Saturday, May 2, 2020

சொல்லும் முன் செய்வனச் சொல்

சொல்ல வருவதை சொல்வதற்கு முன் சொல்பவை சரியான்னு சரிபார்த்து சொல்வது நல்லது.

அப்படி சொல்வது தவறாகும் பட்சத்தில் ஏற்படுத்தும் அவமானங்கள் கேலிகள் உறுத்தினாலும், அவை மேலும் கற்க உதவும் படிக்கட்டுகளாக நினைத்து மேற்கொண்டு கற்க வேண்டும்.

சமீபத்தில் பட்ட அவமானம் ஒன்று:

பேஷண்டை வெண்டிலேட்டர்ல வைக்கும் முறையை டாக்டர் விளக்கும் போது அவர் உபயோகித்த வார்த்தை intubation. அதை இன்னொருவரிடம் சொல்லும் போது வாயில் தவறுதலாக வந்த வார்த்தை incubation.

3வது லட்டர் tயை c ஆக்கியதால் அர்த்தம் மாறிப்போச்சு, tc கொடுத்துட்டாங்க, மருத்துவத்தைப்பற்றி ஒன்னும் தெரியாத மாதிரி அவமானம். அவமானத்தில் வருவது கோவம். கோவம் வந்தால் தேடி வருவது பாபம்.

அதற்கப்புறம் வென்டிலேட்டரின் உபயோகத்தை அதன் மெடிக்கல் டேர்ம்ஸ்உடன் கற்க முடிந்தது.

அது போல், 9 கோள்கள் ஒரே கோட்டில் வருவதும்!

அபிக்யா ஆனந்த் சொல்வது போல சமஸ்கிரத மொழியை அர்த்தம் புரிகிற அளவுக்கு படித்து தெரிந்து கொள்ளாமல் வேதிக் ஆஸ்ட்ராலஜியில் ஒன்றும் செய்யமுடியாது, புரடா உடுவீங்கன்னு! பையன் நமக்கு நேரா சொல்லலை. ஜோதிடக் கல்லூரி புரபசர்களுக்கு சொல்றான். எல்லோருக்கும் பொருந்தும்.

No comments: