Saturday, May 2, 2020

ஒரு வேலை இருவருக்கு பகிர்ந்தால்

60 வயதுல ரிடையர் ஆவதை மாற்றி 58 வயதுக்கு ரிடையர்மண்ட் கொண்டு வந்தப்ப சொன்ன சில காரணங்கள்:
1. இளைஞர்களுக்கு ரிடையர் ஆகிறவங்க வேலையை கொடுக்க முடியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!
2. வயதாகும் போது வேலையில் சுணக்கம் ஏற்படலாம், இளைஞர்கள் வேலை செய்தால் உற்பத்திதிறன் அதிகமாகும்.

இப்படி பல காரணங்கள் வந்தன!

இனி வரும் காலங்களில் இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டுமென்றால்:
1. 40 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்க தடை செய்ய வேண்டும்.
2. 40 மணி நேரத்திற்கு மேல் செய்ய வேண்டிய வேலையாயின் அதை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும்.

இதுவரை நட்டமடைந்ததை ஈடு கட்ட மக்கள் 60 மணி நேரத்திலிருந்து 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்றால், சக மனிதனை மனிதனாக வாழ விடக்கூடாது என்று அர்த்தம்.

நாட்டை வளமாக்க அவ்வளவு உழைக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த 90 மணி நேர உழைப்பை இருவருக்கு கொடுத்தீர்களென்றால் அதன் மூலம் இன்னொரு குடும்பம் பிழைக்கும், அரசுக்கு மேற்கொண்டு வரிகள் கிடைக்கும், மற்ற பொருட்கள் விற்பனையாக வழிவகுக்கும். உண்மையில் பொருளாதாரம் வளர இது உதவும்!

நாட்டுப்பற்றுள்ளவர்களாயின் யோசிக்கவும்!

மே தின வாழ்த்துகள்!

No comments: