Saturday, May 2, 2020

நான் அறியா கிரகணம்

கிரகணம்

அம்மையின் வீட்டெதிரில் அழகிய பூங்காவொன்று
மரம் செடி வளர்ந்து தழைத்து பசுமையின் பசலை பூமி
காக்கை குருவி பருந்து என பலவித பறவைகளின் உறைவிடம்
பசுமையின் பணபலம் காற்றின் சுவாசத்தில் தரும்!

பறவை ஒலி கேட்காத நாளில்லை
விளையாட்டுச் சிறுவர்கள் புரளும் பூமி
கால்நடை பயிலும் மக்கள் திரள் மூட்டமது
இயற்கைச் சுவாசம் இனிக்கும் சூழலது!

கிரகணத்தில் நான் அறியா புதுமை கண்டேன் இன்று!

மேகமூட்டத்தில் முற்பகல் இருளைக் கண்டேன்
என்றும் உணராக் குளிரைக் கண்டேன்
பறவை ஒலி கண்டில்லை
சிறுவர் எவருமில்லை
மக்கள் நடமாட்டமில்லை
தனித்திருந்த பூங்காவாயிற்று!
பறவை ஒலி சிறுவர் சத்தம் எதுவுமில்லா பாலைவனமானது பூங்கா!

பதினொன்று இருபதுக்கு அனைத்தும் புத்துயிர் பெற்றது
பறவையை உறையில் அடைத்தவர் எவரோ
சூரிய ஒளி பட்டு அனைத்தும் கிசுகிசுக்கின்றன!
அடைத்து வைத்த சிறுவர் கூட்டம்
மடை திறந்த வெள்ளமாய் வந்தது!
புத்துயிர் பெற்றது பூங்கா!

இது நான் அறியா ஓர் கிரகணம்!
பெங்களூர் நகர கிரகத்தில் ஒரு கணம்!

No comments: