Saturday, May 2, 2020

பெற்றோர் என் கனவில்

என்னமோ தெரியலை! இரண்டு நாளா அப்பா அம்மாவோட இருக்கிற நினைவுகள் மட்டும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு எபிசோடாக பத்து வயது துவக்கத்திலேர்ந்து கனவில் வருது. பகல் நேர உறக்கம் மற்றும் இரவு நேர உறக்கத்திலும் வருது.

அப்பா அம்மா செய்யச் சொல்வது மற்றும் பலவை அவங்களச் சுற்றியே ஓடுகிறது. பல சுவையான மற்றும் என்றுமே அது மாதிரி நடக்காத அடி வாங்கும் நினைவுகள் எல்லாம் வருது.

திடீர்ன்னு அதிர்வில் எழுந்திரிக்கும் போது தான் இப்ப இருவருமே இல்லை, கனவுன்னு உணரமுடிகிறது. அதுவரை நிஜம் போல் நடப்பதாகவே மனதில் படம் ஓடுது. நடக்காத விசயங்கள் நடந்தது போல் ஓடுகிறது.

பெற்றோர் நினைவில் இப்படி வாழ்வது ஆச்சரியமாக இருக்கு! 1986ல் அப்பா ரிடையர் ஆனார். அதிலிருந்து இன்று வரை அவர்கள் ஒட்டியே உழன்று திரிந்ததன் தாக்கம் தொடர்கிறது!

No comments: