Thursday, April 22, 2021

தடுப்பூசி

 கடந்த பிப்ரவரி மாதம் அங்க தடுப்பூசி கிடைக்குமா இங்க கிடைக்குமான்னு எல்லா இடத்துலையும் நாங்க வீட்டுல எல்லோரும் தேடினோம். பிரையாரிட்டி லிஸ்ட்ல இருந்த என்னைக் கீழ வேற தள்ளிட்டாங்க! என்னய்யா பண்றதுன்னு தேடிகிட்டிருந்தோம்.

பையனுக்கு தான் இப்பவே மெடிக்கல் புரபசனல்ன்னு நினைப்பு வேற. அவன் முடிச்ச டெக்னீஷியன் கோர்ஸ் வச்சு ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்றேன், எனக்கும் கிடைச்சுரும் உனக்கும் கிடைச்சுரும்ன்னான். இரண்டு பேரும் ஒரு big no சொல்லிட்டோம். 17 வயசுல என்ன வேலை வேண்டிக்கிடக்கு, நீ அங்க வேலைக்குப் போனா, நாங்க வேலைக்கும் போக முடியாது, அம்மா வேலைக்குப் போயாவனும் கம்முனு இருன்னு அடக்கிட்டோம்.

பல ஹாஸ்பிடல் கிளினக்ல பெயர் ரிஜிஸ்டர் பண்ணினேன், வேலைக்காவல. எங்க கேட்டாலும் இப்ப உனக்குத் தரமுடியாதுன்னுட்டாங்க!

பையன் ஒரு அருமையான ஒரு பெரிய ஹாஸ்பிடலைக் கண்டுபிடிச்சு சொன்னான். போய் ரிஜிஸ்டர் பண்ணினோம். ஒரு நாள் மாலையில நாள் கடைசியில் அவங்க கூப்பிட, வேக வேகமாக ஒரு மணிநேரம் ட்ரைவ் பண்ணிப் போனோம், மாலை ஐந்து மணி வாக்கில் எங்களுக்கு கிடைச்சது, பையனுக்கு கிடைக்கல. அவனுக்கு இரண்டு வாரம் கழிச்சு நம்ம கோவில்ல கிடைச்சது. இப்ப எல்லோருக்கும் ஓபன் லிஸ்ட்ல கிடைக்குது.

இப்ப இது எதுக்கா? இருக்கு!

எங்கெல்லாம் முன்ன கேட்டேனோ, வாழ்க்கையில எந்தெந்த கிளினிக் ஆஸ்பத்திரி எல்லாம் போனேனோ, அங்கிருந்தெல்லாம் இப்ப கூப்பிட்டனுப்பறாங்க! வந்து தடுப்பூசி போட்டுக்கங்கிறாங்க!

இரண்டும் போட்டாச்சுய்யா, மூனாவதுக்கு ஆறு மாசம் கழிச்சு கூப்பிடுங்கப்பா! உடம்பு தாங்காது! போதும்யா இப்ப! ஆறு மாசம் கழிச்சு வர்றேன். அப்ப குத்து!

வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: