Saturday, May 2, 2020

பசியினை வெல்வோம்

(அ)கோரப்பசி

வாழ்க்கையில இதுநாள் வரை பட்டினி இருந்தது கிடையாது!

ஊர் போனப்ப அண்ணன் மகள் சொன்ன ஒரு அறிவுரை: சித்தப்பா! வாழ்க்கையில வெல்ல முடியாத வகைகளை வெல்ல ஒரு பட்டினி பத்தியம் இருந்து செய்து பாரு! பலன் கிடைக்கும்ன்னாப்புல.

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. சமீப காலங்களில் ரொம்பவே பசிக்குது. இயல்பை விட அதிகமாகவே உண்கிறேன். எப்படி செய்வோம்ன்னு தெரியலை.

முதல்ல எட்டு மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம், 20பது - 24ன்னு ட்ரை பண்ணுன்னு சொன்னாள் மகள்.

இன்னிக்கு ஆபீஸ் இல்லை. கடினமான வேலை எதுவும் இல்லாத நாள். இன்னிக்கு ட்ரை பண்ண முயற்சித்தேன்.

நேற்று இரவு சாப்பிட்டதோட சரி. காலையிலிருந்து மாலை 5 மணி வரை 4 தடவை அரை கப் காபி மட்டுமே. 3.30க்கு மேல உடல்ல ஒரு பலகீனம் தெரிய ஆரம்பிக்க, கடைசி கப் காபியில கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்துகிட்டேன்.

நடுவில பையனோட அட்வைஸ்: பட்டினி இருக்குற நேரத்துல காபி குடிச்சன்னா உன்னோட லிவர் ப்ராஸஸ் பண்ணும் போது அது ஆல்கஹால் குடிச்ச மாதிரி. தெரிஞ்சுக்கோ!

5 மணிக்கு மேல முடியலை. வூட்டம்மிணிட்ட கெஞ்சி இட்லி சுடச் சொல்லி ஒரு வெட்டு வெட்டினேன்.

பட்டினி இருந்து முடித்த பிறகு கோரப்பசியில ஒரு வெட்டு வெட்டுவோம் பாருங்க! அப்படி ஒரு பசி.

பட்டினியிருந்த பலன் தின்ன இட்லியில கவுந்திருக்கும். இருக்கட்டும். முதல் தடவை இது. இனி கொஞ்சம் உடலை தயார் படுத்திகிட்டு ட்ரை பண்ணனும்.

பசியினை வெல்வோம்!

No comments: