Saturday, May 2, 2020

பூரி மசால்

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வெங்காயம் ரொம்ப பிடிக்கும். அதனால் எனது சின்னவயதில் வாரத்தில் இரண்டு நாள் பூரி மசால் இரண்டு நாள் பக்கோடா இருக்கும். அம்மா செமையா பண்ணுவாங்க! கடலைமாவை கொஞ்சம் லைட்டா கரைச்சுவிட்டு டேஸ்ட் கூட்டிருவாங்க!

குடும்பம் பெருசு. அதனால் பெரிய அலுமனிய எண்ணெய் வடிகட்டி பாத்திரம் நிறைய பக்கோடா பண்ணுவாங்க! டிரவுசர் பாக்கெட் முழுசும் இரண்டு பக்கம் நிரப்பிகிட்டு போய் விளையாடிகிட்டே சாப்பிட்டு கிட்டு திரும்ப வந்து பாக்கெட் நிரப்பி கிட்டு ஓடுவேன்.

அந்த பழக்கம் இப்ப அடிக்கடி வாட்டுது. எப்படா பக்கோடா கிடைக்கும் பூரி கிடைக்கும்ன்னு மனசு அலையுது!

இந்த தடவை பெங்களூரில் ஐந்து வாரம் இருந்தப்ப ஹோட்டல் தான் தினமும். ஒரு நாள் ஆசையாய் பூரி ஆர்டர் பண்ணினேன். பூரி எண்ணையில மிதக்கிறதைப் பார்த்து முழுசும் சாப்பிடமுடியலை. ஒரு நாள் ஆர்டர் பண்ணினதோடு சரி.

பூரி மசால் ஏக்கம் மனசைவாட்டுது அதிகம் இப்பவெல்லாம். அம்மா டேஸ்ட் வராது. அடிக்கடி அண்ணன் வேற போன் பண்ணி இன்னிக்கு பூரிமசால்டாம்பான். என்னத்த சொல்ல!

எதுக்கு இம்புட்டா! இன்னிக்கு அம்மிணிக்கு திடீர்ன்னு மனசு வந்து எல்லா காயும் தீர்ந்துருச்சு, மசால் பண்றேன்னாப்புல. அடுத்து பூரி வரும்ன்னு நினைச்சீங்கன்னா அது வள்ளுவர்-வாசுகி வூட்டுலத் தான் நடக்கும்.

கூட சப்பாத்தி பண்ணிவைக்குறேன். எவ்வளவு பண்ணனும்ன்னு கேள்வி. என்ன சொல்வீங்கப்பா!

தாயீ கொஞ்சம் மனசு வைச்சு இரண்டு தோசையைப்போடு மசால் வாசனையைப் புடிச்சுக்கிறேன் பின்னாடி 4 சப்பாத்தியைக் கொடுன்னு துன்னாச்சு!

அம்மாவோட பூரியும் போச்சு இந்த வெங்காயத்தானுக்கு!

No comments: