Saturday, May 2, 2020

மூன்று குணங்கள்

இது இப்ப வாட்சப்ல வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணி போட்டுள்ளேன்.

3 சமஸ்கிரத வார்த்தைகள். அதற்கான விளக்கங்களை எப்படி சொல்கிறார்கள். வாவ்!

குணத்ரய பரிச்சேத்ர்யை நம:

மனித ஜன்மத்திற்குரிய மூன்று குணங்கள் சத்வ-ராஜஸ-தாமஸ. இந்த மூன்று குணங்களின் ஏற்ற இறக்கங்களே ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்கின்றது. மஹான்களுக்கும், சாதுக்களுக்கும் சத்வ குணம் மேலோங்கி நிற்கும்.

அம்பாள் இந்த மூன்று குணங்களுக்கும் அதிபதியாகி இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பபட்டு வாஸம் செய்பவள். அம்பாளின் ரூபமான ஶ்ரீ காளி ரூபத்தில்,தாமஸ குணமாக வெளிப்படுகிறது. இடது காலை முன்னிறுத்தி, நாக்கை தொங்கவிட்டு யுத்த களத்திற்கு செல்லும் தோற்றம். இந்த தோற்றத்தை உபாஸனை செய்யும் பக்தன் தன்னுடைய தாமஸ குணத்தை அறிந்து கொண்டு அதனை  உயர் நிலைக்கு மாற்ற முயற்ச்சிசெய்வார்.

ஶ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் ராஜஸ குணத்தை குறிக்கிறது. எவனொருவன் அதிகமான செல்வத்துக்கு அதிபதியாகிறானோ, அவன் கர்வம் கொண்டு ராஜஸ குணத்தை வெளிப்படுத்தி எவரையும் மதிக்காமல் செயல்படுவான். ஶ்ரீ மஹாலஷ்மி உபாஸனை ராஜஸ குணத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

சத்வ-குணம் மஹா ஸரஸ்வதியின் ஸ்வரூபம். உயரிய ஞானம் பெற்றவர்கள், தனது  விநயத்தால் அனைவரையும் கவர்பவர்களாக இருப்பர். (வித்யா விநய ஸம்பன்ன:) என்றும் தனது ஞானத்தால் அனைவரது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வழி கோலுபவர்களாக இருப்பர்.

இந்த மூன்று குணங்களையும் உள்ளடக்கிய  அம்பாளின் ஸ்வரூபமே ஶ்ரீ சண்டி யாகும். அம்பாள் இந்த மூன்று குணங்களிலும் இருந்தாலும், இதில் எதிலும் ஒட்டாமல் அவற்றிற்கு மேல் அவற்றை ஆட்சி செய்பவளாக இருக்கிறாள்.
அப்பேற்ப்பட்ட அம்பாளுக்கு நமஸ்காரங்கள்.

No comments: