Saturday, May 2, 2020

விளக்கு ஏற்றி

சுதந்திர போராட்ட காலத்துல மக்கள், காந்தி எது சொன்னாலும் எந்த போராட்டம் அறிவிச்சாலும் அவர் பின்னாலேயே போனாங்க, செய்தார்கள், அடி வாங்கினாங்க, கடைசியில் வென்றார்கள்.

இன்றும் அதே நிலை. பெருவாரியான மக்களின் பலம் பின்னாடி நிக்குது.

21 நாள் அடைப்பு அறிவிப்பதற்கு முன் மக்கள் தன்னோடு நிற்பார்களான்னு அறிய ஒரு நாள் உள்ளிருப்பு அறிவிப்பு. தொடர்ந்து செயல்படுத்த முடிந்தது.

இப்ப மக்கள் அவதிப்படும் நேரத்தில், பிசினஸ் குறைந்து, ரெவின்யூ குறைந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

இந்திய மக்களின் அடிப்படை கிராமப்பொருளாதாரமும் ஆன்மீகமும் தான். இதை வைத்து அரசியல் செய்பவர்கள் பிழைக்க முடியும்.

இன்றைய விளக்கு ஏற்றலும் அதையொட்டி மக்கள் இன்னும் தன்னோடு நிற்கிறார்களா என்று அறிய ஒரு லித்மஸ் டெஸ்ட்.

பல்ஸ் பிடிச்சு பார்த்தாச்சு, இனி அடுத்த கட்ட நடவடிக்கையை தைரியமாக அறிவிக்க முடியும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையோடு வரும்!

ரெவின்யூ இல்லாத நேரத்தில் சம்பளம் கொடுப்பது எப்படி? பெருமளவில் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு, பென்ஷன் கட், வட்டி குறைப்பு, வங்கி மூடல், எலக்ட்ரிசிட்டி கட் எல்லாம் ஒரு சேர வரப்போகுது. வேறு வழியில்லை!

இவ்வளவு தூரம் துணைநிற்பவர்கள் அதற்கும் துணை நிற்பார்கள்.

No comments: