Saturday, May 2, 2020

ஸர்வ ஜீவன சுகம்

வாட்சப்பில் வந்தது. எடிட் செய்து:

ஸர்வ ஸஞ்ஜீவனோத்ஸுகாயை நம:

ஜீவனம்- நம்முடைய வாழ்க்கை மற்றும் நாம் வாழும் முறையை குறிக்கும்.

இந்த வாழ்க்கையை நாம் ஆத்ம பலத்துடனும், சரீர பலத்துடனும் சேர்ந்து வாழ்தலே முறையாகும்.

ஆத்ம பலம்( மனோபலம்) இல்லாது வாழ்பவன், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும் ஒரு சபையில் தான் நினைத்த விஷயத்தை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் கலங்கி நிற்பான்.

அதுபோல்,  சரீர பலம் இல்லாது போனால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது போகும்.

இந்த ஜீவனத்திற்கு மருந்தாக( ஸஞ்ஜீவனமாக), எல்லாவித நிலைகளிலும் நம்மை தூக்கி நிறுத்தக்கூடியவற்றை வணங்குகிறேன்.

அதுமட்டுமில்லாது, நம்முடைய ஆத்ம பலத்தை பெருக்கி நமக்கு அனேக ஸுகத்தை அளிக்கச்செய்பவரை வணங்குகிறேன்.

No comments: