Saturday, May 2, 2020

சொந்த ஊர் நோக்கி

மேற்கத்திய கலாசாரத்திற்கும் இந்திய கலாசாரத்திற்கும் இடையே உள்ள ஒரு பெருவெளி அல்லது வித்தியாசம், ஒரு பண்டிகையோ அல்லது பேரிடர்வோ இந்திய கலாசாரம் தான் வளர்ந்து வந்த/கடந்து வந்த கிராமப்புறம் நோக்கி கூட்டாக விரைவதில் தெளிவாகப் பார்க்கலாம். மேற்கத்திய மக்கள் அவ்வாறு ஓடுவது குறைவு. இதனால் இந்த பேரழிவிலிருந்து தப்பித்தார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அரசாங்கம் தான் நினைப்பதை செயல்படுத்த முடியும்.

பண்டிகைக்கு எல்லோரும் சொந்த ஊர் தேடிப்போற மாதிரி ஒரு பேரிடர்வின் போதும் அவ்வாறு அவர்கள் ஊர் நோக்கி போகாமல் இருப்பார்கள் என்று கணிப்பது ஒரு விதத்தில் தவறாக இருந்தாலும், மக்கள் தன் இடம் நோக்கி ஓடுவதை எப்படி கையாள்வது!

மேற்கத்திய நாடுகளில் அதிபரை மக்கள் ஏற்காவிட்டாலும், அரசு இடும் கட்டளைக்கேற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள்.

ஒரு பேரிடர்வு தன் முன்னோக்கி வருகிறது. 130 கோடி மக்களை எப்படி உள்ளிருத்தி வைப்பது? எப்படி கையாள்வது என்பது போன்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கும். அதை பரிசோதிக்க காலை 7 மணிமுதல் மாலை வரை மக்களை உள்ளிருத்திப் பார்க்கலாம். அதன் வெற்றி தோல்வியை வைத்து முடிவு செய்யலாம் என்று நினைத்திருக்கலாம். 60-70 சதவீத மக்களின் நம்பிக்கை கிடைத்தது, மாலையில் அனைவரும் வெளிவந்தது தவறாக இருந்தாலும், 21 நாட்கள் உள்ளிருப்பை தைரியமாக அறிவிக்க முடிந்தது. தேவையான ஏற்பாடுகளின்றி அறிவித்தது இன்னும் பேரிடர் தான்.

கலவரங்களின்றி நிறைவேறினாலும், பல்லாயிரம் மக்கள் தன் சொந்த ஊர் திரும்புவார்களென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி வரப்போகும் தொற்றுநோய் கிருமியை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேலும் மாறுபடும்.

எந்தவொரு செயல்பாடும் மக்களின் ஒத்துழைப்புன்றி செயல்படுத்த முடியாது.

No comments: