Saturday, May 2, 2020

வீட்டிலிருந்தே வேலை செய்தால்

கொரோனா காலத்தில்:

இப்ப நிறைய ஐடி மக்கள் வீட்டுலேர்ந்தே வேலை செய்கிறார்கள்.
1. மேனேஜர்ஸும் வீட்டிலேர்ந்தே மானிட்டர் பண்ணுகிறார்கள்!
2. புரொடக்‌ஷனில் அதிக நட்டமில்லை!
3. நீண்ட தொலைவு ஆபீஸ் பயணம் தேவையில்லை!
4. மதிய உணவு வீட்டுலேயே!
5. வேலை ஒட்டிய பயணங்கள் செலவுகள் ரத்து!
6. விதவித ஆடைகள் லாண்டரி செலவுகள் ரத்து

கொரோனா முடிந்த பின்:

ஐடி மக்கள் வீட்டுலேயே வேலையைத் தொடருங்க என்று வந்தால்:
1. பில்டிங் வாடகை, எலக்ட்ரிசிட்டி, நெட்வொர்க் செலவு மிச்சம்
2. போக்குவரத்து நெரிசல் குறையுது, தனியார் பஸ் தேவையில்லை
3. மதிய உணவு, டீ செலவு மிச்சம்
4. வொர்க்கர்ஸ் காம்பென்சேஷன் செலவு குறையும்

விளைவுகள்:

0. சம்பளம் குறையும்.
1. ஆபீஸ் ரியல் எஸ்டேட் காலி
2. தனியார் போக்குவரத்து வேலை போகுதல்
3. அலுவலகம் ஒட்டியுள்ள ரெஸ்டாரெண்ட்ஸ் பிசினஸ் காலி
4. வியாபார பயணங்கள், ஏர்லைன்ஸ், டாக்ஸி குறைஞ்சுரும்
5. ஆடை விற்கும் கடைகள், லாண்டரி காலி

மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்துல கொண்டு வந்து விட்டுரும் போலிருக்கே!

# அட கொரோனாவே!

No comments: