Saturday, May 2, 2020

ஊர்புரளி

கிராமப்புற வாழ்க்கையில் சில சமயம் புரளிகள் ஊர்வம்புகள் சிறு தீப்பொறி வச்சா பஞ்சு மாதிரி பத்திகிட்டு பறக்கும்.

எங்கள் ஊரும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டத்தட்ட 35 வருடம் முன்ன நடந்த உண்மைச் சம்பவம் இது.

ப்ளஸ் 2 முதன் முதலாக பள்ளியில் ஆரம்பித்த போது போதுமான படித்த ஆசிரியர்கள் இல்லைன்னு மாஸ்டர்ஸ் முடித்து வந்த பட்டதாரிகளை புதிதாக ப்ளஸ் 2 ஆசிரியர்களாக நியமித்தனர்.

தமிழ் மீடியம் பள்ளியில் ப்ளஸ் 2 ஆங்கிலத்தில் புதிதாக ஆரம்பித்ததால் நிறைய மாணவர்கள் புதுவகைப் பாடத்திட்டம் மற்றும் ஆங்கில மொழி வழிக்கல்வியானதால் சிலர் அதே இளம் ஆசிரியர்களிடம் மாலையில் ட்யூசன் போக வேண்டி வந்து போக ஆரம்பித்தனர். குறிப்பாக சில பெண் மாணவிகள்.

இது ஊர்வம்பு கிளம்ப காரணமாகியது. அவனுக்கு அவளோட காதல், அவளுக்கு அவன் மேல் ஒரு பார்வையுண்டு என இல்லாததும் பொல்லாததும் சொல்லும் ஒரு தலைக்காதல் கதைகள் அதிகம் அந்நேரத்தில் பறக்கும். சில பெண்கள் பையனோடு ஓடியதால் ஒரு சில பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. ஒரு ஆசிரியர் தன் மகள் ஒரு பையனோடு போய் விட்டாள் என்று உயிர் மாய்த்ததும் நடந்தது அப்போது.

ஒரு சமயம் இந்த ட்யூசன் போகிற பெண்கள் மற்றும் அந்த பள்ளி ஆசிரியர்கள் ஏதோ டூர் போய்விட்டு வந்தனர்.

அன்று தொடங்கியது ஊர்வம்பு, புரளி சொல்லுதல், இல்லாத பழி போடுதல் எல்லாம். வயது வரம்பற்று பெரியவர்களிலிருந்து சின்னவர்கள் வரை இந்த gossips பரவலாக ஒடிகிட்டு இருந்தது.

மிக மிக தைரியசாலி, நல்ல அழகி, மிக பாப்புலர் பெண் என நாங்கள் நினைத்தவள் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாள். 12 வது படிக்கும் அந்த இளம் மாணவி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாள்.

ஊரே ஆடிவிட்டது! என்ன காரணம் என்ன காரணம்ன்னு எல்லோரும் வெளிப்படையாக கேள்வி; ஆனால் உள் மனதில் இப்படி ஆகி இருக்குமோன்னு சில்மிஷ விஷம நினைப்புகள். யாருக்கும் தெளிவான காரணம் தெரியாது. ஆனால் குரூரமான நினைப்புகள்.

அதிர்ச்சி அடங்க இரண்டு நாள் முடியுமுன்னே அந்த பெண்ணுடன் இருந்த இன்னும் இரண்டு மாணவிகள் அடுத்ததடுத்த நாட்கள் தற்கொலை செய்து கொள்ள, ஊரே பயந்து போய் நின்று விட்டது. மூன்று தற்கொலைகள் மக்களின் புரளிகளால்.

அடுத்து அவர்களுடன் இருந்த இன்னும் இரண்டு பெண்கள் இதைச் செய்வார்கள் என்று நினைத்து அவர்கள் பெற்றோர் மிகவும் அவர்களை கண்காணித்து உயிரைக்காப்பாற்றி விட்டார்கள்.

அதில் ஒரு பெண்ணை 33 வருடம் கழித்து பார்த்த போது அவளிடம் காரணம் கேட்கும் துணிவில்லை. ஆனால் அவர்களுடைய கிளாஸ்மேட் என்னோட உறவினரிடம் பல தடவை விசாரித்ததில் உள்ளூர் மக்களின் இந்த கேவலமான மனநிலை வீண்புரளி கிளப்பிய அவலநிலையைத் தான் காரணம் சொன்னார்கள்.

இதை இப்ப சொல்லக் காரணம் என்ன என்று கேட்கறீர்களா!

35 வருடம் கழித்து புதிதாக தொடர்பில் வந்தவன் இன்று அந்த மரணங்களைப் பற்றி கேட்கிறான். அப்போது அவன் படித்துக் கொண்டிருந்தது 9வதோ 10வதோ. அவ்வளவு சிறுவன். ஆனால் அந்த மரணங்களின் பாதிப்பு நிகழ்வு அதைப்பற்றிய கருத்து எதுவும் மாறவில்லை.

அவன் கேள்வி:
triple suicide case solve aacha ? yaaru kutravaali
sexual harassment dhan kutravaali a
nija kutrvaali kutratthuku appaal ?!

அவனுக்கு என்னோட பதில்:
பொய்பிரச்சாரம் தான் காரணம்ன்னு சொல்றாங்க!

அவனது மறுகேள்வி:
enna poi prachaaram ... vaaruku enna benifit poi prachaaram paanuvadhaal ?
amazed that it was hushed under the carpet in a place like ours.
2 others girls could have been in the pact if suicide but saved on time by parents

அவனுக்கு என்னோட பதில்:
They were classmates of my relative. I had several rounds of discussion with her who says it was the rural mentality of the people interested in gossiping made the situation worst which caused the tragedy. I do agree with her knowing the gossip and rumor spreading attitude of our people.

அதற்கு அவன்:
Ours is a small place and news like this spreads like wild fire however no one woulfd go to the extent of killing oneself if there was no truth ... probably not all three was affected but atleast 1 would have been compromised and the other 2 would have given in to guilt ...

அதற்கு என் பதில்:
Again this is the same type of discussion happened those days which those girls at young age couldn’t take it easily.

இதற்கப்புறம் தொடரலை.

மரணத்திற்குப் பின்னும் அந்த சிறுபெண்களைப் பற்றிய அபிப்ராயங்கள் மாறாதது வருத்தமாக இருக்கிறது.

தற்கொலைகள் எப்போதும் தன் துன்பங்களைப் போக்கப்போவதில்லை, அதை உயிர் வாழ்ந்து நேரில் எதிர்கொள்வதே முன் உதாரணமாய் நிற்கும்.

தற்கொலைகள் கோழைத்தனமானது. ஆனால் அதற்கு அவர்களைத் தள்ளிய ஊர்சனம் தன் குற்றத்தை உணர்வதாயில்லை. ஆதலால் உங்கள் தற்கொலையில் எதைச் சாதித்தீர்கள்? இவர்களை எதிர்கொண்டு போராடி வாழ்ந்திருக்கலாமே! உங்களுடன் இருந்த அந்த உயிர்காப்பாற்றப்பட்ட இருவர் இன்று குழந்தை குடும்பங்களுடன் நன்கு வாழ்கிறார்களே பெண்களே! ஏன் அத்தகைய துரித முடிவை எடுத்தீர்கள்? உங்கள் பெற்றோரும் ஒரு அநாவசிய குற்றச்சாட்டுகளுக்கு கூனி குறுகி வாழ வேண்டியதாகி விட்டதே!

தவறு செய்த ஊர்சனம் தன் குற்றத்திற்கு குறுகவில்லை! உங்கள் மரணத்தின் மூலம் குற்றமற்ற நீங்கள் ஏன் உங்களை குறுக்கிக் கொள்ள வேண்டும்.

No comments: