Saturday, May 2, 2020

இடர்கால நிவாரணம் கடனில் கழிந்தால்

ஒரு காலத்துல கடனற்ற வாழ்வு வாழ்வதெப்படின்னு எழுதிகிட்டு இருந்தேன். அதன்படி தான் வாழவும் செய்கிறேன்.

நேற்று தான் இடர்கால நிவாரண நிதி வந்தது. இன்றைய செய்தியில் அந்த பணம் பல மில்லியன் மக்களை அடைவதற்கு முன் நேராக கலெக்‌ஷன் ஏஜன்சிக்கும், கிரெடிட் கார்ட் கடன் மற்றும் பிற கடன்களுக்கும் நேராகப்போய்விடுகிறது என்று வருகிறது.

எந்தவொரு பெனிபிட்டும் அது தேவைப்படும் போது நேரடி உபயோகத்தில் இல்லையென்றால் அரசு எவ்வளவு உதவி செய்தாலும் பலனை அடைய முடியாது!

நோயற்ற வாழ்வே குறைவற்ற/கடனற்ற செல்வம்பாங்க! நோயும் கடனும் சேர்ந்து தாக்கிச்சுன்னா எங்கே போவது!

குறைந்தபட்சம் கடன்களை அடைத்துவிட்டு வாழ முயற்சி செய்யாவிடில் யாராலும் எதுவும் செய்ய முடியாது!

கடன்றற வாழ்வு வாழ முயற்சி செய்வது எப்போதும் நல்லது! மனிதனாக வாழ முடியும். குறைந்தபட்சம் நோய் வருவதற்கு முன் இந்த கடன் நோயை நீக்கனும்!

No comments: