து சென்றார் அன்று
என்போல் நீயும் உள்அமர்வாய்
ஓர் தினம் என்றுணர்த்தி!

கிருமியின் அழிவைத் தேடும் முன்
தேய்ந்து விழும் மனித சமூகம்
வேறுபாடு எதுவுமின்றி
ஒன்றாய் வீழும் வேறுபாடுகள்!

மஞ்சளும் துளசியும் கருஞ்சீரகமும் போல்
கலந்ததொரு ஓர்உயிர் மருந்து தேடி
அலையும்பொழுதில் வருமென
காத்திருக்கும் நவீனமருந்துகள்!

மனிதனை மிருகங்கள் வாழ்வில் முந்திச்செல்லாமல்
நாம் விதைக்கும் விதைகள் வளரட்டும்
புதுவருடம் புலர்ந்ததில் புத்தொளி தேடி நிற்போம்
செயற்கையின்றி இயற்கையில் சுவாசிப்போம்
மனிதனாய் வாழ்வோம்!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments: