Friday, May 8, 2020

பிறர் போற்றும் பெரியோனை


பிறர் போற்றும் பெரியோனை
  தன் குடை கீழ் இறக்கினாலும்
பாடிச் சென்றவை பிச்சைப் பாத்திரங்களன்று!

கையில் ஏந்திய திருவோட்டில்
  விழுந்ததோ ஓரிரு மணிகள்
சொல்லில் விரிந்ததோ மலர்காவியங்கள்!

ஏந்திப் பிடித்தவனை இழித்தாலும்
  ஏந்திய பாத்திரம் அக்ஷயபாத்திரம்
ஒவ்வொரு பருக்கையும் வண்ண ஜீவிதங்கள்!

திருவோட்டில் விழுந்த மணிகள்
   ஒவ்வொன்றும் ராக கீதங்கள்
பசிப்பிணியாற இறைக்கும் உன்னதங்கள்!

அவரவர் வாழ்வில் ஏந்தும் திருவோடுகள்
  காலம் செல்லும் பாதையில் மறையும்
தியாகய்யனின் கீதங்கள் மறையா ஜீவன்கள்!

கையில் ஏந்துவோம் ஒரு திருவோடு
  அதில் விழும் மணிகளை எண்ணுவோம் பலரோடு
அவை ஒன்று கூட இணையாகாது ஆசானோடு!

தியாகய்யரின் திருவோட்டில் எனது பிச்சை இது!

No comments: