Saturday, May 2, 2020

எப்போது வேலைக்குத் திரும்ப

மாலை வாக்கிங் போகும் போது வழியில் கடந்த இரண்டு தேர்தல்களில் கூட வேலை பார்த்த உள்ளூர் பெண்மணியை இப்ப சந்தித்தேன்.

ரிடையர் ஆன பிறகு அருகிலுள்ள ஒரு பெரிய கடையில் வேலை செய்கிறார்கள். நாளை மட்டும் வேலைக்கு வா, அதற்கப்புறம் வேலை தொடர்ந்து வேலை கொடுக்க முடியுமான்னு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

வேலையிழந்தோர் நிதிக்கு சீக்கிரம் அப்ளை பண்ணுங்க, அது கிடைக்க வேற இரண்டு வாரம் ஆகலாம் என்றேன். ட்ரை பண்ண முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முற்றிலும் வேலை போன பிறகு வான்னு சொல்லியிருக்கிறார்கள்.

நியூயார்க்கில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் இருவருக்கும் வேலை போயிடுச்சாம். கஷ்டமான காலம், கார்டனிங் பண்ணி மனதை எளிதாக்கிகிறார்களாம்.

வருமானம் டக்குன்னு குறைவதை நினைச்சு கவலையாகச் சொன்னாங்க!

நாமெல்லாம் இதிலிருந்து சீக்கிரம் மீண்டு வரனும்ன்னேன்!

உடனே அவங்க! ஐயோ இப்ப வேண்டாம். முதல்ல வியாதிக்கு மருந்தும் தடுப்பூசியும் வரட்டும். அப்புறம் கதவைத் திறக்கட்டும்கிறாங்க! வீட்டுல இருந்தா பரவாயில்லை! கடைக்குள்ள வந்து போறவங்களை நேரடியாக சந்திப்பதில் உள்ள கலக்கம், நமக்கில்லைன்னாலும், எதிரில் வருபவனுக்கு இல்லைன்னு எப்படி தெரியும். கொஞ்சம் அடங்கட்டும்ன்னாங்க!

கஷ்டப்படறவங்க நேரில் தினமும் எதிர்கொள்பவர்கள் சொல்வது மிக நியாயமாக இருக்கு!

மருந்தும் தடுப்பூசியும் பரவலாக கிடைக்காத பட்சத்தில் எப்படி வெளியே இயல்பு வாழ்க்கை திரும்புமோ!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா இது!

No comments: