Tuesday, July 5, 2022

திருக்கடையூரில் சதாபிஷேகம்

80 வயது பூர்த்தியானவுடன் திருக்கடையூரில் சதாபிஷேகம் செய்து கொள்ள பலர் விரும்புவர். ஆனால் பல குடும்பங்களில் அதைச் செய்து கொள்ள அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். கிடைக்காமல் போனவர்களின் வருத்தங்களை நேரில் கேட்டுள்ளேன்.

இன்று ஒரு தம்பதியினர் தானே சென்று அங்கு செய்து கொள்ள முடிந்தது, அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் சிறப்பாக உறுதிபடுத்துகிறது. மனமார்ந்த வாழ்த்துகள்.

இதில் எவர் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும், அது ஒவ்வொரு குடும்பத்தினரின் தனிப்பட்ட குடும்ப நல்லது கெட்டது கஷ்ட நிலைகள். அதை மற்றவர் குறை காண்பது சரியல்ல.

திருக்கடையூரில் சதாபிஷேகம் நடத்துவதின் சிறப்பை சிறப்பாக நினைப்பவர்கள் அந்த தம்பதியனரை வாழ்த்துவதோடு நிறுத்திக் கொண்டால், இந்த நல்லநாளில் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

மற்றவரைக் குறை சொல்வதால் நம் நிலை உயர்வானதல்ல, உயரப்போவதுமில்லை. வாழ்த்துவதோடு நிற்பதால் மட்டுமே உயர்வான எண்ணத்தைக் கொடுக்க முடியும்.

திருக்கடையூரில் ஆசி பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Ochenta años!

No comments: