Tuesday, July 5, 2022

வசை பாடும் உலகில்

எப்போதும் எதையாவது வைத்து வசை பாடுபவர்கள் மத்தியில் புழங்கும் போது நாமும் அத்தகையவர்களின் வசைபாடலுக்கு இலக்காவது /இரையாகுவது மிகவும் எளிது.

நாமும் வசை பாடப்படும் பொருளே! என்றாவது ஒரு நாள் அதற்கு இரையாகத் தான் போகிறோம்.

நீதிநெறிகளை சிறுவயதிலிருந்தே போதித்தவர்கள் இந்த வசைபாடலும் இழிவான செயல் என்று மேலும் அழுத்தி போதி்த்திருக்க வேண்டும்.

எவரையும் ஜாதி, மத, இன, அரசியல் சார்பு, gender, வயது, நிறம் ஒட்டியெல்லாம் பிரித்துப்பேசுவது, ஓரங்கட்டுவது, வசை பாடுவதெல்லாம் எவர் செய்தாலும் வருந்தத்தக்கதே. இதைச் செய்ய விரும்பாமல் ஒதுங்கி இருப்பவர்களையும் வசைபாடுவதெல்லாம் அளவுக்கு மீறிய செயல்.

நான் எப்போதும் சொல்வது தான்: ஜனநாயக உரிமைகளை அத்துமீறி உபயோகிக்கும் போது எல்லோருடைய ஜனநாயக உரிமைகளும் பறிபோய் சர்வாதிகாரமும் எதேச்சாதிகாரம் மட்டுமே எஞ்சி நிற்கும். பொதுவெளியில் ஒதுங்கி நிற்கிற சூழ்நிலை ஏற்படும்.

இழப்பு அனைவருக்குமே!

இதை உணர்ந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Sé amable y amable!

No comments: